Friday, July 29, 2011

ஒரே நேரத்தில் மூன்று உலவிகளை பயன்படுத்துவதற்கு


இணையதளங்களை வலம் வருவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படுவது உலவிகள் மட்டுமே ஆகும். இதற்கு மாற்றாக எதுவும் இல்லை.
எனினும் இணைய பயன்பாட்டு அப்ளிகேஷன்கள் ஒரு சில உண்டு. இவையும் உலவிகளில் வடிவிலேயே தான் இருக்கும்.

இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும் ஒருசில வசதிகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களில் உண்டு.

அந்த வகையில் Multibrowser என்னும் மென்பொருள் வாயிலாக ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் பணியாற்ற முடியும். அவை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0, 8.0, 9.0, நெருப்புநரி உலவி மற்றும் கூகுள் குரோம் உலவி போன்றவை ஆகும்.

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

இதில் இருக்கும் அட்ரஸ்பாரில் இணையதள முகவரியினை உள்ளிடவும். பின் என்டர் கீயினை அழுத்தவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தினை காணமுடியும்.

பின் நீங்கள் உலவிகளை தேர்வு செய்து அதற்கிடையேயுள்ள மாற்றத்தினை காண முடியும். மேலும் மூன்று உலவிகளிலும் நீங்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்தினை ஒரே இடத்தில் காண முடியும்.

Wednesday, July 27, 2011

அதிரையில் கூரை வீட்டில் தீ கி 5 லட்சம் சேதம்

அதிராம்பட்டினம்,: அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்தவர் காதர் முகைதீன் (42). சென்னையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவுஜியா, அதே தெருவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு நேற்று சென்றார். இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது வீடு தீடிரென வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் 15 பவுன் நகைகள், ரூ. 55 ஆயிரம் பணம், வாசிங் மிஷின், கிரைண்டர், இரண்டு கம்ப்யூட்டர்கள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீ யணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

source : http://dinakaran.com/District_detail_2011.asp?Nid=1255

காரைக்கால் மாவட்டம் சார்பாக ஜகாத் கொடுக்க வலியுறுத்தி வெளியிடப்பட்ட நோட்டீஸ்

கடமையைச் செய்வோம்



இஸ்லாத்தின் அடிப்படை ஐந்து கடமைகளில் ஜகாத்தும் ஒன்று, அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சுமார் 32 இடங்களில் இதனை வலியுறுத்துகின்றான்.

அவற்றில் ஒரு சில வசனங்கள்

இன்னும் தொழுகையை முழுமையாக கடைபிடித்தும், ஜகாத்தை கொடுத்தும் வாருங்கள் (அல் குர்ஆன் 2:110)


அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்). அவ்வாறு கொடுப்பவர்தான் (தன் நற்கூலியை) இரட்டிப்பாக்கி கொள்கிறார்கள். (அல் குர் ஆன் 30:39)

ஜகாத்தை கொடுத்துவருபவர்கள் வெற்றி அடைந்துவிட்டார்கள் (அல் குர் ஆன் 23:4)

ஜகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள்:

1. ஜகாத் கொடுக்கும் பொருளில் முழு சொத்துரிமை இருக்க வேண்டும்.
2. அத்தியாவசிய அனைத்து செலவீனங்கள் போக மேல் மிச்சமாக இருக்க வேண்டும்.
3. மேல் மிச்சமாக இருப்பது ஷரீஅத் விதித்துள்ள குறிப்பிட்ட அளவை அடைந்திருக்க வேண்டும்.
4. அது ஒரு வருடம் நம்மிடம் இருந்திருக்க வேண்டும்.
5. கடன் இருக்கக்கூடாது.
6. ஜகாத் கொடுக்கும் பொருள் விருத்தி அடையும் பொருளாக இருக்க வேண்டும்.

ஷரீஅத் விதிக்கும் ( நிஸாப்) குறிப்பிட்ட அளவு:

1. தங்கம் - 85 கிராம் இருந்தால் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.
2. வெள்ளி - 595 கிராம் இருந்தால் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.
3. பணம் - தங்கம் அல்லது வெள்ளியின் அளவை அடைந்தால் 2.5% ஜகாத் தரவேண்டும்.

விவசாய பொருட்கள். மீன்கள் 653 கிலோ இருந்தால் (தானாக உற்பத்தியானால் 10 சதவிகிதமும், நாம் உற்பத்தி செய்தால் 5 சதவிகிதமும்) ஜகாத் கடமையாகும். வாடகை கட்டிடங்கள், வாகனங்கல், தொழிற்சாலைகள் பணத்தின் அளவை அடைந்தால் (செலவினம் போக) 2.5% ஜகாத் கடமையாகும்.

