Thursday, March 31, 2011

கணிணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி

computer

எந்தவொரு உடல் உறுப்பும் ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ அல்லது அதிகப்படியான வேலையை செய்யும் போதோ பாதிப்பு ஏற்படுகிறது.
உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.
கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஓர் அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது.
அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது உள்ளங்கைகள் இரண்டையும் நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
அப்படி செய்யும் போது உள்ளங்கைகளை எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும். மேலும் இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும்.
அதாவது ஈரத் துணியை பின்பக்க கழுத்தில் போட்டு விட்டு சிறிது எண்ணெய்யை புருவங்களில் தடவி விட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும் போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும் ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.
புருவம் என்பது கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஓர் இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால் அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணணியில் இருந்து பெற்று வருகிறது.
எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால் எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும்.
அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

மொகாலி மைதானத்தில் தொழுகை நடத்தியது புனிதப் போராம்: பால்தாக்கரேயின் பிதற்றல்

Always-this-scene-Pakistan-Cricket-Team-Prayer-in-Mohali-Stadium
மும்பை: ‘பல் போனால் சொல் போச்சு’ என்றதொரு பழமொழி நம்ம ஊர்களில் புழக்கத்தில் உள்ளது. பல்லிழந்த கிழட்டு சிங்கமான பால்தாக்கரேக்கு சொல்  மட்டுமல்ல புத்தியும் பேதலித்துவிட்டதை அவ்வப்போது அவர் வெளியிடும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே பால்தாக்கரேக்கு இரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே எகிறும்.நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தை காண பாக்.அதிபர் மற்றும் பிரதமருக்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்திருந்தார்.
கடந்த 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு  இரு நாடுகளுக்கிடையேயான உறவில் ஏற்பட்டுள்ள இறுக்கத்தை தணிக்கக் கூடியது என பல தரப்பினரும் பிரதமரின் அழைப்பை பாராட்டினர்.இதையொட்டி இருநாடுகளின் உள்துறை அமைச்சர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சில முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பிரதமரின் அழைப்பை ஏற்று பாக்.பிரதமர் கிலானியும் இந்தியாவுக்கு வருகைத்தந்தார். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக அமைதியை விரும்பாத, மதவெறியை அடிக்கடி கிளறிவிடும் பால்தாக்கரே பாக்.வீரர்கள் பயிற்சியின் போது தொழுகை நேரத்தில் தங்களது மார்க்க கடமையை மைதானத்தில் நிறைவேற்றியதை இந்தியாவின் மீதான புனிதப்போர் பிரகடனம் என பிதற்றியுள்ளார்.
அவர்கள் தங்களது அறைகளில் சென்று தொழுகையை நடத்த வேண்டுமாம். தொழுகை என்பது உலக முஸ்லிம்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரங்களில் பின்பற்றும் ஒரு கட்டாய மார்க்கக் கடமை.அது ஒரு குறிப்பிட்ட தேசத்தின் அடையாளம் அல்ல என்ற அறிவு கூட பால்தாக்கரேக்கு இல்லை.
ஏவுகணைகளையும், பீரங்கிகளையும் மைதானத்தை சுற்றி நிறுத்தியது ஏன்? என கேள்வி எழுப்புகிறார் பால்தாக்கரே.இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் பால்தாக்கரேயின் உற்ற தோழர்களான ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டெல்லியிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு சென்ற சம்ஜோதா எக்ஸ்பிரஸில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வைத்த குண்டினால் பலியானது 68 உயிர்கள். அதில் பெரும்பாலோர் பாகிஸ்தானியர்கள். இவ்வேளையில் பாக்.பிரதமர் மற்றும் பாக்.கிரிக்கெட் வீரர்களை கொலை செய்ய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் எனக்கருதி அரசு இத்தகையதொரு பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். இதில் என்ன தவறு இருக்கிறது?
பாகிஸ்தான் பிரதமரையும்,அதிபரையும் கிரிக்கெட் போட்டியை காண பிரதமர் விடுத்த அழைப்பை கிண்டலடித்துள்ள பால்தாக்கரே, அப்சல் குருவையும், அஜ்மல் கசாப்பையும் போட்டியை காண அழைக்க வேண்டியதுதானே என கூறியுள்ளார்.
மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் 3000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான பால்தாக்கரே(நீதிபதி கிருஷ்ணா கமிஷன் அறிக்கையின்படி) அஜ்மல் கசாபையும், அப்பாவியான அப்சல் குருவையும் குறித்து பேச என்ன தகுதியிருக்கிறது?
முன்பு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மியாண்டட்டை கடுமையாக விமர்சித்த பால்தாக்கரே பின்னர் மியாண்டட் அவரை சந்தித்த பொழுது கூடிக்குலாவியதை இந்திய மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
 3000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான ஒரு பயங்கரவாதிக்கு இந்தியாவின் நீதிபீடம் உச்சபட்ச தண்டனையை அளித்திருந்தால் இம்மாதிரி பிதற்றும் சூழல் உருவாகியிருக்காது.

