Saturday, May 28, 2011

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!!


புதிதாக ஆட்சியில் அமர்ந்த உடன் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை செய்தார்.


அது என்ன வென்றால் இனி மக்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழலாம் என்று!


அவர் அப்படி சொல்லி ஒரு நாள் கூட, முடியவில்லை சிறுபான்மை சமூக அதிமுக மத்திய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தின் மூலம் கொல்லப்பட்டார்.


அது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விபத்து நடத்திய லாரி கூட இதுவரை கண்டுப்பிடிக்க படவில்லை.


இதுவே அமைச்சர் ஒரு ஹிந்துவாக இருந்தால் ஐ.எஸ்.ஐ சதி என்று சொல்லி , அந்த இயக்கத்தோடு தொடர்பு, இந்த இயக்கத்தோடு தொடர்பு என்று இதுவரை எத்தனையோ? அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யபட்டு இருப்பார்கள்.


நடந்த இந்த சம்பவத்தை சில பத்திரிக்கைகள் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ என்பார்கள், ராமகோபாலன் அப்கானிஸ்தான் தலிபான்கள் என்பார், இல்லை, இல்லை, கஷ்மீர் லஷ்கரே அமைப்புதான் காரணம் என்பார்கள் காவல்துறை கண்ணியவான்கள்.


அதுவெல்லாம் இல்லை தாவூத் இபுராஹிம் தான் என்பார்கள் நமது வார இதழ்களாகிய ஜூனியர், சீனியர் விகடன்மார்கள். இதில் எதுவுமே இல்லை, இந்த விபத்தை நடத்தியது ஒரு புது அமைப்பு என்று சொல்லவார்கள் தினமணியும், தினமலரும் போன்ற பார்பன ஹிந்துத்துவா நாளிதழ்கள்.


நீங்கள் யார் சொல்லவதும் சரியில்லை நாங்கள் துப்பறிந்து கண்டுபிடித்தோம் என்று உலகத்தில் இல்லாத ஒரு புதிய பெயரை சொல்வார் பாசிச ஊது குழலாகிய நக்கீரன்.


இப்படி கற்பனையிலேயே துப்பு துலக்கும் இந்த துப்பறியும் பத்திரிகை சம்பவான்கள் எல்லாம், ஏன் இன்னும் தங்கள் கற்பனை குதிரையை ஓடவிடாமல் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நமக்கு சந்தேகம் வருகிறது.


ஜெயலலிதாவின் பதவி ஏற்ப்பு விழாவிற்கு வருகை புரிந்த குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியை பார்த்து சிறுபான்மை மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. மோடியின் வருகையால் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்றுஅஞ்சினர்.


இந்நிலையில் தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டது பிடிக்காமல் "ஹிந்துத்துவா" இந்த விபத்தை நடத்தி இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.


இந்த துப்பறியும் பத்திரிக்ககளும் வாய்திறக்க மறுக்கின்றன, விபத்தை நடத்திய லாரியும், லாரி டிரைவரும் இதுவரை பிடிக்கப்படவில்லை. அதுவும் இந்த லாரி கேரளாவை சேர்ந்தது என்ற செய்தி இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கோட்டை என்று கேரளா மாநிலத்தை சொல்லலாம். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யூனிட்கள் ( சிறு சிறு படையணிகள் ) அதிகம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம்.


முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான பழனி பாபா அவர்களை கொன்றவர்களும் கேரளத்து ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பழனி பாபாவை கொல்ல கேரள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து ஆட்களை தெரிவித்தார்கள் தமிழக ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி இயக்கத்தினர்.


கேரள ஆர்.எஸ்.எஸ். கார்கள் கேரளத்தில் இருந்து ஒரு அம்பாசிடர் கார் மூலம் தமிழகம் வந்து பழனி பாபாவை வெட்டி கொலை செய்து விட்டு திரும்பிச் சென்றார்கள். இதே போல் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் விசயத்திலும் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.


வந்துவிட்டு போனதோ கொலையாளி மோடி ! கொல்லப்பட்டதோ சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்! குஜராத்தில் நடப்பதை போலவே நடந்திருக்கிறது! தமிழகத்திற்கு வருகை புரிந்த மோடியின் தூண்டுதலின் பெயரில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


புதிய அரசு சிபி ஐ விசாரணை நடத்துமா? சி.பி.சி.ஐ.டி விசாரணை அந்த அளவுக்கு உண்மைகளை வெளி கொண்டுவர போதுமானதாக இருக்காது என்றே நாடு நிலையாளர்கள் கருதுகிறார்கள்.

Friday, May 27, 2011

அதிராம்பட்டினம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - மாணவிகள் சாதனை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிரை பள்ளிகளின் தேர்வு முடிவுகள். முதல் மூன்று இடம் பெற்ற மாணவ/மாணவிகள் விவரம்.

இமாம் ஷாபி மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்.

முதலிடம் - அல் ஜசீரா - 474


இரண்டாம் இடம் - பாஹிமா பாத்திமா - 473


மூன்றாம் இடம் - வசீமா - 472


காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்.

முதலிடம் - சகீரா - 482

இரண்டாம் இடம் - நபீஸா - 481


மூன்றாம் இடம் - மலர்விழி - 468

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்.

முதலிடம் - ரியாசுதீன் - 459

இரண்டாம் இடம் - வின்சன்ட் பளித் பிரீடோ - 444


மூன்றாம் இடம் - ஷேக் அலாவுதீன் - 442

Source : Adiraiwap

Tuesday, May 24, 2011

தக்காளி சாறு அருந்தினால் கொழுப்பு குறையும்: ஆய்வில் தகவல்



சமைக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளிச் சாறில் காணப்படும் இரசாயனம் இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பிரச்சினை உள்ளவர்களுக்கு பொதுவாக statins மருந்து வகைகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. இந்த மருந்துகளில் காணப்படும் இரத்தக் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு இரசாயனத்தை போலவே சமைக்கப்பட்ட தக்காளியும், தக்காளிச் சாறும் பயன்தரக் கூடியவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே இதயத்தில் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை. இத்தகைய நோயாளிகள் தினசரி இரண்டு அவுன்ஸ் தக்காளிச் சட்னி அல்லது ஒரு பைன்ட் தக்காளிச் சாறை உட்கொள்வதன் மூலம் பெரும் பயனை அடைய முடியும்.
நன்கு பழுத்த தக்காளியில் சிவப்பு நிற பளபளப்பு ஏற்படக் காரணமாக இருப்பது அதில் பொதிந்துள்ள lycopene என்ற இரசாயனமாகும். இந்த சக்தி மிக்க இரசாயனம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது.
அத்தோடு மாரடைப்பு, பக்கவாதம் என்பனவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Lycopene என்ற இந்த இரசாயனம் பற்றி நடத்தப்பட்டுள்ள 14 சர்வதேச ஆய்வுகளை கடந்த 55 வருடங்களாக நன்கு ஆராய்ந்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
உடம்பிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலுக்கு இது இயற்கையான பாதுகாப்பை வழங்கக் கூடியது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். பிரிட்டனில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலஸ்ட்ரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு statins மருந்து வகைகளே வழங்கப்படுகின்றன.

பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்

பாலாடைக்கட்டி மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதற்கு யாருக்குதான் விருப்பம் இருக்காது. இந்த பால் பொருட்களை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது.
இத்தகைய சுவை விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை ஆராய்ச்சியாளர்கள் தந்துள்ளனர். வெண்ணெய், பாலாடை கட்டி சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்காது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நுண் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆயிரக்கணக்கான நபர்களை ஆய்வு செய்த போது அரை கிலோவுக்கு மேல் பாலாடை கட்டி சாப்பிட்டவர்களுக்கும் மாரடைப்பு அபாயம் ஏதும் ஏற்படாததை கண்டறிந்தனர்.
ரோடே தீவின் ப்ரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டெல்லா அஸ்லி பெக்யான் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் வெண்ணெய் பொருட்களால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்காது என தெரியவந்துள்ளது.
பால் மற்றும் பாலாடைக்கட்டி கூட்டுப் பொருட்களை கொண்டது. ஆய்வின் போது பால் பொருட்களுக்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. குறிப்பாக பால் பொருட்களில் உள்ள கொழுப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பாலில் உள்ள கொழுப்பு தீங்கு விளைவிக்காது என ஆய்வுக் குழு உறுதியாக நம்பாத போதும் அதில் உள்ள கால்சியம், வைட்டமின் டி, பொட்டாசியம் இதய நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 593 கிராம் பால் பொருட்கள் எடுத்துக் கொண்ட போது மாரடைப்பு பாதிப்பு இல்லாததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

source : http://puthiyathoothu.blogspot.com/

Monday, May 23, 2011

3500 ஆண்டுகளுக்கு முன்பே இதயநோய் தோன்றியது: ஆய்வில் தகவல்


3500 ஆண்டுகளுக்கு முந்தய எகிப்து இளவரசி அக்மோஸ் மெர்யட் அமோன்க்கு இதய நோய் ஏற்பட்ட விவரத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எகிப்தில் அரசக் குடும்பத்தினர் இறந்து போகும் போது அவர்களது உடல்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்தப்பட்டு புதைக்கப்படும். இவற்றுக்கு மம்மிக்கள் என்று பெயர். இந்த மம்மிக்களை மருத்துவர்கள் ஆய்வு செய்த போது 3500 ஆண்டுகள் முந்தய எகிப்து இளவரசி இதயநோயால் அவதிப்பட்டது தெரியவந்தது.

