Thursday, February 7, 2013

பிளாஸ்டிக் அணுகுண்டுகளை விட மோசமானது !!! கேரி பேக்கு’களும் அணுகுண்டுகளும் !!!

ஒரு விழிப்புணர்வு பார்வை ...!!! இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் ‘கேரிபேக்’ மாறிவிட்டது, இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப் படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம், பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்றுமண்டலம் மாசுபடுகிறது, பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது. பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்யமுடியாது. இதனால் இவை நீர்நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் ‘நெட்வொர்க்கையும்’ பாதிக்கிறது, இந்த வகையில் ‘கேரிபேக்’ எனும் பாலிதீன் பைகளும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்புகளும் இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு ‘கேரிபேக்’ மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானம் சொல்கிறது. மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது. ஹோட்டல்களில் ‘கேரிபேக்’கில் சுடச்சுட உணவுகளை பார்சல் செய்து கொடுக்கின்றனர். சாம்பார் போன்றவைகளையும் சிறிய பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலிதீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப்பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு பாலிதீன் பைகள் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. அவைகள் மண்ணில் மக்காமல் அப்படியே இருப்பதால் பூமியின் தன்மையே மாறுபடுகிறது. மழை நீரை உறிஞ்சும் சக்தியை மண் இழக்கிறது. இன்னும் ஒரு முக்கியப் பிரச்சனை, எத்தனை மாடுகள் பாலிதீன் பைகளை தின்று தீர்க்கின்றன தெரியுமா? சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாட்டின் வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அதில் இருந்து 40 கிலோ பாலிதீன் பைகள் எடுத்து வெளியில் கொட்டப்பட்டன. தமிழகத்தில் சில நகரங்களில் இதுபோன்ற பாலிதீன் பயன்பாட்டைத் தடுக்கும் முயற்சிகள் நடந்தன. மதுரை, கன்னியாகுமரி, சின்னமனூர், கூடலூர், தேனி, இராமேஸ்வரம் என சொல்லலாம். தொழில் நகரமான குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் கடந்த ஜனவரி மாதம் முதல் பாலிதீனை தடை செய்வது என நகராட்சி முடிவு செய்தது. நகர்ப்பகுதி முழுவதும் இருக்கும் வணிகர்கள், வர்த்தகங்கள், சிறுகடை வியாபாரிகள் என அனைவரோடும் கலந்து பாலிதீன் குறித்த தீமைகளை விளக்கிச் சொல்லியும். இதுபோன்று 3 கூட்டங்களை நடத்தி அதன்பிறகு இத்திட்டத்தை நகராட்சியில் அமல் படுத்தினோம் என்று கூறிய நகர்மன்றத் தலைவர் ரா.முருகேசன், தற்போது நகராட்சி நிர்வாகத்திற்கும். பாலிதீனால் வாறுகால் தடைபட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கியும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடையூறு இருந்தது. பாலிதீன் ஒழிப்பிற்கு பின்னால் தற்போது இந்நிலை மாறி இருக்கிறது என்றார். இதற்கான மாற்று திட்டமாக காகிதப்பை செய்யும் இயந்திரத்தின் மூலம் 32 மாற்றுத் திறனாளிகள் மூலம் பை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜவுளிக்கடைகளில் பெரிய பைகளாக கொடுப்பதற்கு அதிக முதலீடு செய்யவேண்டி உள்ளதால் அது குறித்து பரிசீலித்து வருகிறோம். உறுதியாக பாலிதீன் இல்லா நகரமாக சிவகாசியை உருவாக்குவோம் என்றார். ஆனால், தற்போது நான்கு மாதங்களுக்கு பின்பு மீண்டும் சிவகாசியில் பாலிதீன் உபயோகப் படுத்தப்படுகிறது. மக்கள் பாலிதீனை கைவிடும் வரை நகராட்சி நிர்வாகத் தரப்பில் தொடர் முயற்சி இருந்தால் மட்டுமே பாலிதீனை ஓழிக்க முடியும். மேலும் உத்தரவு மூலம் மட்டும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தமுடியாது. மக்களுக்கு புரியவைக்க வேண்டும். கடைக்கோ அல்லது வெளியில் எங்கும் செல்லும்போது நிச்சயமாக ஒரு கைப்பையை எடுத்துச் செல்லுங்கள். எந்தப் பொருள் வாங்கினாலும் பாலிதீன் பையில் வாங்குவதைத் தவிர்ப்போம் எனப் பிரச்சாரம் செய்ய வேண்டியது உள்ளது. வீட்டில் இருந்து கடைக்கோ, இட்லி மாவு அல்லது உணவுப் பொருளோ வாங்கச் செல்லும் போது அதற்குண்டான பாத்திரங்களை கொண்டு செல்வதன் மூலம் இதனால் அவற்றுக்காக நாம் பயன்படுத்தும் இரண்டு அல்லது மூன்று பாலிதீன் பைகளை பயன்படுத்தாமல் தடுக்க முடியும். இதுவே எல்லா விஷயங்களிலும் பொருந்தும். எவ்வளவோ சீர்கேடுகள் இருக்க பாலிதீன் பையை பற்றி மட்டும் ஏன் இவ்வளவு கவலை என்ற கேள்வி எழலாம். மலைபோலக் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள், அணுகுண்டை விட ஆபத்தானது. அடுத்த தலைமுறையினருக்கு பேராபத்து. இதை உணர்ந்தே, நிலைமை மோசமாவதை தவிர்க்க பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது அதனை தயாரிப்பவர்களே பயன்படுத்திய பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது காலம் கடந்த எச்சரிக்கை என்றாலும் இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கப் பழகுவோம். துணிப்பைகள், சணல் பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்போம். பாலித்தீன் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் பற்றிய தகவல் !!!

சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சாப்பிட்டு இருப்போம் சோளத்தை சுட்டு தருவார்கள் தின்பதற்கு மிகவும் அருமையாய் இருக்கும் மற்றும் பொழுது போக்கு சார்ந்த இடங்களிலும் சாப்பிட்டு இருப்போம் . நவீன காலத்தில் பெரும்பான்மையான வணிக வளாகங்கள் தியேட்டர்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களில் சோளம் சில கலவைகளை சேர்த்து விற்பனை செய்கிறார்கள் . சோளத்தில் இவளவு நன்மைகள் இருக்கிறது என்று நமக்கு தெரியாது சோளம் மிகவும் ஒரு சத்தான பொருளாகவே இருக்கிறது இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம் ஆற்றல்-349 கி.கலோரி, புரம்-10.4 கிராம், கொழுப்பூ1.9 கி, மாவுச்சத்து - 72.6 கி, கால்சியம் - 25 மி.லி, இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி, தயமின் - 0.37 மி.கி, ரிபோப்ளோவின் 0.13 மி.லி, நயசின் - 3.1 மி.கி

Sunday, February 3, 2013

நடுநிசி தீர்ப்பு! புறக்கணிக்கப்படும் நியாயம்!

சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வழக்குகள் இந்தியாவில் உடனே முடிக்கப்பட்டு இதுபோல் இரவோடு இரவாக தீர்பளிக்கப்படும். அதே நேரம் பாபர் மசூதியை இடித்து இந்தியாவில் பல்வேறு மதக்கலவரங்களை ஏற்ப்படுத்தி, தொடர் குண்டு வெடிப்புகளில் பங்கு கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு எதிராக ஊடகங்களும், நீதி துறையும், அரசு இயந்திரங்களும் மவுனம்காக்கும். இந்தியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் நிரூபிக்கப்பட்டடு, உள்துறை அமைச்சர் நேரிடையாக குற்றம் சுமத்திய பின்னரும் கூட அந்த இயக்கங்களை தடை செய்ய முடியவில்லை. சம்மந்தப்பட்ட இயக்கங்கள் தங்களை தடை செய்து பாருங்கள் என்ன நடக்கும் என்று சவால் விடுகின்றன. ஆனால் முதுகெலும்பில்லாத காங்கிரஸ் அரசோ மவுனம் காக்கிறது. இதை பற்றி எல்லாம் கமலஹாசன் படம் எடுக்க மாட்டார். சமகாலத்தில், கண்முன்னே நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஹிந்துத்துவாவினர் கைது செய்யப்பட்டு, அவர்கள் RSS மற்றும் பாரதிய ஜனதாவுடன் தொடர்புடையவர்கள் என்பதும் நிருபனம் ஆகிவிட்டது. மேலும், அவர்கள காடுகளில் பயிற்சி எடுத்த முகாம்களை தேசிய புலனாய்வு துறையினர் தேடி வருகின்றனர். இத்தருணத்தில் கமலஹாசனும், தினமலர், தினமணி வகைறாக்களும் அதை பற்றி எழுதாமல், பேசாமல், ஆப்கானிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதம் குறித்து பேசுவது ஏன்? சித்தாந்த ரீதியாக தாங்கள் ஆதரிக்கும் கொள்கைக்கு வலுசேர்க்க, RSS, ஹிந்துத்துவா இயக்கத்தினர் செய்த பயங்கரவாத செயல்களை மறைக்க என்று எடுத்து கொள்ளலாமா? உள்நாட்டில் ஹிந்துத்துவா தீவிரவாதம் நிகழ்த்திய கலவரங்களையும், குண்டு வெடிப்புகளையும், கூட்டு படுகொலைகளையும் பற்றி விஜயக்காந்த், அர்ஜூன், கமலஹாசன் போன்றோர் இதுவரை ஒருபடமாவது எடுத்ததுண்டா? விஸ்வரூபத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மறைமுகமாக ஹிந்துத்துவாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களே! எங்கே போனது கருத்து சுதந்திரம்: 1). பர்ஸானியா திரைப்படம்: இது குஜராத் கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். இது கமலின் விஸ்வரூபம் போல் இல்லாமல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை குஜராத்தில் வெளியிட முடியாமல் தடை செய்யப்பட்டது. 2). DAM 999 திரைப்படம்: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டுடன் டேம் 999 திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக தடை செய்யப்பட்டது. 