நன்றி : தூதுonlne

மேற்குவங்காளம்:1000 முஸ்லிம் கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் இல்லை

prog_slum
கொல்கத்தா:நீண்ட காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் 1000 முஸ்லிம் கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் இல்லை என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நேசனல் கவுன்சில் ஆஃப் அப்ளைட் எக்கணாமிக் ரிசர்ச்சின் முதன்மை அதிகாரி அபூ ஸலாஹ் ஷெரீஃப் நடத்திய ஆய்வில் மேற்கு வங்காள முஸ்லிம்களின் அவலநிலை சுட்டிக் காட்டப்படுகிறது.
3000 கிராமங்களில் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் கிடையாது. முஸ்லிம் கிராமங்களில் சமூக சூழல்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
முஸ்லிம் கிராமங்களை மையமாகக் கொண்ட பேருந்து நிறுத்தங்கள் இல்லை. முஸ்லிம்களின் வறுமை மாநிலத்தின் சராசரியை விட உயர்ந்த நிலையில் உள்ளது. இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக வறுமையில் உழலும் முஸ்லிம் கிராமங்களைக் கொண்ட மாநிலம் மேற்கு வங்காளமாகும்.
சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவர்களின் கல்வி உதவித் தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாநிலமும் மேற்கு வங்காளம்தான்.
மேற்குவங்காளத்தில் மிகவும் அதிகமான வழிப்பறிக் கொள்ளைகளால் பாதிக்கப்படுவதும் முஸ்லிம்களாவர். நகரங்களில் வழிப்பறி மற்றும் திருட்டினால் பாதிக்கப்படும் முஸ்லிம்களின் சதவீதம் 36 ஆகும்.
நகரங்களில் 35 சதவீத முஸ்லிம் பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

எஸ்.டி.பி.ஐ. மற்றும் ம.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு

sympol
எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர்களும், சின்னங்களும்
பாளையங்கோட்டை(ஷாஹுல் ஹமீது உஸ்மானீ ஆலிம்),கடையநல்லூர்(நெல்லை முபாரக்), இராமநாதபுரம்(ஃபெரோஸ்கான்), பூம்புகார்(முஹம்மத் தாரிக்), புதுவை-நிரவி திருப்பட்டினம்(பத்ருதீன்) ஆகிய தொகுதிகளுக்கு டி.வி. சின்னமும்

கோவை தொண்டாமுத்தூர்(உமர் கத்தாப்) தொகுதி வேட்பாளருக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும்.
சென்னை துறைமுகம்(முஹம்மத் ஹுஸைன்), திருப்பூர் தெற்கு(அமானுல்லாஹ்) ஆகிய தொகுதிகளுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ம.ம.க. சின்னம்
சேப்பாக்கம்(தமீமுன் அன்சாரி), ஆம்பூர்(அஸ்லம் பாஷா) மற்றும் இராமநாதபுரம்(ஜவாஹிருல்லாஹ்) தொகுதிகளில் போட்டியிடும் ம.ம.க.  வேட்பாளர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Wednesday, March 30, 2011

சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க முயற்சி!

முஸ்லிம்கள் முறியடிப்பு!! by கூத்தாநல்லூர் முஸ்லீம் under Chennai, Masjid, pfi, SDPI               சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் இன்று தகர்க்க ம...ுயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். MUTHUPET.A. AlAmeen     7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக அன்பளிப்பாக அளித்தார். அன்றிலிருந்து அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அங்கே தொழுது வந்தனர்.   இதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் அடித்தளமும், இரண்டாவது மாடியும், மூன்றாவது மாடியும் சி.ஓ.எஸ். என்ற அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளையைச் சார்ந்தவர் தன் மனைவி வள்ளி என்பவரின் பெயரில் ஒரு நிதிக் கம்பெனியை முதல் மாடியில் தொழுகை நடக்கும் இடத்தில் துவக்க திட்டமிட்டார்.அந்த இடத்திற்குப் பதிலாக அடித்தளத்தில் ஒரு இடத்தை முஸ்லிம்கள் தொழுவதற்காகத் தருவதாகச் சொன்னார்.   முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வழக்கறிஞர்கள் போர்வையில் வந்த சில குண்டர்கள் இன்று மஸ்ஜிதின் வாசலை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். மஸ்ஜிதின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்தனர். அருகிலுள்ள கடை வியாபாரிகள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வந்த காவல்துறையினரோ அந்தக் குண்டர்களுக்குப் பாதுகாப்பு தந்தனர்.   செய்தியைக் கேள்விப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந் சகோதரர்கள் உடனே சம்பவ இடத்தில் ஒன்று கூடினர். ஆனால் நிறைய முஸ்லிம்கள் அங்கே கூடி நின்று குண்டர்கள் பட்டப் பகலில் மஸ்ஜிதின் அடையாளங்களைத் தகர்த்துக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சுற்றி காவல்துறையினரும் ஒன்றும் செய்யாமல் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரிலேயே இந்த அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.   களத்தில் புகுந்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் உடனே அந்தக் குண்டர்களைத் தடுத்து நிறுத்தி,காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.   பின்னர் இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாக சாலை மறியலில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். அதன்பின் ளுஹர் தொழுகையை சாலையின் நடுவிலேயே தொழுதனர்.பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மாவட்டச் செயலாளர் ஷாஹித் என்பவரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆலம் என்பவரும் இந்தச் சமூக விரோதிகளுக்கெதிராக காவல்துறையிடம் புகார் மனு தாக்கல் செய்தனர்.   இந்த அக்கிரமத்திற்குப் பொறுப்புடைய அத்தனை பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tuesday, March 29, 2011

நீங்கள் குண்டானவரா இல்லையா என்பதை அறிய…..