சிடி ஸ்கேன் எனப்படும் மனித குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ஆய்வு செய்த போது மம்மியாக புதைக்கப்பட்டிருந்த இளவரசிக்கு இதய நோய் இருப்பது தெரியவந்தது. இதய ஸ்கேனில் இளவரசிக்கு இதயம், மூளை, வயிறு மற்றும் கால்பகுதிகளுக்கு செல்லும் ரத்தக்குழாய் பகுதிகளில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எகிப்து இளவரசி இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் கூறினர். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைகழக நிபுணர்களுடன் அமெரிக்க இதய மருத்துவ நிபுணர்கள் 52 மம்மி உடல்களை ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் போது எகிப்து இளவரசிக்கு உள்ள நோய் விவரங்கள் தெரியவந்தன.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் தேசிய பழங்கால அருங்காட்சியகம் உள்ளது. அங்கு மம்மிக்கள் மீது முழு ஸ்கேன் செய்து நிபுணர்கள் பழங்காலத்திலேயே இதய நோய்த் தாக்கம் இருப்பதை உணர்த்தி உள்ளனர். ஆய்வு செய்த மம்மிக்களில் பாதி பேருக்கு இதய ரத்தக் குழாய்கள் தடித்து இருப்பது தெரியவந்தது.

இளவரசி அக்மோஸ் கிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகள் முன்பாக வாழ்ந்தவர். இந்த இளவரசி தனது 40 வயதில் மரணம் அடைந்துள்ளார். மிக சொகுசான வாழ்க்கை நடத்திய அந்த இளவரசி மிக சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தார்.

அந்த இளவரசி பழம், காய்கறிகள், மீன் வகைகளை அதிக அளவில் சாப்பிட்டு இருப்பார் என கலிபோர்னியா பல்கலைகழக ஆய்வாளர் மருத்துவர் கிரிகோரி தாமஸ் கூறினார்.

கைத்தொலைபேசியில் பேசினால் மறதி நோய் மறைந்து போகும்: ஆய்வில் தகவல்


கைத்தொலைபேசியில் பேசினால் மறதி குணமாகும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. "அல்ஷ்கெய் மெர்ஷ்" என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது. இந்த நோயை ஜேர்மனியை சேர்ந்த ஆலியோஸ் என்ற விஞ்ஞானி கடந்த 1906ம் ஆண்டு கண்டுபிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து கைத்தொலைபேசியில் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை கைத்தொலைபேசிகள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.

இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கைத்தொலைபேசியில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

Saturday, May 21, 2011

தமிழக முஸ்லீம் அரசியல் தளத்தில் தமீம் அன்சாரி!!


தமீம் அன்சாரி நாகை மாவட்டம், நாச்சி குளம் என்ற ஊரைச்சேர்ந்தவர். முஸ்லீம் சமூகத்தில் இருந்து மிக இளம் வயதிலே அரசியல் தளத்துக்கு வந்தவர்.

சிறந்த செயல்வீரர், இவரின் தோல்வி உண்மையிலேயே தமிழக முஸ்லிம்களை பொருத்தவரை இழப்பென்றே சொல்லலாம்.

தமிழக முஸ்லீம் தலைவர்களில் தமீம் அன்சாரி ஒரு துடிப்பான இளைஞ்ஞர். இவர் ஜெயித்து சட்ட சபைக்கு சென்றிருந்தால், முஸ்லீம் மக்களின் குரலாக ஒலித்திருப்பார்.

எமக்கு தேவை ஆயிரம் நரிகளின் ஊளைகளல்ல. ஒரு சிங்கத்தின் கர்ஜனையே. அந்த வாய்ப்பு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தமீம் அன்சாரிக்கு இல்லாமல் போனது கவலைக்குரிய விசயமாகும்.

சிங்கத்தின் வாலாய் இருப்பதைவிட கட்டெறும்பின் தலையாயிருப்பதே மேல்" என்று மமக முடிவெடுத்து தனிச்சின்னத்தில் நின்று 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பாராட்டத்தக்க விசயமாகும்.

நன்றி : சிந்திக்கவும்

Thursday, May 19, 2011

நீதி கேட்கும் பிஞ்சு குரல்கள்!!

உள்ளம் பதைக்குதடா!



உயிர் துடிக்குதடா.



கள்ளமில்லா பிள்ளை உடல் ..



துளைத்த உன் சூலத்தின் ..



முனை மழுங்கிவிட்டாலும் ..



என் மனத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை !!



உன் முகம் காணும் ..



நேரமெல்லாம் என் இகம் ..



மறந்து போகிறேனே மோடி!!



உன்னை பெற்றவளும் பெண்தானோ ?



இல்லை பிசாசை பெற ..



பெண்ணாய் பிறந்த பேயோ?!!

25 காசுக்கு டாட்டா பை பை!!

டெல்லி , 25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாது. ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

25 காசு நாணயம் ஜூன் 30க்குப் பிறகு செல்லாது. எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது அந்த நாணயங்களை அரசுடைமை வங்கிகளின் சிறு நாணய பரிவர்த்தனையில் ஈடுபடும் கிளைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஜூன் 29 ம் தேதி வங்கி அலுவலக நேரம் முடியும்வரை இவற்றை மாற்றிக் கொள்ள முடியும். இதை ரிசர்வ் வங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை கண்டுபிடித்தது சீன முஸ்லிம்கள்!!


நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் 15 தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார்.

அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.

அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்? கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He,) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது.

சீன முஸ்லிம்கள் கடல்வழி ஆராய்ச்சியில் செய்த பங்களிப்புகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. சீன வரலாறு முழுக்க ஷெங் ஹி போன்ற முஸ்லிம்கள் தங்கள் மண்ணிற்கு செய்த பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சீனாவை பொறுத்தவரை இனம் சார்ந்தே மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகின்றது. இதுவரை 56 இனங்கள் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹன் (Han) இன மக்களே பெரும்பான்மையினர் (91%). மீதமுள்ள 55 இனத்தவர் சிறுபான்மையினர். இந்த 55-ல் பத்து இனத்தவர்கள் முஸ்லிம்கள்.

இந்த பத்து முஸ்லிம் இனத்தவரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் உய்குர் (Uyghur or Uighur) மற்றும் ஹுய் (Hui) இனத்தவர்கள். இன்றைய சீனாவின் முஸ்லிம் மக்கள் தொகை, சுமார் 8 கோடியில் இருந்து 10 கோடி வரை இருக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் மக்கள் தொகையில் இருபதில் ஒரு பங்கு தான் முஸ்லிம்கள் என்றாலும், சீனாவின் நிலப்பரப்பில், ஆறில் ஒரு பங்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.

http://www.sinthikkavum.net/2011/05/blog-post_6198.html?spref=fb

Wednesday, May 18, 2011

தவிர்ந்து கொள்ளுங்கள் !!! தீய பேச்சுக்கள்

நம் நாவிலிருந்து உதிரும் பேச்சின் கடினத்தை விளங்காமல் அடுத்தவரது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர்களுக்கு நபியவர்கள் விடுக்கும் எச்சரிக்கை இதோ:
“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6477)
இதைப் போன்று, ஒருவர் செய்த தவறுக்காக அவரின் பெற்றோரைத் திட்டும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இவைகள் அறியாமைக் காலப் பழக்கங்கள் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஉரூர், நூல்: புகாரி (30)

Tuesday, May 17, 2011

அதிகபட்சம் 73,271; குறைந்தபட்சம் 202!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் அதிகபட்ச வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றவர் 73,271 வாக்குகளிலும் குறைந்தபட்சமாக 202 வாக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் அஇஅதிமுகவின் சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பளார் சி. கோவிந்தசாமியை விட 73, 271 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

எழும்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் கே. நல்லதம்பியிடம் 202 வாக்குகளில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

கோடையில் குளிர வைக்கும் நில‌க்க‌டலை:





இதை அவித்து சாப்பிட்டாலும், வ‌றுத்து சாப்பிட்டாலும் ந‌ல்ல‌ சுவையைத்த‌ரும். வ‌றுத்து சாப்பிடுவ‌தை விட‌ அவித்து சாப்பிடுவ‌து ந‌ல்ல‌து என்று சொல்வ‌ர். இத‌ன் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி தான் க‌ட‌லை மிட்டாய்.