3). விருமாண்டி திரைப்படம்: இந்த படத்திற்கு முதலில் சண்டியர் என்றுதான் பெயர் வைக்கப்பட்டது. டாக்டர். கிருஷ்ணாசாமியின் எதிர்ப்பு காரணமாக இந்த படத்தின் பெயர் விருமாண்டி என்று மாற்றப்பட்டது. 4). கீதை திரைபடம்: விஜய் நடித்த கீதை படம் எதிர்ப்பின் காரணமாக புதிய கீதை என்று மாற்றப்பட்டது. படத்துக்கு திருச்சி, மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் விஜயை கிருஷ்ணர் வேடத்தில் சித்தரித்திருந்தனர் என்று இந்து முன்னணி, சிவசேனா ஆகிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை கிழித்தனர். 5). பாபா திரைப்படம்: ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் பாடல் வரிகள் எதிர்ப்பு சம்மந்தமாக மாற்றப்பட்டது. இந்த படத்துக்கு எதிராக பாமக வினர், ரஜினியின் கொடும்பாவியை எரித்தனர். தியேட்டர்களுக்கு சென்று படத்தை ஓட விடாமல் கலாட்டா செய்தனர். ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டரைத் தாக்கி "பாபா" படப்பெட்டியை சிலர் கடத்திச் சென்றனர். விருத்தாசலத்தில் படத்தைத் திரையிட்ட உரிமையாளர் கடத்தப்பட்டார். 6). நடிகை குஸ்பு: இவர் கற்பு பற்றி பேசிய விசயத்தில் அவரின் உருவ படத்தை கொளுத்தி தமிழகத்தின் பல மாவட்ட நீதிமன்றங்களில் இவர் மீது வழக்குகள் தொடர்ந்தனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள் இவரது உருவப்படத்திற்கு செருப்பு மாலை போட்டு, விளக்கு மாற்றால் அடித்தனர். 7). நடிகை திரிஷா: இவர் சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்த காலத்து பெண்கள் மது அருந்துவது அவர்களது சொந்த விருப்பம் நாம் அதில் தலையிடக் கூடாது என்று கருத்து சொன்னார். இதற்க்கு இந்து மக்கள் கட்சியினர் திரிஷா இதற்க்கு மன்னிப்பு கேட்க்க வேண்டும் மீறினால் அவருக்கு மது பாட்டில்களை பார்சலில் அனுப்பி வைப்போம் என்றனர். 8). நடிகை புவனேஸ்வரி: இவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் மேலும் பல நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக சொல்லி நடிகைகளான வினிதா, நளினி, மஞ்சுளா, சீதா, ஸ்ரீப்ரியா, ஷீலா, அஞ்சு ஆகியோரிகளின் லிஸ்டை கொடுத்தார் என தினமலர் படத்தோடு செய்தி வெளியிட்டது. இதை எதிர்த்து நடிகைகளும், நடிகர் சங்கமும் என்று மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர். 9). ஓவியர் ஹுசைன்: இவர் உலக புகழ் பெற்ற ஓவியர்களில் ஒருவர். இவர் இந்து பெண் தெய்வங்களை ஆபாசமாக படம் வரைந்தார் என்று இவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவர் மீது 3 மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் இவர் நாட்டை விட்டே சென்றார். பின்னர் இவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் இவர் மீது தொடரப்பட்ட வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்தது. இது போன்ற பல்வேறு சம்பவங்களை சொல்லலாம், அப்பொழுதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசாத கூட்டம் இன்று சிறுபான்மை மக்கள் என்றதும் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறது. தமிழ் கலாச்சாரத்திற்கு Living Together அதாவது கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்கிற மேலை நாட்டு நாகரிகத்தை தந்த அற்புத கலைஞசர்தான் நமது விஸ்வரூபம் தந்தவர். *தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர் நடிகை கவுதமியோடு இணைந்ததும் இவர் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்*