stomach measure

உங்களின் உயரத்தையும் எடையையும் முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு உங்கள் உயரம் 167செ.மீ. எனவும், எடை 60 கிலோ எனவும் இருக்குமானால், செ.மீற்றரில் இருக்கும் உங்கள் உயரத்தை மீற்றராக மாற்றினால் 167 X100 = 1.67  என்று வரும். இதை 60-1.67×1.67 = 21.58 என்று வரும்.
20 தொடக்கம் 25 வரை வந்தால் நீங்கள் சாதாரண எடை கொண்டவர்
25 தொடக்கம் 28 வரை வந்தால் நீங்கள் ஓவர் வெயிட் உடையவர்
28க்கு மேல் இருந்தால் சொல்லவே தேவையில்லை – மிகவும் ஓவர் வெயிட் ஆனவர்.
உடல் எடை அதிகரிக்க காரணங்கள் என்னவெனில்,
அறியாமை :- எந்த உணவை எப்படி சாப்பிடுவது, சாப்பாட்டில் எது அதிகமாக , எது குறைவாக இருக்கவேண்டும் என்பது தெரியாமல் எந்தநேரமும் அளவில்லாமல் சாப்பிடவதால் எடை அதிகரிக்கும்.
பாட்டி வைத்தியத்தை மறந்த நிலை :- பிரசவமான பின் பெண்கள், பாட்டியின் பத்தியக்குழம்புகளை இன்று சாப்பிடுவதில்லை. வயிற்றை இறுக்கக் கட்டுவதில்லை. சத்தான உணவுகளையும் சாப்பிடுவதில்லை, இதனாலும் உடல் எடை அதிகரிக்கின்றது.
மருந்துகளின் பக்கவிளைவு :- வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளுவதாலும் பக்க விளைவுகளினால் அவதிப்படுவதோடு உடல் எடையும் அதிகரிக்கும்.
தைரொய்ட் :- உடலில் தைரொய்ட் சுரப்பு அதிகமாக இருந்தாலும் உடல் எடை கூடும். மற்ற நோய்கள் ஏதும் இருந்தாலும், மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வதால் எடை கூடும்.
எனவே உங்கள் உயரத்தினையும் எடையினையும் அளந்து பார்த்து நீங்கள் குண்டானவரா என்பதை முதலில் அறிந்துகொண்டு அதற்கேற்ப உங்கள் சாப்பாட்டு நடைமுறையை வரையறுத்துக்கொண்டால் நீங்களும் அழகு தான்.

SDPI மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி பேட்டி

SDPI மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி பேட்டி
1 Comments - 29 Mar 2011
This Blog
Linked From Here
My Favs
This Blog
 
 
 
 
 
My Favs
 
 
 

224 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கும், 2 தொகுதிகளில் ம.ம.க.-விற்கும் எஸ்.டி.பி.ஐ. ஆதரவு

 

sdpi flag
சென்னை:சோசியல் டெமோக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடாத மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில் கூறியிருப்பதாவது;  “தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகள் போக எஞ்சியுள்ள தொகுதிகளில் திமுக கூட்டணிக்கும், சேப்பாக்கம் மற்றும் ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அறந்தாங்கி தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ. தனது ஆதரவை தெரிவிக்கிறது.” என்றார்.
மேலும் எஸ்.டி.பி.ஐ. ஆதரிக்கும் இக்கட்சியின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுமாறு பொதுமக்களுக்கும்,கட்சியின் தொண்டர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்

oil.
இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய் தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.
உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.
குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் வருகிறது.
இதய நோய்க்கு எண்ணைய் தான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.
எனவே எண்ணைய் இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதய நோய் இருப்பவர் மட்டுமல்ல ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட எண்ணைய் பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது ஒவ்வொரு உணவிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலமாகவும் குறைக்க முடியும். பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

Monday, March 28, 2011

இரண்டு தொகுதிகளில் SDPIன் வேட்பாளர்களின் மனு தள்ளுபடி

இராமநாதபுரம் மற்றும் துறைமுகத்தில் இரண்டு அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரத்தில் அப்துல் ஹமீத் மற்றும் துறைமுகத்தில் அமீர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு பிரச்சாரமும் செய்து வந்த நிலையில் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தொகுதிகளிலும் மாற்று வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் செய்திக் குழு - 2011
அதிரை எக்ஸ்பிரஸ்

பாரபட்சத்தி​ன் நேரடி காட்சிகள் -​ கொல்கத்தாவி​ன் தில்குஷா காலனி முஸ்லிம்கள்

 