கோடையில் குளிர வைக்கும் இள‌நீர்:





இது வீட்டுப்பிராணி என்று சொல்வ‌து போல் ந‌ம்மூரில் எல்லா வீடுக‌ளிலும் ப‌ரவலாக தென்னை மரங்கள் இருக்கும். உட‌லுக்கு ந‌ல்ல‌ குளிர்ச்சி த‌ரும் இய‌ற்கைப்பான‌ம். இதையும் ம‌க்க‌ள் சுவையைக்கூட்ட‌ சில‌ எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்து ப‌ருகுவ‌ர் (அதான் ப‌ன்னீர் ம‌ற்றும் சீனி சேர்த்த‌ல்).

Sunday, May 15, 2011

தமிழக அமைச்சரவை பட்டியல்

ஜெயலலிதா - முதல் அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் -நிதி அமைச்ச...ர்
கே.ஏ.செங்கோட்டையன் - வேளாண்மைத்துறை
நத்தம் ஆர்.விஸ்வநாதன் - மின்துறை, மதுவிலக்கு கலால்
கே.பி. முனுசாமி - உள்ளாச்சித்துறை ஊராக வளர்ச்சி
சி.சண்முக வேலு - தொழில்துறை
ஆர.வைத்திலிங்கம் - வீட்டு வசதி
அக்ரி கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை
சி.கருப்பசாமி - கால்நடைத்துறை
பி.பழனியப்பன் - உயர்கல்வித்துறை
சி.வி.சண்முகம் - பள்ளி கல்வித்துறை
செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை
கே.டி.பச்சமால் - வனத்துறை
எடப்பாடி பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை சிறு துறைமுகங்கள்
எஸ்.வி.சண்முகநாதன் - அறநிலையத்துறை
கே..வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை
எஸ்.வி. வேலுமணி - சிறப்புத்திட்ட அமலாக்கம்
டி.கே.எம்.சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
எம்.சி.சம்பத் - ஊரகத்தொழில்துறை
பி.தங்கமணி - வருவாய்துறை
ஜி.செந்தமிழன் - செய்தித்துறை மற்றும் விளம்பரத்துறை
கோகுலஇந்திரா - வணிகவரித்துறை
ராமஜெயம் - சமூக நலத்துறை
பி.வி.ரமணா - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை
ஆர்.வி.உதயகுமார் - தகவல் தொழில்நுட்பம்
என்.சுப்பிரமணியன் - ஆதிதிராவிட நலத்துறை
வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை
என்.மரியம் பிச்சை - சுற்றுச்சூழல்துறை
கே.ஏ.ஜெயபால் - மீன்வளத்துறை
இ.சுப்பையா - சட்டத்துறை
புத்தி சந்திரன் - சுற்றுலாத்துறை
எஸ்.டி.செல்லப்பாண்டியன் - தொழிலாளர் நலத்துறை
டாக்டர் வி.எஸ்.விஜய் - மக்கள் நல்வாழ்வுத்துறை
என்.ஆர். சிவபதி - விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை

இந்த அமைச்சரவையில் என்.மரியம்பிச்சை என்ற ஒரு முஸ்லிம் இடம்பெருகின்றார். இவர் திருச்சி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்பதும் திமுக அமைச்சர் கே.என்.நேருவை தோற்கடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Saturday, May 14, 2011

பட்டுக்கோட்டை சட்டமன்ற தேர்தல் முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

வேட்பாளர் கட்சி வாக்குகள் சதவீதம் சின்னம் வரிசை
என்ஆர் ரெங்கராஜன் காங்கிரஸ் 55482 38 கை 1
N. செந்தில் குமார் தேமுதிக 46703 32 முரசு 2
ஏஆர்எம் யோகானந்தம் சுயேட்சை 22066 15 சட்டை 3
முரளி கணேஷ் பாஜக 10164 6 தாமரை 4
S. செந்தில் குமார் சுயே 6775 4.6 கூடை 5
சரவணன் இஜக 1424 0.97 6
ஐரின் சுயே 1358 0.93 7
சிங்காரவடிவேலன் சுயே 1195 0.82 8
இன்பரசன் பகுஜன் 1186 0.81 9

சின்னஞ்சிறு மனிதனின் கண்களிளே அதிசையம்


'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக்கொள்கிறானா?
'ஏராளமான பொருளை நான் அழித்தேன்' என்று அவன் கூறுகிறான்.
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:6to9)

என்று மனிதர்களுக்கு இறைவன் செய்த அருட்கொடைகளை சுட்டிக்காண்பித்து மனிதர்கள் ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்க வேன்டும் என்பதர்க்காக உதாரனங்களை குறிப்பிடுகின்றான்.
இப்போது கண்களைப் பற்றி சில தகவல்களை அறிந்துகொள்வோம்.

இந்த உலகத்தைக் கண்டு ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு - கண். இது எவ்வாறு இயங்குகிறது?

நமது கண் ஒரு கேமிராவைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு கேமிரா பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி(டெவலப்) செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது.


இதில் ஃபிலிம் போன்றுள்ள ‘கார்னியா’(விழிப்படலம்) என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, ‘கார்னியா’ திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள ‘லென்ஸ்’-ஐச் சென்றடைகிறது. இந்த ‘லென்ஸ்’ தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’ எனப்படுகிறது.






கேமிரா-வில் உள்ள ஃபிலிமைப் போன்று இயங்கும் ‘ரெடினா’-வில், ‘லென்ஸ்’ ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்தி(டெவலப்) செய்யப்படுகின்றன

இந்த சின்னஞ்சிறு கண்களிளே இத்தனை
வேளைகளை வைத்திருக்கும் படைப்பாளனான அந்த ஓர்இறைவன் அல்லாஹ்வை மறந்து, இறைவன் படைத்தவற்றை மனிதர்கள் வணங்குவது மாபெரும் பாவமும், இறைவனுக்கு செய்கின்ற துரோகமுமாகும்.



நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்(இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே


வணங்குங்கள் (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?(திருக்குர்ஆன்10:3)
(அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (திருக்குர்ஆன்16:17 )

இறைநம்பிக்கைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்

உங்களில் முன் வாழ்ந்த மக்களில் மூவர் தூர பயணத்தில் இருக்கும் போது இரவாகி விட்டது ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதில் நுழைந்தார்கள். அப்பொழுது ஒரு பாறாங்கல் உருண்டோடி வந்து அக்குகையின் வாசலை அடைத்து விட்டது. அல்லாஹ்விடம் பிரார்ப்பிப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்கிற முடிவுக்கு அவர்கள் வந்தனர்


அவர்களில் ஒருவர் இறiவா ! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர் அவ்விருவருக்கும் முன்பதாக நானோ, எனது மனைவி பிள்ளகளோ, எனது அடிமைகளோ உண்ண மாட்டோம். ஒரு நாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்;று விட்டேன் நான் திரும்பி வருவதற்குள் அவர்கள் இருவரும் உறங்கி விட்டனர் அவர்களுக்காக பாலைக் கறந்தேன் அவர்களை எழுப்புவதை, அல்லது அவர்களுக்கு முன்பதாக நாங்கள் அருந்துவதை விரும்பாமல் எனது பெற்றோர் விழிக்கும் வரை (வைகறை வரை) காத்திருந்தேன் அவர்கள் விழித்ததும் அவர்களுக்கு புகட்டினேன் அதன் பிறகே நாங்கள் அருந்தினோம். இறiவா ! இதனை நான் உனது திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் இந்த பாறாங்கல்லை எங்களை விட்டும் அகற்றுவாயாக! எனக்கூறியதும் பாறாங்கல் ஓரளவு நகர்ந்தது,


இரண்டாமவர் கூறினார் இறைவா ! எனது உறவுக்காறப் பெண்ணொருத்தி அவள் எனக்கு மிகப்பிரியமானவளாக இருந்தால் ஆண்கள் பெண்களை நேசிப்பதில் மிக அதிகமாக அவளை நான் நேசித்தேன் பின்னர் நான் அவளை எனது இச்சைக்காக நாடினேன் எனினும் அவள்(எனது ஆசைக்கு இணங்க) மறுத்து விட்டாள். பின்னர் பஞ்சமான ஓர் ஆண்டு வந்தது அப்பொழுது அவள் என்னிடம் வந்து பொருளாதார உதவிக் கோரினாள் அப்பொழுது அவள் எனக்கு விதித்த தடையை நீக்கி விட வேண்டும் எனக் கூறி அவளுக்கு 120 பொற்காசுகளைக் கொடுத்தேன் அவளும் சம்மதித்து பெற்றுக்கொண்டால் அவளை நெருங்கும் பொழுது அல்லாஹ்வை பயந்து கொள் ! முத்திரையை அதற்குரிய உரிமையின்றி உடைத்து விடாதே! எனக்கூறினாள் அல்லாஹ்வுக்கு பயந்துகொள் என்று சொன்ன மாத்திரத்திலேயே நான் விலகி விட்டேன் அத்துடன் அவளிடம் கொடுத்த பொற்காசுகளையும் அவளிடமே விட்டும் விட்டேன் இதை நான் உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் இந்த பாறாங்கல்லை விலகச் செய்திடுவாயாக ! எனக் கூறியதும் மீண்டும் ஓரளவு விலகியது.



