Thursday, April 21, 2011

நமதூரில் முதல் பிசிஒதிரபி


நமதூர் கீழத்தெருவைச் சேர்ந்த S.S.சேக் தாவுத் (பாட்டன் வீடு) மகன் ஜம்ஸித் முகம்மது, இவர் காதிர் முகைதீன் பள்ளியில் +2 அறிவியல் பாடம் படித்துவிட்டு கடந்த 2006 ஆம் ஆன்டு முதல் திருச்சி கமலம் விஸ்வநாதன் பிஸியோதெரபி கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பயின்று விட்டு தற்போது கோவையில் உள்ள கங்கா மெடிக்கல் சென்டர் என்ற பிரபல மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.




மருத்துவத்துறையில் நம்மவர்கள் குறிப்பாக அதிரைக்காரர்கள் அதிகம் வரமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஜம்சித் முகம்மது என்கிற நமதூர் வாலிபர் ஒருவர் இத்துறையில் பட்டம் பெற்று பணியில் சேர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. அவருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுபோல்,  இத்துறையில் சகோதரர் ஜம்சித் மேற்படிப்புகளும், அனுபவமும் பெற்று அதிரை மக்களுக்கும் சேவை செய்யவும் முன்வரவேண்டும்.

+2 தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பிஸியோதெரபி படிப்பு தொடர்பான விவரங்களைப் பெற சகோதரர் ஜம்சித் முகம்மது அவர்களிடத்தில் கலந்துரையாடவும்.
 
அன்னாரின் தொலைபேசி
S.JAMSHEED MOHAMED
EMAIL: JAMSHEED_27@YAHOO.CO.IN
CELL: 9894283164
 

No comments:

Post a Comment