ஜகாத் மேலே குறிப்பிட்டுள்ளபடி இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் அது இன்னும் முறையாக மற்றும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏழைகளில் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்நிலையை மாற்றி சமூகத்தை வலிமையடையச் செய்ய முறையான வழிகளில் தெளிவான திட்டமிடுதலுடன் பல்வேறு கஷ்டங்களுக்கிடையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகளும் பொருளாதார பற்றாக்குறையினால் திணறிக்கொண்டிருக்கின்ற நிலை தொடர்கிறது.








இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் முஸ்லிம்கள் 31 சதவீதமாகவும், நகர்புறங்களிலும் 38.4 சதவீதமாகவும் உள்ளனர் என்ற கசப்பான உண்மை தான் நம் சமூகத்தின் இன்றைய நிலை, எனவே இறைவனுடைய கட்டளைகளை ஏற்று ஜகாத்தை கணக்கிட்டு வழங்குவதன் மூலம் முஸ்லிம் சமூகம் வலிமை பெறும்.

உலக அளவில் தங்கத்தை கொண்டே பொருளாதார நிலை கணக்கிடப்படுகிறது. எனினும் வெள்ளி கணக்கிட்டால் பெரும்பாலானோர் ஜகாத் தரும் நிலை உருவாகும். இதன் மூலம் சமூக அளவில் பெரிய மாற்றம் ஏற்படும்.

ஜகாத் வாங்குவதற்கு தகுதியானவர்கள்:

ஜகாத் என்னும் தருமங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும் அவற்றிற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது, போன்ற துறைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்கள் உடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவே, அவர்களுக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனாளிகளுக்கும் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்) வழிப்போக்கர்களுக்கும் உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவும்) அறிபவன் மிக்க ஞானமுடையவன். (அல்குர் ஆன் 9:60)

ஜகாத் கொடுக்காதவர்களின் நிலை:

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும், தங்கத்தையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ (நபியே) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக ( நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதை கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இன்னும் இது தான் நீங்கள் உங்களுக்காக சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததை சுவைத்து பாருங்கள்.(என்று கூறப்படும்) (அல்குர் ஆன் 9:34-35)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தை அளித்து அதற்கான ஜகாத்தை அவர் செலுத்தவில்லையானால், அவரது செல்வம் கொடிய நஞ்சுடைய பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கறுப்பு புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது அவரை (கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும், பிறகு அந்த பாம்பு அவரது தாடையை பிடித்துக்கொண்டு நான் தான் உனது செல்வம். எனது கருவூலம் என்று சொல்லும் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (3:180) இறைவசனத்தை ஓதினார்கள். ( நூல் புகாரி: 1430)



இஸ்லாத்தின் கடமையான ஜகாத்தை நிறைவேற்றி
இரட்டிப்பு கூலையையும் இறையன்பையும் பெறுவோம்

Thursday, July 21, 2011

சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளின் காது செவிடாகும்: ஆய்வில் தகவல்


மற்றவர்கள் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு காது செவிடாகும் ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
புகைப்பிடிப்பதால் புற்று நோய், ரத்தம் சம்பந்தமான நோய், இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர்.

ஆனால் பிறர் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு காது செவிடாகும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகம் அறிவியல் துறை மாணவர்களின் உதவியுடன் சிகரெட் புகையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த புதிய ஆய்வை மேற்கொண்டது.

12 முதல் 19 வயது வரையிலானவர்கள் ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அதிர்ச்சியான விடயங்கள் தெரிய வந்தன.

ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு: சிகரெட் பிடிப்பவர்களை விட அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்தது.

குறிப்பாக காது செவிடாகும் நிலை ஏற்படுகின்றன. சுவாசிக்கப்படும் சிகரெட் புகை, மூக்கு மற்றும் வாய் வழியாக சென்று காதின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒலியை கிரகிக்கும் மெல்லிய உறுப்பை சேதப்படுத்துகிறது.

இதனால் ஒலியை வாங்கும் திறன் அந்த உறுப்பு இழப்பதால் செவிட்டு தன்மை உண்டாகிறது. மேலும் அடுத்தவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் சக்தி குறைவதுடன் படிப்பில் நாட்டம் இல்லாமை, அடங்காத்தன்மை போன்ற குறைபாடுகள் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெரியவர்கள் மற்றும் பெற்றோர், குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Wednesday, July 20, 2011

காய்கறியின் மருத்துவக் குணங்கள்


நாம் சாதரணமாக சாப்பிடும் அனைத்து உணவிலும் பல வித மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
வெள்ளரிபிஞ்சில் எந்த வித வைட்டமின்களும் இல்லையென்றாலும் நாம் இதை உண்ணும் போது ஒரு வித ரசம் உற்பத்தியாகி நமது ஜீரணத்தை அதிகப்படுத்துகின்றது.

நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் ஒரு சிறந்த மருந்தாகும். பச்சை வெங்காயம் இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. குறிப்பாக வெங்காயம் முடக்கு வாத நோய் வராமல் தடுக்கும் ஒரு அறிய மருந்தாகும்.

கருவேப்பிலை பச்சையாக சாப்பிடும்போது நாம் அதிகமான இரும்புச்சத்தை பெறமுடியும். இவை ரத்தத்தை சுத்தமாக்கி வயிற்று எரிச்சலை குறைத்து பசியை அதிகமாக்குகின்றது.

இவையனைத்தும் தற்போது நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்றின் கண்டறியப்பட்ட இயற்க்கை மருத்துவகுணங்கள் ஆகும்.

இளையான்குடி பொற்கிழி கவிஞர் மு. சண்முகம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’ என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.

இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிதாயத்துல்லாவும் சலாம் கூறினார்.

அவரது தொடர்பு எண் : 99763 72229

Tuesday, July 19, 2011

புறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்


புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.

ஒருவர் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் அவர் அந்த தீயசெயலிளிருந்து தவிர்ந்து இருப்பார்.

புறம் பேசுதல் என்றால் என்ன?

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-

அல்லாஹ் கூறுகிறான்:-

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

பிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். அல்-குர்ஆன் 49:11)

ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-

“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)

புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-

1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள்,தகராறுகள் ஏற்படுகிறது.

2) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.

3) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.

4, முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.

புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்,மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -

கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -

‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.

மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -

1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -

“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.

2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -

“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)

முஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.

புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -

ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:-

39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)

“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:54)

எனவே சகோதர,சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக,இனி எக்காரணத்தை கொண்டும்,யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன்! ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன்! என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -

“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.

“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)

மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)

அல்லாஹ் நம் அனைவரையும் புறம் பேசுதல் என்னும் தீய செயலிலிருந்து காப்பாற்றி அதைத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள் புரிபவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்.

Monday, July 18, 2011

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்


மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது.

வாழைப்பழத்தில் உள்ளதைப் போன்ற அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.

1. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்து விடுகிறது. பச்சை உருளைக்கிழங்கு வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.

2. இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும்.

3. இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு இரு தேக்கரண்டி வீதம் உணவு சாப்பிடுவதற்கு முன்பு அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும்.

4. உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.

5. உருளைக்கிழங்கு சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும், வலியும் நீங்கும்.

6. அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும்.

இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும். உருளைக்கிழங்கு வைத்தியம் தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக் கொள்வது தான் உருளைக் கிழங்கு வைத்தியம்.

7. சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக் கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

8. இரவு தூங்கப்போகும் முன்னர் பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும். அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

Sunday, July 17, 2011

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி:ஜெயா

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரம்ஜான் மாதம் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு ரம்ஜான் மாதம் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு அனுமதி பெற்ற பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான அரிசிக்கு உரிய மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாக பள்ளி வாசல்களுக்கு வழங்குவார்கள். ரம்ஜான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 3801 டன்கள் அரிசியை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளிலும் 29-7-2011 அன்று தயார் நிலையில் வைத்திருக்கவும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகழகத்திற்கு முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே தமிழகத்தில் அனுமதி பெற்று ஏற்கனவே இந்த வாய்ப்பினை பயன் படுத்தி வரும் பள்ளி வாசல்கள் மொத்த அனுமதியை புதுப்பித்து, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து அரிசியை பெற்றும் பயன் அடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 9 மாத குழந்தை கடத்தல்