dilkusha-kol
கொல்கத்தா:தில்குஷா காலனியில் வசிக்கும் ஆயிஷா பீவிக்கு 4 பிள்ளைகள். அவர்களில் 3 பேர் பெண்கள். தெருக்களில் செருப்புகளை பொறுக்கி அதிலிருந்து தோலை பிரித்தெடுப்பதுதான் அவர்களின் பணி. இரவு பகலாக உழைத்தாலும் ஒரு நாளைக்கு கிடைப்பதோ அறுபது ரூபாய் மட்டுமே.ஷீட்டுகளால் மறைக்கப்பட்டதுதான் அவர்களது வீடு.
தலித்துகளை விட மோசமான வாழ்க்கை சூழலுக்கு சொந்தக்காரர்கள் என சச்சார் கமிட்டியால் அழைக்கப்பட்ட, புழுக்களைப் போல் வாழ்க்கையை கழிக்கும் முஸ்லிம்களை காண்பதற்கு கொல்கத்தாவிலிருந்து 200 கி.மீ தொலைவிலுள்ள முர்ஷிதாபாத்துக்கு செல்ல தேவையில்லை.
மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் பார்க் சர்க்கஸின் முஸ்லிம் தெருக்களுக்கு அப்பால் வாருங்கள். அதுதான் தில்குஷா காலனி.
பெயரைப் போல அழகானதல்ல அக்காலனியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை. ஷீட்டுகளால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள். அதற்கு உள்ளே புழுக்களைப் போல பல மனிதர்கள். 500 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர். ஒரு குடும்பத்தை தவிர அனைவரும் இக்காலனியில் முஸ்லிம்களாவர்.
காலனியில் குடிநீர் இல்லை. மின்சாரமும் இல்லை. குப்பைகளை பொறுக்குவதுதான் இக்குடும்பங்களில் ஒரு பிரிவினரின் பணி. வேறு சிலரோ தையல் வேலைப் பார்க்கின்றனர். கடினமாக உழைத்தாலும் 50 ரூபாய்தான் ஒருநாளைக்கு கிடைக்கிறது.
இக்காலனியைப் பொறுத்தவரை சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்தாம் பணக்காரர். அவர்களுக்கு சில தினங்களில் 100 ரூபாய் வரை கிடைக்கும். காலனியில் வசிக்கும் குழந்தைகளில் 5 சதவீதம்பேர் கூட பள்ளிக்கூடம் செல்வதில்லை. ஐந்தாம் வகுப்புதான் இக்காலனியில் உயர்ந்த கல்வி.
தில்குஷா காலனியில் வசிக்கும் ஒரேயொரு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் சிறந்த கல்வியை அளிக்கும் கிறிஸ்தவ மிஷினரி பள்ளிக்கூடத்தில் பயில்கின்றனர். அக்குடும்பத்தின் மூத்த பெண்ணிற்கு கிறிஸ்தவ நிறுவனத்தில் வேலை. முஸ்லிம்களுக்கோ ஒன்றுமில்லை.
காலனியில் இரண்டு வீடுகளுக்கிடையேயான தூரம் நான்கு இஞ்ச் மட்டுமே. இரண்டு வீடுகளுக்கு ஒரே ஷீட்டை சுவராக மாற்றியவர்களும் உண்டு. கழிவு நீர் வீடுகளின் முன்னால் ஓடுகிறது. ஆனாலும்,இந்த அசெளகரியங்களை காசாக மாற்றுவது அரசுக்கு கைவந்த கலையாகும்.
அரசு காலனியையொட்டி காசு கொடுத்து உபயோகிக்கும் கழிவறைகளை கட்டியுள்ளது. காலனிவாசிகளுக்கு தங்களுக்கு கிடைக்கும் அற்ப வருமானத்தில் ஒரு பகுதியை செலுத்தி இதனை பயன்படுத்துகின்றனர்.
வீடுகளுக்கு இடையே அமைந்துள்ள பொதுவழிக்கு ஒரு மீட்டர் கூட அகலம் இல்லை. காலனியில் பாதிபேருக்கு ரேசன் கார்டு கிடையாது. ஆனால், அனைவருக்கும் வாக்காளர் அட்டை உண்டு. தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் கட்சியினர்  இங்கு வருவர். காலனியை காலிச் செய்துவிடுவோம் என மிரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க நிர்பந்திக்கிறது. இல்லாவிட்டால், சட்டத்திற்கு புறம்பாக வங்காளதேசத்திலிருந்து குடியேறியவர்கள் என முத்திரைக்குத்தி சிறையிலடைத்துவிடுவோம் என அச்சுறுத்துகின்றனர்.
தெருவில் நேராக நடந்தால் தில்குஷா காலனியை விட மோசமான இன்னொரு காலனி உண்டு. அதன் பெயர் டாலாவாடா. இங்கு வசிப்பவர்களும் முஸ்லிம்களே. ராஜாபஸார், ஃபுல்வகன், பனியபுக்கூர், தோப்ஸியா உள்பட கொல்கத்தாவில் மிகவும் அருவருப்பான காலனிகளில் வசிப்பவர்களும் முஸ்லிம்களே.
இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட முஸ்லிம்களின் வாரிசுகள் இன்று இரண்டாந்தர குடிமக்களாகவும், வாக்கு வங்கிகளாகவும் நடத்தப்படக்கூடிய சூழலில் முஸ்லிம் சமுதாயம் எப்பொழுதுமே பிறரிடம் கையேந்தி நிற்கும் சூழலை மாற்றிவிட்டு சுயமாக பலம்பெற்று இந்திய தேசத்தின் அதிகார மையங்களில் பங்கேற்கும் வரை இம்மாதிரியான அநீதிகள் ஒழியாது என்பதுதான் உண்மை.

வாழைத் தண்டு,வாழைப் பூ மருத்துவ பண்புகள்


 

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது ன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
வாழைப் பூ

வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள்.
அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘
வாழைப் பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால்மூலநோயில் உதிரம் கொட்டுவதை நிறுத்தும்; கரியமில வாயுவையோட்டும்’ என்று தேரையர் பதார்த்த குண சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?
ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் லம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதுடன் செயலிலும் இறங்கவேண்டும்.
நாம் உணவை உண்ணும்போது, எந்த உணவாக இருந்தாலும், அவசரம் இல்லாமல் நன்றாக மென்று விழுங்கப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். “நொறுங்கத் தின்று நூறு வயதிரு” என்பது துரையார் வாக்கு.
உடலுக்கு வேண்டிய தாவர, காய்கறி வகைகளின் சத்தை வீணாக்காமல் சமைத்துச் சாப்பிடப் பழக வேண்டும். சத்தை வீணாக்காமல் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.
நன்றி: SEEN.

அல்அமீன் பள்ளிக்கு தேமுதிக ஆதரவு


நேற்று அதிரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அல் அமீன் பள்ளி விவகாரத்தை சுமூகமாக முடித்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் ஆடியோ.


மந்த நிலையில் விசாரணை – சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்கள்