மூன்றாமவர் கூறினார் இறiவா ! நான் பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கினேன் அதில் ஒருவர் மட்டும் அவருடைய கூலியை வாங்காமல் சென்று விட்டார் எனினும் அவரது கூலியை எனது பண்ணையில் தனியாக முதலீடு செய்து அதனுடைய வரவு செலவை பாதுகாத்து வந்தேன் அதிலிருந்து பல செல்வங்கள் பெருகி வந்தன. சில காலத்துக்குப் பிறகு அந்த வேலையால் என்னிடம் வந்து ஓ இறை அடியாரே ! எனது கூலியை நிறைவேற்றுவீராக ! என்று கூறினார் அதற்கு நான் நீர் பார்க்கும் இந்த ஒட்டகைகள், மாடுகள், ஆடுகள் அடிமைகள் அனைத்தும் உனது சொத்துக்கள் தான் என்றேன். அதற்கவர் ஓ இறை அடியாரே என்னை நீர் கேலி செய்கிறீரா? என்றார் அதற்கு நான் உம்மை கேலி செய்ய வில்லை உண்மையைத்தான் சொல்கிறேன் என்றேன். பிறகு நான் கூறியபடியே அவரது எல்லாப்பொருள்களையும் எடுத்து சென்றார் அதில் அவர் எந்தப் பொருளையும் விட்டு செல்ல வில்லை.



இறiவா! இதை நான் உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் எங்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையை எங்களை விட்டு அகற்றுவாயாக! என்றதும் பாறை முழுமையாக நகர்ந்தது அவர்கள் அனைவரும் அக்குகையிலிருந்து அல்லாஹ்வை தியானம் செய்தவர்களாக வெளியேறினர்.

அல்லாhஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூற கேட்டதாக உமர் ( ரலி ) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: புகாரி, முஸ்லிம்

ஷைத்தான் விரும்புவதெல்லாம்

2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.


5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.


5:91. நிச்சயமாக , ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

கேரளா சட்டசபை தேர்தலில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 140 சட்டசபை தொகுதிகளை கொண்ட கேரளாவில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.இது கடந்த 2006 தேர்தலில் வென்ற சட்டசபை இடங்களை காட்டிலும் 11 சீட்டுக்கள் அதிகமாகும்

Sl. No. Names---------------------Constituency--------------Party



1 PB Abdurazaq---------- Manjeshwar---------- Muslim League

2 NA Nellikkunnu---------- Kasargod---------- Muslim League

3 KM Shaji---------- Azhikode---------- Muslim League

4 AP Abdullakkutty---- Kannur---------- INC

5 K Kunhammed Master-- Perambra---------- CPI (M)

6 Dr MK Muneer---------- Kozhikode South---- Muslim League

7 Elamaram Kareem--- Beypore---------- CPI (M)

8 PTA Raheem---------- Kunnamangalam--- CPI (M) independent

9 VM Ummer Master--- Koduvally--- Muslim League

10 C Moin Kutty---- Thiruvambadi---- Muslim League

11 K Muhammedunni Haji- Kondotty---------- Muslim League

12 PK Basheer---------- Ernad---------- Muslim League

13 Aryadan Muhammed--- Nilambur---------- INC

14 Adv M Ummer---------- Manjeri---------- Muslim League

15 Manjalamkuzhi Ali--- Perinthalmanna---------- Muslim League

16 TA Ahmed Kabeer--- Mankada---------- Muslim League

17 P Ubaidulla---------- Malappuram---------- Muslim League

18 PK Kunjalikkutty---- Vengara---------- Muslim League

19 Adv KNA Qader---- Vallikkunnu---------- Muslim League

20 PK Abdurabb---------- Tirurangadi---------- Muslim League

21 Abdurahman Randathani Tanur---------- Muslim League

22 C Mammootty---------- Tirur---------- Muslim League

23 Abdussamad Samadani- Kottakkal---------- Muslim League

24 KT Jaleel---------- Thavanur---------- CPI (M) independent

25 CP Mohammed---------- Pattambi---------- INC

26 KS Saleekha---------- Shornur---------- CPI (M)

27 M Hamza---------- Ottappalam---------- CPI (M)

28 Adv N Shamsudheen-- Mannarkkad---------- Muslim League

29 Shafi Parambil---------- Palakkad---------- INC

30 KV Abdul Khader--- Guruvayur---------- CPI (M)

31 Anvar Sadath---------- Aluva---------- INC

32 VK Ibrahim Kunju-- Kalamasseri---------- Muslim League

33 Adv AM Ariff---------- Aroor---------- CPI (M)

34 AA Azeez---------- Eravipuram---------- RSP

35 Varkala Kahar---------- Varkala---------- INC



twocircles.net

Flag this messageஎண்ணிக்கையில் 2 வேட்பாளர்கள் குறைந்த தமிழக சட்டமன்றம்

தமிழகத்தில் கடந்தமுறை வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களை காட்டிலும் இந்த முறை குறைவான இடங்களையே வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த முறை 7 முஸ்லிம் உறுப்பினர்கள் சட்டசபையில் இடம் பெற்றனர்.ஆனால் இந்த ,முறை வெறும் ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.இது கடந்த முறையை காட்டிலும் அதிகமாகும் கேரளா மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாகிய இந்த சட்டமற்ற தேர்தலில் தமிழகத்தில் மட்டும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Sl. No. Names-----------------------------------Constituency------------------Party

1. T.P.M. Mohideen Khan---------------Palayamkottai------------------DMK

2. Jawahirullah----------------------------Ramanathapuram--------------Manithaneya Makkal Katchi

3. Abdul Raheem--------------------------Avadi----------------------------AIADMK

4. Aslam Basha A.------------------------Ambur---------------------------Manithaneya Makkal Katchi

5. A.MOHAMMED JOHN---- Ranipet- All India Anna Dravida Munnetra Kazhagam




NSA KHADIR
எண்ணிக்கையில் 2 வேட்பாளர்கள் குறைந்த தமிழக சட்டமன்றம்

தமிழகத்தில் கடந்தமுறை வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களை காட்டிலும் இந்த முறை குறைவான இடங்களையே வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த முறை 7 முஸ்லிம் உறுப்பினர்கள் சட்டசபையில் இடம் பெற்றனர்.ஆனால் இந்த ,முறை வெறும் ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.இது கடந்த முறையை காட்டிலும் அதிகமாகும் கேரளா மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாகிய இந்த சட்டமற்ற தேர்தலில் தமிழகத்தில் மட்டும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Sl. No. Names-----------------------------------Constituency------------------Party

1. T.P.M. Mohideen Khan---------------Palayamkottai------------------DMK

2. Jawahirullah----------------------------Ramanathapuram--------------Manithaneya Makkal Katchi

3. Abdul Raheem--------------------------Avadi----------------------------AIADMK

4. Aslam Basha A.------------------------Ambur---------------------------Manithaneya Makkal Katchi

5. A.MOHAMMED JOHN---- Ranipet- All India Anna Dravida Munnetra Kazhagam




NSA KHADIR

33 முஸ்லிம் வேட்பாளர்கள் அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

126 தொகுதிகளை கொண்ட அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் 33 முஸ்லிம் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.இது கடந்த 2006 சட்டசபையில் இடம்பெற்ற வேட்பாளர்களை காட்டிலும் 8 பேர் அதிகமாகும்



Assam: Newly elected Muslim MLAs

Sl.No.--Names-----------------------------Constituency-----------------------Party