சிசிந்தாதிரிப்பேட்டையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத குழந்தை மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ரஃபி, 28, இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாய்ராபானு, 25; சுவீட் கடைகளுக்கு பகோடா தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு, ஷப்னம் பானு, 2, என்ற பெண்குழந்தையும், ஆரிப் பாட்சா என்ற ஒன்பது மாத குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, முகமது ரஃபி வெளியில் சென்றுவிட, சாய்ரா பானுவும் கடைகளுக்கு பகோடா வினியோகிக்கச் சென்றார்.
இரவு 8 மணிக்கு, ஒன்பது மாத குழந்தையான ஆரிப் தூங்கிக் கொண்டிருந்தான். குழந்தை தூங்கியதால், வீட்டில் இருந்த பாட்டி பானு பீவி, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றார்.சிறிது நேரம் கழித்து வீட்டில் வந்து பார்க்கும் போது, குழந்தையை காணவில்லை; அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார், முகமது ரபி வீட்டில் பணியாற்றிய மலர் என்ற பெண்ணையும், அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சென்னையில் கடத்தப்பட்ட தமன்னா, மணிராஜ் ஆகியோர் சில தினங்களில் கிடைத்து விட்டனர்.அவர்களை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களே இந்த குழந்தையையும் கடத்தியிருக்கலாம் என்ற அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ந்தாதிரிப்பேட்டையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத குழந்தை மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ரஃபி, 28, இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாய்ராபானு, 25; சுவீட் கடைகளுக்கு பகோடா தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு, ஷப்னம் பானு, 2, என்ற பெண்குழந்தையும், ஆரிப் பாட்சா என்ற ஒன்பது மாத குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, முகமது ரஃபி வெளியில் சென்றுவிட, சாய்ரா பானுவும் கடைகளுக்கு பகோடா வினியோகிக்கச் சென்றார்.
இரவு 8 மணிக்கு, ஒன்பது மாத குழந்தையான ஆரிப் தூங்கிக் கொண்டிருந்தான். குழந்தை தூங்கியதால், வீட்டில் இருந்த பாட்டி பானு பீவி, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றார்.சிறிது நேரம் கழித்து வீட்டில் வந்து பார்க்கும் போது, குழந்தையை காணவில்லை; அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார், முகமது ரபி வீட்டில் பணியாற்றிய மலர் என்ற பெண்ணையும், அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சென்னையில் கடத்தப்பட்ட தமன்னா, மணிராஜ் ஆகியோர் சில தினங்களில் கிடைத்து விட்டனர்.அவர்களை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களே இந்த குழந்தையையும் கடத்தியிருக்கலாம் என்ற அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, July 9, 2011

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்


நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.

முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம்: முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும். சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால் தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும்: பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.

சிறுநீர் பிரச்சினை தீரும்: உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது.

Friday, July 8, 2011

வலிநிவாரணிகளால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆய்வில் தகவல்


வலிநிவாரணிகள் என்று நாம் பொதுவாக பயன்படுத்தும் மாத்திரைகளால் இருதயத் துடிப்பு சீரற்றதாகி விடுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் வந்துள்ள இந்த ஆய்வை டென்மார்க்கைச் சேர்ந்த ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்தியுள்ளனர். முன்னதாக பல ஆய்வுகள் வலிநிவாரணிகளால் மாரடைப்பு மற்றும் வாத நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வலிநிவாரணி மாத்திரைகளான இபுப்ரூபன் மற்றும் ஆஸ்பிரின் வகையறா மாத்திரைகளால் மேற்கூறிய மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் பாதிப்பு நீண்ட நாளைய விளைவாக ஏற்படலாம் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்காக 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளின் நோய்ப் பதிவேட்டை எடுத்துக் கொண்டுள்ளனர். இதில் இந்த வலி நிவாரணிகளால் சீரற்ற இருதய துடிப்பு இடர்பாடு 40% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் ஈடுபட்டக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஹென்ட்ரிக் டாஃப்ட் சென் தெரிவித்துள்ளார்.

புதிய வலிநிவாரணிகளாகிய காக்ஸ் - 2 இன்ஹிபிட்டர்கள் வகையறாக்களை பயன்படுத்துவதில் இந்த இடர்பாடு 70% ஆக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. காக்ஸ்- 2 இன்ஹிபிடர்கள் என்று அழைக்கப்படும் ஸ்டெராய்ட் கலப்பு இல்லாத அழற்சி தடுப்பு வலிநிவாரணிகள் நேரடியாக காக்ஸ்- 2 என்ற என்சைமில் செயல்படுகிறது.

அதாவது இந்த என்சைம்தான் வலி மற்றும் அழற்சிக்குக் காரணமான என்சைமாகும். ஏற்கனவெ இந்த வகை வலிநாவரணிகளில் ஒன்றான வியாக்ஸ் என்ற ஒன்று 2004ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாம் பொதுவாக எடுத்துக் கொள்ளும் சிறிய அளவிலான வலி நிவாரணிகளினால் முதியோருக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வாய்ப்பு சற்றே அதிகரித்துள்ளது. குறிப்பாக நீண்ட நாளைய சிறுநீரக நோய் கண்டவர்களுக்கு இந்த வலிநிவாரணிகளால் ஆபத்து ஏற்படும் என்கிறது இந்த ஆய்வு.

ஸ்ட்ராபெரியின் மருத்துவ குணங்கள்


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் ஏற்படாது என கூறுவதுண்டு.
அதாவது ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால் இந்த விடயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம்(சி.எப்.எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது.

ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது. இதில் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சாப்பிடாத எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது.

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன.

இதுகுறித்து விஞ்ஞானி பம் மஹர் கூறுகையில்,"இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது" என்றார்.