prisoner_8
கொச்சி:சிமி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களின் சிறைவாசம் மூன்று ஆண்டுகளை தாண்டிவிட்டது.
கடந்த 2008 மார்ச் 26-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்தது. இவர்களை கைது செய்த பிறகு ஐந்து மாநிலங்களில் ஏராளமான வழக்குகளில் இவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டார்கள்.
இவர்களை கைது செய்த பிறகு நடந்த குண்டுவெடிப்பு வழக்குகளிலும் குற்றவாளிகளாக சேர்த்தனர். பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட கேரளாவை சார்ந்த 5 பேர் உள்பட 66 பேர் சபர்மதி சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சார்ந்த ஒருநபர் குல்பர்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட கர்நாடகா மாநிலம் ஹுப்ளி வழக்கில் நான்கு மாதங்களில் 12 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் மொத்தம் 351 சாட்சிகள் உள்ளனர்.
கடந்த 23,24 தேதிகளில் கடைசி சாட்சி விசாரணை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 23-ஆம் தேதி ஹோலிப் பண்டிகை விடுமுறை தினமானதால் விசாரணை நடைபெறவில்லை. 24-ஆம் தேதி ஆஜராக வேண்டிய சாட்சிகளுக்கு சம்மன் கூட கிடைக்கவில்லை.
இதன் காரணமாக 24-ஆம் தேதி ஒருவர் மட்டுமே விசாரிக்கப்பட்டார். கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் கழிந்த பிறகு, 2008 மே மாதம் பதிவுச் செய்யப்பட்ட ஹூப்ளி வழக்கில் இளைஞர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது.
இவ்வழக்கில் 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்திலுள்ள வழக்குகளை அம்மாநிலத்திற்கு வெளியே வைத்து விசாரிக்க வேண்டுமென இளைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவின் மீதான எதிர்தரப்பு வாதம் கடந்த 8-ஆம் தேதி பூர்த்தியானது.
குஜராத் அரசின் வாதம் 10-ஆம் தேதி நிர்ணயித்திருந்த போதும் 29-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
குஜராத் வழக்கு விசாரணை முடியாமல் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடைச் செய்யும் சட்டமும் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதால் இதர மாநிலங்களிலுள்ள வழக்குகள் கால வரையில்லாமல் நீளுகின்றன. இதன்மூலம் ஹூப்ளி வழக்கில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பான 20 வழக்குகளும், சூரத்தில் 13 வழக்குகளும் இவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது. அஹ்மதாபாத், சூரத் வழக்குகளில் ஒரேயொரு வழக்கில் மட்டுமே இதுவரை குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சார்ந்த சகோதரர்களான ஷாதுலி, ஷிப்லி, அன்ஸார் நத்வி ஆகியோர் உள்பட 17 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்தூர் வழக்கில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் அமைப்பை ஏற்படுத்த தீர்மானித்திருந்த பொழுதிலும் அதுத் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியாகவில்லை. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராகி பல மாதங்கள் கழிந்த பிறகும் குற்றஞ்சாட்டப்பட்டோரின் பட்டியல் பிரிக்கப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது.
இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு பேரை மட்டுமே குற்றப்பத்திரிகையை வாசித்து காண்பித்து தொடர் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.
கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்களை இந்தூரிலிருந்து கைது செய்திருந்தாலும், பின்னர் பல்வேறு மாநிலங்களிடம் ஒப்படைத்தது மூலமாக இவ்வழக்கை நடத்துவது காலவரையற்று நீளுகிறது. இவ்வழக்கில் விசாரணையை விரைவில் பூர்த்தியாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தூரில் வழக்கு விசாரணையின் நேர் எதிராக கர்நாடகாவில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அங்கு குற்றஞ்சாட்டப்பட்டோரெல்லாம் சிறையில் உள்ளதால் குற்றஞ்சாட்டப்பட்டோரின் பட்டியலை பிரிக்க முடியாது எனக்கூறி வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் விசாரணைத் துவங்கியது.
கேரளாவைச் சார்ந்த ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் உள்பட 43 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வாகமன் வழக்கில் கடந்த 24-ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தாலும் மாநிலத்திற்கு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற சட்டப் பிரிவின் மூலம் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களை ஆஜர்படுத்த இயலவில்லை. மே 13-ஆம் தேதி இவர்களை ஆஜர்படுத்த மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Sunday, March 27, 2011

கடாஃபியைக் கொல்லும் திட்டம் இல்லை: ஒபாமா

"லிபியா அதிபர் கடாஃபியைக் கொலை செய்யும்  திட்டம் எதுவும் அமெரிக்க ராணுவத்துக்கு இல்லை" என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்தத்  தகவலை உள்நாட்டு புலனாய்வுக் குழுவின் உறுப்பினர்   ரோபெர்ஸ் பெர்ஜெர் என்னும் அதிகாரி "பொலிடிகோ" பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். 

லிபியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட 13 நாடுகள் ஈடுபட்டுள்ளன. நேட்டோ படைகளின் தாக்குதலில் பொதுமக்களில் 15 பேர் கொல்லப்பட்டதாக லிபிய அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கடாஃபியைக் கொல்லும் திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியா-சவூதி ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது: ஹஜ் ஒதுக்கீடு அதிகரிக்க முயலுவோம் – எஸ்.எம்.கிருஷ்ணா

 

SAM_1594-300x225
ஜித்தா:சவூதி அரேபியாவுடன் இந்தியா ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும்,சவூதி அரேபியா ஹஜ் துறை அமைச்சர் ஃபுவாத் அல்ஃபாரிஸியும் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தியாவிலிருந்து ஹஜ் செல்வதற்காக விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் ஹஜ் ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டுமென சவூதி அரேபியா அரசிடம் வேண்டுகோள் விடுத்ததாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
ஒதுக்கீடு அதிகரிப்பதுக் குறித்து அனுபவரீதியாக பரிசீலிப்போம் என சவூதி ஹஜ் துறை அமைச்சர் உறுதியளித்ததாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக இந்தியாவிலிருந்து ஒரு கேபினட் அமைச்சர் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சவூதி அரேபியாவுக்கு வருகைத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாஜிகளுக்கு உதவுவதற்காக,இந்தியாவிலிருந்து வருகை தரும் சேவைத் தொண்டர்கள் (வாலண்டியர்ஸ்) குறித்து புகார்கள் எழுந்துள்ள சூழலில், அனுபம் வாய்ந்த சவூதி அரேபியாவிலுள்ள இந்தியர்களை சேவைத் தொண்டர்களாக நியமிக்கலாமே? என எழுப்பிய கேள்விக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதிலளிக்கையில், சேவைத் தொண்டர்களை நியமிக்கும் விவகாரத்தில் மாநில ஹஜ் கமிட்டிகள்தாம் முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
இவ்வருடம் முக்கிய நகரங்களில் சேவைத் தொண்டர்களுக்கும், ஹாஜிகளுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். ஹஜ் நல்லிணக்க குழு அனுப்புவதால் அரசுக்கு பெருந்தொகை செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டாலும்,இந்தியா-சவூதி அரேபியாவுக்கிடையேயான நட்புறவு மேம்படுத்துவதற்கு இது பெரிதும் துணைபுரிவதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
இந்திய தூதரக அதிகாரி ஸஈத் அஹ்மத் பாபா,ஹஜ் தூதரக அதிகாரி பி.எஸ்.முபாரக், வெல்ஃபெயர் தூதரக அதிகாரி எஸ்.டி.மூர்த்தி ஆகியோரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