1. Rafiqul Islam------------------------ Jania--------------------All India United Democratic Front

2. Aminul Islam--------------------------Dhing-----------------All India United Democratic Front

3. Abdur Rahman Ajmal----------------Salmara South-------All India United Democratic Front

5. Javed Islam ---------------------------Mankachar-------------Independent

6. Sheikh Shah Alam ………….------Goalpara West…….-All India United Democratic Front

7. Jahan Uddin---------------------------Dhubri------------------All India United Democratic Front

8. Dr. Nazrul Islam----------------------Laharighat---------------Indian National Congress

9. Rockybul Hussain--------------------Samaguri-----------------Indian National Congress

10. Abdur Rahim Khan-------------------Barpeta-----------------All India United Democratic Front

11. Rekibuddin Ahmed-------------------Chaygaon---------------Indian National Congress

12. Sukur Ali Ahmed---------------------Chenga------------------Indian National Congress

13. Abdul Muhib Mazumder--------------Hailakandi------------Indian National Congress

14. Moin Uddin Ahmed-------------------Jaleswar--------------All India United Democratic Front

15. Aklius Tirky----------------------------Sarupathar------------Indian National Congress

16. Abu Taher Bepari----------------------Golakganj--------------Indian National Congress

17. Ali Hossain-----------------------------Sarukhetri------------ All India United Democratic Front

18. Rafuqul Islam--------------------------Jonia------------------All India United Democratic Front

19. Abdur Rehman Khan------------------Barpeta--------------All India United Democratic Front

20. Sahidul Alam Choudhury------------Algapur--------------Asom Gana Parishad

21. Monowar Hussain--------------------Goalpara East---------All India United Democratic Front

22. Siddique Ahmed----------------------Karimganj South---- Indian National Congress

23. Jamal Uddin Ahmed--------------Badarpur------------ Indian National Congress

24. Anamul Haque----------------------Sonai----------------- Indian National Congress

25. Ataur Rahman Mazarbhuiya-------Katigora---------- All India United Democratic Front

26. Hafiz Basir Ahmed-----------------Bilasipara West--- All India United Democratic Front

27. Gul Akhtara Begum------------ Bilasipara Eest----- All India United Democratic Front

28. Abdul Latif Mondal-------------Abhayapuri North--- All India United Democratic Front

29. Abul Kalam Azad---------------Bhabanipur------------ All India United Democratic Front

30. Sherman Ali Ahmed-----------Baghbar----------------- All India United Democratic Front

31. Ilias Ali-------------------------Dalgaon------------------- Indian National Congress

32 Mazibur Rahman-------------Rupohihat----------------- All India United Democratic Front

33. Mohammed Sirajuddin Ajmal---Jamunamukh-------- All India United Democratic Front



TWOCIRCLES.NET

அமெரிக்கர்கள் நினைத்ததை சாதிப்பார்கள் : ஒபாமா

ஒசாமா பின்லேடன் அமெரிக்க வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் மற்றும் எளிய நாடுகளை ஆக்கிரமிப்பு சுரண்டல் தனக்கு விருப்பமான பொம்மை ஆட்சி என்று எப்படியும் தனது காலனியாதிக்கத்தை தொடர்ந்து நடத்திவரும் ஒரு நாட்டினால் கொல்லப்பட்டார்.ஒசாமா கொள்ளப்பட்டது எப்படி ஒரு மர்மமோ அதை போலத்தான் இரட்டை கோபுர தாக்குதலும் ஒரு மர்மம்.யார் தாக்கியது என்று தெரியாமலே அதற்கான எந்த ஒரு விசாரணையும் சரியான வகையில் நடக்காமலும் இரட்டை கோபுட தாக்குதல் என்பது நிட்சயம் உள்ளிருப்பு வேலை என்று அமெரிக்காவின் பல பிராபலமான கட்டடவியல் வல்லுனர்கள் தகுந்த ஆதரங்களுடன் கூறிய பின்பும் கூட அமெரிக்க அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.காரணம் ஆப்கன் என்ற ஒரு நாட்டை தாக்கவேண்டும் அந்த நாட்டில் அமெரிக்கசார்பு பொம்மை ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதே அதன் நோக்கம்.அப்பொழுதுதான் எண்ணெய் வளம் மிக்க ஈராக் , ஈரான் மற்றும் சுற்றியுள்ள அரபு நாடுகளை தனது காட்டுப் பாட்டுக்குள் வைக்கமுடியும் என்பதே .இப்பொழுது ஒசாமாவும் கொல்லப்பட்டுவிட்டார் இனி இரட்டை கோபுர தாக்குதல் எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் முடிவுக்கு வந்துவிடும் எப்படியும் இரட்டை கோபுர தாக்குதல் உண்மையான விசாரணை நடக்கவிடாமல் அமெரிக்க பத்திரிக்கைகள் ஒசாமா ஒசாமா என்று மீண்டும் மீண்டும் எழுதி தடுத்துவிடுவார்கள்.உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றுஒருவர் நினைத்தால் கூட இந்த ஏகாதிபத்திய மீடியாக்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று கூறி தனிமைப்படுத்துவார்கள்.எது எப்படியோ இனி இரட்டை கோபுர தாக்குதலின் உண்மை வெளிவரும் என்பது சதேகட்டிற்குரியதே.

ஒசாமா கொல்லப்பட்ட பின்னர் பல நாடுகள் தங்களது வாழ்துக்களை அமெரிக்க அரசிற்கு தெரிவித்தது.அமெரிக்காவின் அதிபர் ஒபாமா "அமெரிக்கர்கள் என்றும் நினத்ததை சாதிப்பார்கள் "என்று ஒசாமாவின் கொலைக்கு விளக்கம் தந்தார்.இந்தியாவும் தனது பங்கிற்கு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு வெற்றி என்று பறை சாற்றியது.மேலும் 1992 ஆம் மும்பை தொடர் வெடிகுண்டு நடத்தப்பதில் கொல்லப்பட்ட 257 பேர் மரணத்திற்கு காரணமாக இந்தியாவால் கருதப்படும் தாவூத் இப்ராகிம் மற்றும் 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் நாட்டில் நடக்கும் பல்வேறு தாக்குல்களில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் பங்கு உள்ளது என்னும் உண்மையை கண்டறிந்த ஹேமந்த் கர்கரே உட்பட 164 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இந்தியாவால் குற்றவாளி என கருதப்படும் ஹபீஸ் சயீத் ஆகியோரும் கைது செய்யப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று கூறினார் நமது உள்துறை அமைசர் இது நியாயமான கோரிக்கை.குற்றவாளிகள் அவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நிட்சயம் தண்டிக்கப் படவேண்டும்.ஆனால அதே நேரத்தில் 1984 ஆம் ஆண்டு இந்தியாவின் போபால் என்ற இடத்தில் Union Carbide India Limited என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரமான விசா வாய்வு கதிர்வினால் கிட்டத்தட்ட 5000 - 18000 பேர்வரை கொள்ளப் பட்ட வழக்கில் இன்றுவரை நீதி கிடைப்பதாக தெரியவில்லை பாதுகாப்பு குறைபாடுகளே இதற்கான காரணம் என்று உண்மை கண்டறியப்பட்ட பின்னரும் கூட அதற்கான முயற்சியில் இந்தியா அரசும் ஈடுபடுவதாக தெரியவில்லை.காரணம் இந்த நிறுவனம் அமெரிக்க நிறுவனம் என்பதே.மேலும் குற்றம் சாட்டப் பட்ட வாரேன ஆண்டசன் நாட்டில் இருக்கும் போதே பாதுகாப்பாக அனுப்பிவைத்தே நமது ஆட்சியாளர்கள் தானே.ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற இந்த கொலைகாரன்

ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும்

அமெரிக்காவில் தான் உள்ளான் என்பது அனைவருக்கும் தெரியும் அப்படி இருந்து கூட இந்தியா அவனை கைது செய்ய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.ஆனால் இது குறித்து எந்தவிதமான கருத்தை கூட கூறாமல் நழுவுகிறார் நமது அமைசர். ஆனால் எங்கு இருக்கிறான் என்றே தெரியாத தாவூதை பிடிக்க இந்தியா அரசு தீவிர முயற்சி எடுக்கிறதாம்.எனேற்றால் நாம் எதிர்ப்பது நம்மை விட எளியவனாக இருக்கும் பட்சத்தில் நமக்கு பிராட்சனை இல்லை.ஆனால் அமெரிக்கா போன்று உலக போலிசாக இருக்கும் போது இப்படித்தான்.உலக நீதிபதி என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவும் தெளிவாக உள்ளது அது என்னவெனில் அமெரிக்கர்கள் தாக்கப் படும் போது அந்த குற்றம் நிருபிக்கப் படாவிட்டாலும் கூட யார் தாக்கியது என்று தெரியவிட்டாலும் கூட நாங்கள் நினைத்த நாடுகளை தாக்குவோம்.அப்பாவிமக்கள் இலட்சக்கணக்கில் கொள்ளுவோம்.ஆனால் அதே நேரத்தில் அப்பாவி மக்கள் மரணத்திற்கு காரணமானவர்கள் அமெரிக்கர்கள் என்னும் பட்சத்தில் அவர்களை காப்பற்றவும் எந்தவிதமான உள்ளடி வேலைகளும் அமெரிக்கா செய்யும் என்பதே. அது ஒபமாவின் பேட்டியிலேயே தெளிவாக குறிப்பிடுகிறார் "அமெரிக்கர்கள் நினைத்ததை சாரிப்பார்கள்".தன்னுடைய ஆக்டோபஸ் கையின் மூலம் பல நாடுகளை அவர்கள் தனது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடும் பாலஸ்தீனியர்களை தனது மீடியாக்கள் மூலம் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தும் அமெரிக்காஆனால் அதே நேரத்தில் பலஸ்தீன நாட்டை அபகரித்து அந்த நாட்டின் அப்பாவி மக்களை தினம் தினம் கொன்று குவித்து கொண்டிருக்கும் இஸ்ரேலை நல்லவர்களை போல தனது மீடியாவினால் பரப்பிவருகிறது.அதுவும் ஜனநாயகம் என்ற ஒரு பெயரால்.எதிர்த்து பேசுபவர்களுக்கு பொருளாதார தடை.பின்னர் வழக்கம் போல ராணுவ நடவடிக்கை.நேற்று சதாம்

உட்பட பலர் இன்று ஒசாமா நாளை கடாபி ???

NSA KHADIR

59 முஸ்லிம்கள் வெற்றி பெற்ற மேற்கு வாங்க சட்டசபை


மேற்கு வங்கத்தில் நடந்துமுடிந்த சட்ட மற்ற தேர்தலில் முதன் முறையாக முஸ்லிம்கள் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.இந்தியாவில் 30% த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் இடங்களில் மேற்குவங்கமும் ஒன்று.294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவையில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் சுமார் 59 முஸ்லிம் உறுப்பினர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.இது கடைந்த 2006 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெற்றி பெற்ற இடங்களை காட்டிலும் 13 இடங்கள் கூடுதலாகும்.மேலும் முஸ்லிம்கள் மேற்கு வங்க சட்ட சபை வாரலாற்றில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றதும் இது தான் முதல் முறை.கேரளம் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உயர்ந்துள்ள இந்த சட்ட சபை தேர்தலில் தமிழகத்தில் மட்டும் எண்ணிக்கை 7 இலிருந்து 5 குறைந்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது ,இது முஸ்லிம்களின் ஒற்றுமையிமையையே காட்டுகிறது.மற்ற மாநிலங்களை பார்த்தாவது தமிழக முஸ்லிம்கள் பாடம் படிப்பார்களா?

NSA KADER

Thursday, May 12, 2011

பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீங்கியவர்களின் விபரங்களை அறிவது எப்படி?


உங்கள் பேஸ்புக் கணக்கில் முதல் நாள் பார்வையிடும் போது 200 நண்பர்கள் இருப்பார்கள்.
எனினும் சிலவேளைகளில் அடுத்த நாள் 196 நண்பர்கள் என இருப்பதை அவதானிக்கலாம்.

சில நண்பர்கள் உங்களை Un friend செய்துவிடுவார்கள். யாரெல்லாம் இவ்வாறு செய்தார்கள் என்பதை அறிந்து கொள்ள பேஸ்புக்கில் வசதியில்லை எனினும்
Twenty Feet எனும் வெப் அப்பிளிகேஷனில் உங்கள் நண்பர்களின் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட நண்பர் ஒருவர் நீங்கினால் அறிவிறுத்தும் படி கூறிவைக்கலாம்.

இதற்காக Twenty Feet எனும் தளத்திற்குச் சென்று பேஸ்புக் கணக்கை இணைத்துவிட வேண்டும்.

அவ்வாறு செய்த பின்னர் Twenty Feet எனும் தளம் ஒவ்வொரு நாளும் உங்கள் பேஸ்புக் கணக்கின் நண்பர் பட்டியலை சரிபார்த்து அதில் யாராவது விடுபட்டு இருந்தால் அவரின் விபரங்களை தெரியப்படுத்தும்.

கோடையில் குளிர வைக்கும் பலாப்ப‌ழ‌ம்:


இதை பக்குவமாக உறித்தெடுப்ப‌து என்ப‌து ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் செல்லாம‌ல் ப‌டிக்கும் பெரும் பாட‌ம். போர்க்களம் செல்ல ஆயத்தமாகும் படை வீரன் போல் இதை வெட்டும் முன்னர் பல தயாரிப்புகள் செய்ய வேண்டும். தின்ப‌த‌ற்கு இனிமையாக‌வும் மேலும் திண்ண‌‌ தூண்டும் முக்க‌னிக‌ளில் ஒரு ந‌ல்ல‌ சுவைமிக்க‌ ப‌ழ‌ம். இத‌ன் கொட்டையை அடுப்பில் இட்டு சுட்டு சாப்பிட்டால் அதுவும் இனிமையாக‌ இருக்கும். கீரை ஆக்கும் பொழுதும் வீட்டுப்பெண்க‌ள் இதை சேர்த்துக்கொள்வ‌ர். (கூடுத‌ல் சுவைக்கு ராலு போட‌ ம‌ற‌ந்துடாதியெ...)

கோடையில் குளிர வைக்கும் ம‌ர‌வ‌ள்ளிக்கிழ‌ங்கு:


ந‌ல்ல‌ ம‌ல்லிகைப்பூ போன்ற‌ நிற‌த்தில் அவித்து எடுக்க‌ப்ப‌டும் கிழ‌ங்கு சும்மா சாப்பிட்டாலும் பொடி வைத்து சாப்பிட்டாலும் நன்றாக‌த்தான் இருக்கும். இது ப‌ரினாம‌ வ‌ள‌ர்ச்சி பெற்று இன்று க‌டைக‌ளில் சுவை மிகு சிஃப்ஸாக‌ கிடைக்கிற‌து.

Tuesday, May 10, 2011

கோடையில் தோல் நோயிலிருந்து தப்ப அதிகமா தண்ணீர் குடிங்க

கத்திரி வெயில் காலமாகையால் தகிக்கும் வெப்பத்தில் வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். உடலின் எந்தப் பகுதியில் அதிக அளவில் சூரிய ஒளி படுகிறதோ அந்த இடத்தில் நோய் வரும். அதிக அளவிலான சூரியக்கதிர்கள் உடலில்படுவதால் தோல் சிவந்து, தடித்து கருகுவதுடன், தோலில் சுருக்கங்கள் தோன்றி கட்டிகளும் ஏற்படுகின்றன

இதற்குக்காரணம் சூரியக்கதிர்களில் உள்ள புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதினால்தான் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே காலை பத்துமணிமுதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் இந்த நேரத்தில் வெயிலில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

அல்ட்ரா வயலட் கதிர்கள்
சூரிய ஒளியில் உள்ள, மனிதரின் கண்களுக்கு புலப்படாத ‘அல்ட்ரா வயலட்’ கதிர்கள் தான் உடலில் வைட்டமின் ‘டி’ உண்டாக உதவுகிறது. இதனால் தான் காலை வெய்யில் உடலுக்கு நல்லது என்கிறார்கள். இருப்பினும் தோல் பாதிப்பிற்கு காரணம் இந்த கதிர்கள்தான். அதிக அளவில், அல்ட்ரா – வயலெட் கதிர்கள் தாக்கினால் உடலின் மரபணுக்கள் பாதிக்கப்பட்டு, தோல் திசுக்கள் உற்பத்தி செய்யும் இராசயன பொருட்கள் மாறுபடுகின்றன.

இந்த அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஃபோலிக் அமிலத்தை சிதைத்து அதன் குறைவை எற்படுத்துகின்றன. சூரிய ஒளியின் பாதிப்பை குறைக்க சருமம் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சருமத்தின் மேல்பகுதி கடினமாகி யு.வி. கதிர்கள் ஊடுருவாமல் தடுக்கின்றது. ‘மெலானின்’ (தோல் நிறத்தை கொடுக்கும் பொருள்) உற்பத்தி அதிகமாவதால் தோலின் நிறமும் அதிக கருமையாகிறது.

தோல் புற்றுநோய்

ஒருவருடைய தோலின் நிறத்துக்குக் காரணமான திகழ்வது மெலானின் எனப்படும் நிறச்சத்து. இதற்கு சூரிய ஒளியைத் தடுத்து தோல் புற்றுநோய் வராமல் காக்கும் சக்தி அதிகம். அதனால், கறுப்பு தோல் இருப்பவர்களுக்கு தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், வெள்ளைத் தோல் இருப்பவர்களுக்கு, தோலில் மெலானின் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு சூரிய ஒளியால் உண்டாகும் தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மருத்துவர்கள் ஆலோசனை

வெயில் காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அப்போது தண்ணீர் குடிக்காமல் விட்டால் கிட்னியில் கல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை, தோல் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் தோன்றும். அதிகம் தண்ணீர் குடிப்பது, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் தோல் பளபளப்பாக இருப்பதுடன் கோடையால் உடலில் உருவாகும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.

வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவைகளையும் தினமும் சேர்த்துக் கொள்ளவும். முள்ளங்கி, புடலங்காய், பூசணி உள்ளிட்ட நீர்க்காய்களை சமையலில் சேர்ப்பதன் மூலம் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிட்ரஸ் உள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகள் அவசியம் சாப்பிடவும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த ஸ்னாக்ஸ் வகைகளுக்கு பதிலாக ஏதாவது ஒரு பழ வகை எடுத்துக் கொள்வது நல்லது.

சத்தான உணவு உண்ணலாம்

சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாக படுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க சன்ஸ்கிரீன் லோஷன் உதவும். முகம் மற்றும் தோல்பகுதியில் படியும் தூசியினால் முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை ஏற்படலாம். நேரம் கிடைக்கும் போது முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவவேண்டும். காலையும் மாலையும் கஷ்டம் பார்க்காமல் குளித்து விட வேண்டும். உதடுகளில் ஏற்படும் தோல் வறட்சியை தடுக்க பழத்தால் உருவாக்கப்பட்ட லிப் கிரீம்கள் பயன்படுத்தலாம். மேலும் காட்டன் டிரஸ் கொஞ்சம் லூசாக இருக்கும்படி அணியவும்.

மைல்டான பெர்ப்யூம் துணையுடன் சத்தான உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். கடுமையான வெயிலில் மஞ்சள் பூசிச் செல்வது, தலைமுடிக்கு சாயம் தடவுவது, ஆகியவற்றை குறைத்துக்கொள்வதும் வெப்பத்தின் விளைவுகளில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளாம்.

Monday, May 9, 2011

அதிரை பள்ளிகளின் தேர்வு முடிவுகள்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிரை பள்ளிகளின் தேர்வு முடிவுகள். முதல் மூன்று இடம் பெற்ற மாணவ/மாணவிகள் விவரம்.


இமாம் ஷாபி பள்ளியில் பிளஸ்2 பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவ-மாணவிகள் :

இமாம் ஷாஃபி பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள் மாணவர்கள்: 25/29, மாணவிகள்:19/23
ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் 4 பேர்
200/200 -
தேர்ச்சி சதவீதம் 87%



முதலிடம் : பர்ஷிதா பானு
மொத்த மதிப்பெண்கள் :1123
இரண்டாமிடம் : சுமையா
மொத்த மதிப்பெண்கள் :1062

முன்றாமிடம்: நஸ்ரின். பி
மொத்த மதிப்பெண்கள்: 1008

காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்:



காதிர் முகைதின் ஆண்கள் பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள் 127/147
ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் 1
200/200 -
தேர்ச்சி சதவீதம் 86%
பள்ளியில் சேரும் மாணவர்கள் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களாகவோ, ஒன்றிரண்டு முறை அட்டெம்ட் அடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களோ இங்கு சேர்க்கப்படுகிறார்கள், 10ஆம் வகுப்பில் 300க்கும் மேல் பெறும் மாணவர்கள் வேறு ஊர்களுக்கோ, அல்லது வேறு பள்ளிகளுக்கோ சென்று விடுகிறார்கள். அத்துடன் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி இந்த ஆண்டு ஆங்கில வழி வகுப்பு ஒன்று துவங்கப்பட்டது. அதில் மட்டும் 7 பேர் தேர்ச்சி பெறவில்லை. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவீதம் தேர்ச்சி சதவீதம் சரிவு கண்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கணிதம் தேர்வு கடினமானதாக இருந்ததாக கூறப்படுகிறது.






முதலிடம்: அகமது அஸ்கர்
மொத்த மதிப்பெண்கள்: 1009


இரண்டாமிடம் :அஜாருதீன்
மொத்த மதிப்பெண்கள்: 981


மூன்றாமிடம்: இப்ராகிம்
மொத்த மதிப்பெண்கள்: 963

காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்: பள்ளியின் தேர்ச்சி விகிதம் : 96%



முதலிடம்: நபீலா பானு
மொத்த மதிப்பெண்கள் : 1143


இரண்டாமிடம்: தஸ்லீமா
மொத்த மதிப்பெண்கள் : 1102


மூன்றாமிடம் : ஆதிகா
மொத்த மதிப்பெண்கள் : 1076




காதிர் முகைதீன் (பெண்கள்) பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள் 137/142
ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவிகள்
200/200 இரண்டு பேர், ஒருவர் இரண்டுபாடத்தில்
தேர்ச்சி சதவீதம் 96%

காதிர் முகைதீன் பெண்கள் மேன்நிலைப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு மேம்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 83%. இந்த ஆண்டு 96 சதவீதம். மட்டுமே. 142 எழுதினர் அதில் 137 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பேர் செண்டம் அடித்துள்ளனர். ஒரு மாணவி accounts, commerce இரண்டிலும் 200 மதிப்பெண் பெற்றுள்ளார். இன்னொருமாணவி accounts ல் 200 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 11 பேர். பள்ளி முதல்வர் நம்மிடம் தெரிவிக்கையில் இந்த ஆண்டு நூறு சதவீதம் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று நம்மிடம் தெரிவித்தார்.

முதல்,இரண்டாம்,மூன்றாமிடம் பெற்று சாதனைபடைத்த மாணாக்கர்களையும் தேர்வில் வென்றவர்களையும் அதிரை எக்ஸ்ப்ரஸ் பாராட்டுவதோடு, தோல்வி அடைந்தவர்கள் மனம்துவன்றுவிடாமல் அடுத்தடுத்த தேர்வுகளில் வென்று பிரகாசமான எதிர்காலத்திற்கு அடியெடுத்து வைக்கவும் வாழ்த்துகிறோம்.

Sunday, May 8, 2011

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு - ஓசூர் மாணவி மாநிலத்திலேயே முதலிடம்!

கடந்த மாதம் நடந்து முடிந்த +2 தேர்வில் மாநிலம் முழுவதும் 7.75 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையடுத்து தேர்வு முடிவுகளை இயக்குனர் வசுந்தரா தேவி இன்று வெளியிட்டார்.

+2 தேர்வு முடிவுகளை இந்நேரம்.காம் தளத்தில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து பெறலாம்



தமிழ்நா‌ட்டி‌ல் மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரம் பேரும், மாணவிகள் 3 லட்சத்து 63 ஆயிரம் பேரும், தனித் தேர்வர்கள் 57 ஆயிரம் பேரும் +2 தேர்வு எழுதினர். அவர்களில் ஓசூரைச் சே‌ர்‌‌ந்த மாண‌வி ரேகா 1190/1200 பெற்று தமிழகத்திலேயே முதலிடத்தைப் பெற்று உள்ளார்.

இரண்டாவது இடத்தை க‌ள்ள‌க்கு‌றி‌ச்‌சி பார‌தி மெ‌ட்‌ரிகுலேச‌ன் மாணவ‌ன் வே‌ல்முருக‌ன் (1187/1200) பெ‌ற்று‌ள்ளா‌ர்.

1186 ம‌‌தி‌ப்பெ‌ண்க‌ள் பெ‌ற்ற மேலும் நான்கு பே‌ர் 3வது இட‌த்தை ‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

Exam Results | 12th Results | CBSE Results | HSC Results | Inter Results | Intermediate Results

Exam Results | 12th Results | CBSE Results | HSC Results | Inter Results | Intermediate Results

பாபர் மசூதி வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது


டெல்லி: பாபர் மசூதி-ராம் ஜென்மபூமி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இந்து, முஸ்லீம் அமைப்புகள் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்குகிறது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி மற்றும் ராமர் ஜென்மபூமி ஆகியவை அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலத்தை இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் ஒரு முஸ்லீம் அமைப்புக்கு சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும் அது தெரிவித்தது.

இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இந்து, முஸ்லீம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் நாளை நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகின்றன.

நிர்மோகி அகாரா, அகில் பாரத ஹிந்து மகாசபா, ஜமாயத் உலமா இ ஹிந்த், சன்னி மத்திய வக்பு வாரியம் ஆகியவை இந்த அப்பீல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அதேபோல பகவான் ராம் விரஜமான் சார்பிலும் மனு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது.

உடல் எடையை குறைக்க, நோயில்லாமல் வாழ!!!