 

brain
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான  ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது.  இதுவும்    மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை          பாதிப்படையும்.
6. தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப்    பாதிக்கிறது.
8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான         உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Saturday, March 26, 2011

தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்

 

fruits
சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன.
அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.
பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும் அகற்றி விடுகிறீர்கள்.
காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீ­ரில் அலசுவது நல்லது தான். ஆனால் அதுவே அதிகமாகி விட வேண்டாம். அப்படிச் செய்தால் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும்.
காய்கறிகளை தண்­ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்­ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன் சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.
உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத் தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லது தான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது.
நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும் போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்

நன்றி  : தூது online

அதிரையில் மழை


Posted: 25 Mar 2011 07:33 AM PDT

அதிரையில் காலை 07-00 மணி முதலே வெயில் கொளுத்த ஆரம்பித்தது. இன்று அதிகபட்சமாக 33 டிகிரி கொளுத்தியது. இதனால் மக்கள் சோர்வடைந்து காணபட்டார்கள். மாலை 3.30 மணியளவில் மேகம் மூட்டமாக காணப்பட்டது. பின் ஒரு 15 நிமிடம் மழை பெய்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 15 நிமிடம் பெய்த மழை 0.3mm ஆக பதிவானது. நடுத்தெரு முக்கத்தில் வெட்டி பேச்சு பேசுவது  மழையால் தாமதமாகவே தொடங்கியது என்பது குறிபிடத்தக்கது.    

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?


உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.
உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு:
உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு:
மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.
புளிப்பு:
உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
காரம்:
பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.
கசப்பு:
பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:
அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.
எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.
உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.
நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.
‘உண்பது நாழி’ என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.
நன்றி:உங்களுக்காக
Mohammad Sultan

Friday, March 25, 2011

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!


அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!




வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
அதென்ன அல்சர்?
நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.
அல்சர் ஏன் வருது?
முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது....
சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.
ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.
அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!
மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.
எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு  ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.
அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்...
நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.
நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது! -முகம்மது சுல்தான்
நன்றி: உங்களுக்காக 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முக்கிய அறிவிப்பு

தற்போது நடைமுறையில் உள்ள 15 நாள் கணக்கீடு 15 நாள் வசூல் என்ற முறை மாற்றப்பட்டு வரும் 01.04.2011 முதல் மாதம் முழுவதும் கணக்கீடு மற்றும் மாதம் முழுவதும் வசூல் பணி நடைபெறும் என்று மின் நுகர்வோர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கட்டாத நபரின் மின் இணைப்பை 16 ஆம் துண்டிப்பு செய்யும் முறைக்குப் பதிலாக மின் அளவீடு எடுத்த தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாத நபரின் மின் இணைப்பு 21ஆம் நாள் துண்டிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மீட்டரின் வெள்ளை அட்டையை மின் பயன்பாட்டை குறிப்பதற்கு வசதியாக மீட்டர் அருகிலேயே வைத்துக் கொள்ளும்படி மின் நுகர்வோர்கள் கேட்டுக் கொள்ள ப்படுகிறார்கள். வெள்ளை அட்டை தேவையனில் அருகில் உள்ள மின்சார அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளும்படி அனைத்து மின் நுகர்வோர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின் அளவீடு எடுத்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். என்றும், தவறினால் 21ஆம் நாள் மின் துண்டிப்பு செய்யப்படும்  என்றும், மீண்டும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. திருச்சி மண்டலத்தில் எந்த அலுவலகத்தில் வேண்டுமானாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் "INTERNET BANKING " மூலம்  கட்டணம் செலுத்தலாம் என்றும் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு :

அமேஜான் வாட்டர் பியூரிபியர் நிறுவனத்தாரால்" INTERNET BANKING "  மூலம் மின் கட்டணம் கட்டித்தரப்படும். உங்களுடைய மின் இணைப்பு என்னை அனுப்பினால் போதும்.மேலும் விபரங்களுக்கு இந்த தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும். +91 9994509779

இப்படிக்கு
    
அமேஜான் வாட்டர் பியூரிபியர்.

Thursday, March 24, 2011

முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத்தல்

"மாநில சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும்  முஸ்லீம்களுக்கென்று  தனி இடஒதுக்கீடு செய்யப்படவேண்டும்"  என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்  மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, இன்று நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் முலாயம் பேசுகையில்,

"மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. 14 முக்கிய மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம். இந்த நிலை மாற வேண்டுமானால், மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்." என்று கருத்து பதித்துள்ளார்.

Wednesday, March 23, 2011

SDPI முஸ்லிம்களின் கட்சியா? ஒரு விளக்கம்

SDPI என்ற சோஷ;ியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சியல்ல. முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் போன்ற பிற்படுத்தப்பட்ட, நீதி மறுக்கப்படும் அனைத்து சமுதாயத்தவர்களுக்குமான தேசிய அளவிலான கட்சி. இந்தியாவில் 16 மாநிலங்களில் இது தன் கிளைகளைப் பரப்பி துடிப்புடன் செயல்பட்டு வருகின்றது.

இராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் SDPI கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் SDPI இப்பொழுதுதான் காலூன்றி வருகின்றது. மாவட்டப் பொறுப்புகளில் நிறைய முஸ்லிமல்லாதார் இருக்கின்றனர். வேட்பாளர்களாக அறிவிக்கக்கூடிய அளவுக்கு யாரும் இன்னும் வளரவில்லை.

ஆனால் கேரளாவில் மாநிலப் பொதுச்செயலாளர், மாநிலத் துணைத் தலைவர் முதற்கொண்டு பல பொறுப்புகளில் முஸ்லிமல்லாதார் இருக்கின்றனர். கேரளாவில் SDPI 98 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றது. இதில் சில தொகுதிகளில் முஸ்லிமல்லாதார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எக்காலத்திலும் முஸ்லிம் வாக்கு வங்கியைப் பிளவுபடுத்துவது SDPIன் நோச்கமல்ல. மாறாக, முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் போன்ற பிற்படுத்தப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட சமுதாயங்களை ஒருங்கிணைத்து, சக்திப்படுத்துவதே SDPIன் நோக்கம்.

இதுநாள் வரை முஸ்லிம்கள் செய்து வந்த எதிர்மறையான அரசியலை (Negative Politics) தவிர்த்து, உடன்பாடான அரசியலை (Positive Politics) SDPI கையில் எடுத்துள்ளது. அத்தோடு SDPIன் அரசியல் வழிமுறை போராட்ட அரசியல் (Agitative Politics) வழிமுறையாகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, சமஉரிமை, இடஒதுக்கீடு என்று அனைத்துத் தேவைகளும் போராடாமல் கிடைக்காது. எனவே SDPI அந்த வழிமுறையைக் கையில் எடுத்துள்ளது.

நன்றி  : Sheik MPM

SDPI மேலும் இரண்டு இடங்களில் தனித்துப் போட்டி

4010852189
சென்னை:தமிழக சட்டமன்றத் தேர்தலில் சோஷியல் டெமோக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா(SDPI)  5 இடங்களில் தனித்துப் போட்டியிடும் நிலையில் மேலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி திருப்பூர் தெற்கு மற்றும் பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளில் SDPI போட்டியிடுகிறது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் அமானுல்லாஹ், மற்றும்  பாளையங்கோட்டை தொகுதியில் சாகுல் ஆலீம் ஆகியோர் SDPI-யின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

Tuesday, March 22, 2011

திருக்குர்ஆன் பிரதியை எரித்த வெறிப்பிடித்த அமெரிக்க கிறிஸ்தவ போதகர்

 

photo_1300683495959-1-0
வாஷிங்டன்:அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் டோவ் அவுட்ரீ செண்டர் இவான்செலிகல் சர்ச்சின் உறுப்பினரான ஸேப் என்பவன் புனித திருக்குர்ஆனுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதன் பிரதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை எரித்துள்ளான்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்று இரட்டைத் தாக்குதல் நினைவு தினத்தில் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக இதே டோவ் அவுட்ரீச் செண்டரின் உறுப்பினரான டெர்ரி ஜோன்ஸ் அறிவித்தது உலக முழுவதும் வாழும் முஸ்லிம்கள் மத்தியி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் டெர்ரி ஜோன்ஸின் விஷத்தை உமிழும் கருத்திற்கெதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பெண்டகனின் உயர் அதிகாரி ஆகியோர் தலையிட்டு டெர்ரி ஜோன்ஸிற்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து அம்முயற்சியை கைவிட்டான் டெர்ரி ஜோன்ஸ்.இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்குர்ஆன் பிரதியை எரித்ததாக ஸேப் அறிவித்துள்ளான்.

கடையநல்லூர் தொகுதியில் SDPI வேட்பு மனு தாக்கல்


முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், SDPIன் மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி SDPI தனித்துப் போட்டியிட முடிவெடுத்தது. மேலும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியைப் பொறுத்தவரைக்கும் வெற்றி-தோல்வியைக் குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான 
முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துகள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனைக் கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சி. அதன் அடிபடையில்
SDPI தமிழ்நாட்டில் குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஆறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். ஆறு தொகுதிகளில் ஒரு தொகுதியான நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நெல்லை முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி வேட்புமனு தாக்கல் முதல் நாளான நேற்று ஜங்ஷன் பள்ளியில் இருந்து ஊர்வலமாக வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த போது
அப்பொழுது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது: நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தடுக்கப்பட்டால் கடையநல்லூரில் நீண்ட நாளாக தீர்க்கப்படாமல் இருக்கும் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைப்பேன். கடையநல்லூரை வேலைவாய்ப்பு மிக்க நகரமாக மாற்றுவேன். பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கு முயற்சி எடுப்பேன். மேலும் தொகுதி மக்களின் தோளோடு தோளாக நின்று அவர்களின் எந்தப் பிரச்னை என்றாலும் உடனடியாக தீர்த்து வைப்பேன்எனக் கூறினார்.

இஸ்லாமிய தொலைக்காட்ச்சிக்கு தடை.

சன் குழுமத்தின் அராஜாகம் !!!ஸ்லாமிய சமுதாய மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முத்தாய்பாய் மூன் தொலைக்காட்ச்சி முளைத்தது !

இது ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கும் மேலாக 75% இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும் 25 %ஏனைய நிகழ்சிகளையும் ஒளிப்பரப்பி வருகிறது.காலையில் சிறுவருக்கான குர் ஆன் வகுப்பு ,பயான், என ஏனைய நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஆமாம் சகோதர்களே.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாய செல்வந்தர்கள் சிலரின் சீரிய முயற்ச்சியினால் சென்னை நுங்கம்பாகத்தை தலைமையிடமாக கொண்டு தனது துல்லிய ஒளிப்பரப்பை வழங்கி வருகிறது .

இது தற்பொழுது ஒரு சில இஸ்லாமியர்கள் பெரும்பாலாக வசிக்கும் பகுதிகளில் நேயர்களின் நீண்டகால கோரிகைக்குபின் கேபிள் ஆபரேட்டர்கள் மேற்கண்ட சமூதாய தொலைக்கட்ச்சியை ஒளிப்பரப்பி வருகிறார்கள் .

ஆனால்
சென்னையை பொருத்தமட்டில் கேபிள் / DTH ஒளிப்பரப்பை தன்வசப்படுத்துகொண்ட சன் குழுமம் நமது மூன் தொலைக்காட்ச்சி ஒளிப்பரப்பிற்கு தடையாக உள்ளது .

இந்த தொலைகாட்சி நிர்வாகிகள்" டன் டனா டன்னிடம்" விளக்கம் கேட்டால் இந்த தொலைக்காட்ச்சி ஒளிப்பரப்பை கேபிளில் செய்ய கட்டனாமாக7 கோடி வரையிலும் பேரம் பேசி கலட்டிவிடுவதிலேயே முனைப்பு காட்டிவருகிறது சன் குழுமம் .

இன்றைய மீடியாக்கள் தொல்லை காட்ச்சிகளாகவே வழங்கி வரும் மற்ற சேன்னல்களுக்கு மத்தியில் நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் இது போன்ற தொலைகாட்ச்சிகளின் ஒலிப்பரப்பிற்கு சமுதாய அமைப்புகள் குரல் கொடுத்திட முன் வரவேண்டும் .

முஸ்லிம்களுக்கு நோ சீட் : ராமதாஸ் உருவ பொம்மை எரிக்க முயன்றவர்கள் கைது!

பா ம க-வுக்கு  ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படாததால்   பா.ம.க நிறுவனர்  ராமதாஸ் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை, காவல்துறையினர்  கைது செய்த நிகழ்வு நெல்லையில் நடந்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம. க கட்சி  தமக்கு ஒதுக்கப்பட்ட முப்பது  தொகுதிகளில், ஒன்றில் கூட முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தவில்லை. இதைக்  கண்டித்து, நெல்லையில், பா.ம.க.,வைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள், ராமதாசின் உருவ பொம்மையை எரிப்பதற்காக, நடுவீதிக்கு  இழுத்து வந்தனர்.

அவர்களை மடக்கிய நெல்லை காவல்துறையினர் , காயிதேமில்லத் பேரவை தலைவர் பீர்முகமது உள்ளிட்ட, 20 பேரை கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் அனைவரும்   மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 

Monday, March 21, 2011

பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் (அகர வரிசை)

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் பட்டியல்.



 
  1. அண்டமி
  2. அணைக்காடு
  3. அத்திக்கோட்டை
  4. அத்திவெட்டி கிழக்கு
  5. அத்திவெட்டி மேற்கு
  6. அதிராம்பட்டினம் (பேரூராட்சி).
  7. ஆலக்குடிமுளை
  8. ஆலத்தூர்
  9. ஆலம்பள்ளம்
  10. ஆவைக்கோட்டை
  11. இளங்காடு
  12. உக்கடை
  13. எட்டுபுளிக்காடு
  14. ஏரிப்புறக்கரை
  15. ஓலையக்குன்னம்
  16. கரகவாயல்
  17. கரப்பங்காடு
  18. கரம்பயம்
  19. கருப்பூர்
  20. கல்யாணஓடை
  21. கழிச்சாங்கோட்டை
  22. கன்னியாக்குறிச்சி
  23. காசாங்காடு
  24. காடதங்குடி
  25. கிருஷ்ணபுரம்
  26. கீழக்குறிச்சி கிழக்கு
  27. கீழக்குறிச்சி மேற்கு
  28. கோபாலசமுத்திரம்
  29. சத்திரம் தொக்காலிக்காடு
  30. சாந்தான்காடு
  31. சிரமேல்குடி
  32. சின்ன ஆவுடையார்கோயில்
  33. சுக்கிரன்பட்டி
  34. சூரப்பள்ளம்
  35. செண்டங்காடு
  36. செம்பளூர்
  37. செளந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம்
  38. சேண்டாக்கோட்டை
  39. சொக்கனாவூர்
  40. தம்பிக்கோட்டை வடகாடு
  41. தளிக்கோட்டை
  42. தாமரங்கோட்டை தெற்கு
  43. தாமரங்கோட்டை வடக்கு
  44. திட்டக்குடி
  45. துவரங்குறிச்சி தெற்கு
  46. துவரங்குறிச்சி வடக்கு
  47. தொக்காலிக்காடு
  48. நாட்டுச்சாலை
  49. நெம்மேலி
  50. நைநான்குளம்
  51. பட்டுக்கோட்டை (நகராட்சி)
  52. பரககலக்கோட்டை
  53. பழஞ்சூர்
  54. பழவேறிக்காடு மன்னங்காடு
  55. பள்ளிக்கொண்டான்
  56. பாலமுதி
  57. பாலாயிஅக்ரஹாரம்
  58. பாலாஜிரகுராமசமுத்திரம்
  59. பாவாஜிக்கோட்டை
  60. புதுக்கோட்டகம்
  61. புதுக்கோட்டை உள்ளூர்
  62. புலவஞ்சி
  63. புளியக்குடி
  64. பெரியக்கோட்டை
  65. பொன்குண்டு
  66. பொன்னவராயன்கோட்டை
  67. மகாதேவபுரம்
  68. மகிழங்கோட்டை
  69. மதுக்கூர் (பேரூராட்சி)
  70. மதுரபாசாணிபுரம்
  71. முசிறி
  72. முதல்சேரி
  73. மூத்தாக்குறிச்சி
  74. மோகூர்
  75. ராஜாமடம்
  76. ரெகுநாதபுரம்
  77. ரெகுராமசமுத்திரம்
  78. வட்டாக்குடி.
  79. வடுகன்குத்தகை
  80. வாட்டக்குடி உக்கடை
  81. வாடியக்க்காடு
  82. விக்கிரமம்
  83. வீரக்குறிச்சி
  84. வெண்டாக்கோட்டை
  85. வேப்பங்காடு ஏனாதி
  86. வேப்பங்காடு
  87. வேப்பங்குளம்

மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர்க​ள் அறிவிப்பு

MMK flag 1
சென்னை:அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார். ஆம்பூர் தொகுதியில் அஸ்லம் பாட்ஷா போட்டியிடுகிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.