உடற்பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைக்க தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். ஆனால் இறுதியில் மிஞ்சுவது என்பது எடைக்குறைப்பில் ஏமாற்றமே!. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமே போதுமா? போதாது. உணவை உண்பதில் கவனம் தேவை.

கலோரி கூடிய உணவுகளான இனிப்பு, காரம், மற்றும் எண்ணெய், பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் இருக்கக்கூடாது. பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும், கேரட், வெங்காயம், தக்காளி, கீரைவகைகள் இவைகளை பச்சையாக சாப்பிடவேண்டும்.

மேலும் தேவையற்ற உணவுகளான கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசம், முட்டை, பால், பால் சார்ந்த உணவுகள், தவிடு நீக்கப்பட்ட தானிய உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

காலை உணவை ஒன்பது அல்லது பத்து மணி என்று தாமதமாக உண்ண வேண்டும். இரவு உணவை ஆறு அலலது ஏழு மணி என்று சீக்கிரம் முடித்துவிடவேண்டும். அப்போது உண்ணும் உணவின் அளவும் குறையும். உடல் எடையும் குறையும்.

காலை உணவில் பழ ஜூஸ், மற்றும் பப்பாளி, ஆப்பிள் என்று சாப்பிடலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் என தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.

உணவை எத்தனை நேரம் வாயில் வைத்து மெல்ல முடியுமோ அத்தனை நேரம் வாயில் வைத்து நன்கு மென்று அதன்பின் உணவை உள்ளே இறக்கவேண்டும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகும்.

மணி அடித்தால் சாப்பாடு என்பது போல உண்ணும் நேரம் வந்துவிட்டதே என சாப்பிட உட்கார்ந்து விட கூடாது. நல்ல பசி வரும் வரை உணவைத் தொடக்கூடாது. பசி வந்தபின் இரண்டு டம்ளர் நீர் அருந்தவேண்டும்.

அதன்பின் அரைமணி நேரம் சென்ற பின் உணவை உண்ண வேண்டும். அப்போதும் அரைவயிறு உண்டபின் எழுந்துவிட வேண்டும். பசியை முழுவதுமாக சாகடிக்கக் கூடாது. பசியை முழுவதுமாக கொன்றுவிட்டால் உடலும், மூளையும் சோர்வான நிலையில் மந்தமாக இருக்கும். எனவே லேசான பசி இருக்கும் போதே சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்.

சாம்பார் நன்றாக ருசிக்கிறதே என்ற ஆசையோடு அதிக இட்லியை உண்ணக்கூடாது. அப்படி சாம்பாரின் சுவைக்கு அடிமையாகிவிட்டால் அந்த சாம்பாரை மட்டும் கொஞ்சம் எடுத்து ரசித்து குடித்து ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம். அப்போது அதிகப்படியாக இரண்டு இட்லி உள்ளே செல்வது குறையும்.

உணவைக் குறைப்போம், உடல் நலம் காப்போம். எனவே நல்ல மிளகு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு போன்ற மருத்துவ குணம் உள்ள பொருட்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

உடற்பயிற்சி மூலம் நாம் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். ஒரு மைல் நடந்தோமானால் சர்க்கரை, பருமன் குறையும். உடற்பயிற்சியில் இரண்டு வகைகள் உள்ளன, ஏரோபிக்ஸ், அன் ஏரோபிக்ஸ். இதில் ஏரோபிக்ஸ் என்பது சுறுசுறுப்பாக நடப்பது, ஓடுவது, நீச்சல் பயிற்சி போன்றவை இதில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

மற்றது அன் ஏரோபிக்ஸ் என்பது எடை தூக்குதல், ஜிம்னாடிக்ஸ் போன்றவை. இங்கே குறைந்த அளவிலேயே கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அதனால் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளே நீரிழிவு உள்ளவர்களுக்கும், வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லது.

நீங்கள் கேட்கலாம், 40-50 வயதுகளில் ஓடமுடியுமா? நீச்சல் அடிக்க முடியுமா? என்று நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சி என்பதே எங்கள் பதில். நடப்பதற்கு வயது வரம்பு தேவையில்லை. இருபாலரும் நடக்கலாம். தவிர உபகரணப் பொருட்களும் தேவையில்லை. செலவும் இல்லை. சாலையில் இறங்கி நடக்க வேண்டியதுதான் பாக்கி.

சராசரியாக ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்யலாம். அந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 4 - 5 கிலோ மீட்டர் வரை நடக்கலாம். பொறுமையாக வேகத்தை அதிகரித்தீரானால் 5 கிலோமீட்டர் என்பது ஒரு பொருட்டே அல்ல. எடை நோய்களுக்கு தடை

7 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்! நாளை பிளஸ் 2 ரிசல்ட்...


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன; 11 ம் தேதி முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் அளிக்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடந்தது. 5,477 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 23 ஆயிரத்து 545 பேர் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர். மாணவிகள் 3 லட்சத்து 67 ஆயிரத்து 102 பேர். சென்னையில் மட்டும் 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் 1,890 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை (9ம்தேதி) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வில் அனைத்து பாடங்களிலும் முதல் இடம் பெற்றவர்களின் விவரம் மற்றும் பாட வாரியாக முதல் இடம் பெற்றவர்களின் விவரம் வெளியிடப்படும்.
மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த முழு விபரம் அந்தந்த பள்ளிகளிலேயே காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும். மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்களை வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புபவர்கள் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசுத் தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.
மார்ச் மாதம் தேர்வு எழுதியவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பாடங்களில் விரும்பிய பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம். மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலம் பாடத் தாள் ஒவ்வொன்றுக்கும் தலா ஸீ550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஸீ275 விடைத்தாள் நகல் கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதேபோல மறு கூட்டல் செய்ய விரும்புவோர் எந்த ஒரு பாடத்துக்கும் மறு கூட்டல் கேட்டு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதே பாடத்துக்கு மறு கூட்டல் கேட்டு தற்போது விண்ணப்பிக்க வேண்டியதில்லை. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு விரும்பினால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 ரிசல்ட் பாற்க்க!

http://tnresults.nic.in/
http://results.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://dge2.tn.nic.in
http://www.pallikalvi.in/
http://squarebrothers.com/
http://results.sify.com
http://www.madrastimes.com/
http://www.indiacollegefinder.org/
http://www.maalaimalar.com/
http://kalvimalar.dinamalar.com
http://www.webulagam.com
http://www.collegesintamilnadu.com/

Saturday, May 7, 2011

ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு, மற்றும் புதுப்பித்தல்!

சென்னை: ஆன்-லைனில் அரசு வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வது தொடர்பாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதில் கடந்த 2010 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தமிழக வேலை வாய்ப்பு அலுவலகப்பணிகள் இணைய தளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக உயர்ப் பதிவேட்டின் விபரங்கள் அந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன் பின்னர் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள சுமார் 70 லட்சம் மனுதாரர்களின் பதிவு விபரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரத்தேவையில்லை மனுதாரர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இணையதளம் மூலமாக இதை செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மனுதாரர்கள் நெடுந்தொலைவிலிருந்து பயணம் செய்து சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டியதில்லை

இந்நிலையில் தற்போது மதுரையிலும் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு கிளை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால் 15 தென்மாவட்ட பட்டதாரி மனுதாரர்கள் சென்னைக்கு வராமல் மதுரை வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்திலேயே தங்களது பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் மற்றும் இதரப்பணிகளை செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலக, பதிவுப்பணிகள் இணையதளம் மூலமாக கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த இத்திட்டத்தின் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதாலும் அவை உடனுக்குடன் தொழில் நுட்ப வல்லுனர்களால் சரி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டம் முழுமையாகவும், சிறப்பாகவும் மனுதாரர்களை சென்றடையும் வகையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக வேலை வாய்ப்பு அலுவலகங்களின் தேவைக்கேற்ப இதர வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டு, அவ்வலுவலகப்பணிகள் தொய்வின்றி நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

முருங்கை மரமும் அதன் மருத்துவ குணமும்!!


வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது.

முருங்கையின் இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை.

முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

இரத்தம் சுத்தமடையும், மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

இலையின் சாறு விக்கல் போக்கும், அதிக அளவில் வாந்தி தூண்டும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும்.

கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவப்படுகிறது. கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது.

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும்.

வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.

உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

* நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

* முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

* முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

* முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

* முருங்கை பிஞ்சில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

* ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆற்றுகிறது.

* முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.

* வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது. முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.

* சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது.

ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

கோடையில் குளிர வைக்கும் மாங்காய்/மாம்ப‌ழ‌ம்:





ஒட்டு அல்ல‌து நாட்டு மாங்காய்க‌ள் வ‌யோதிக‌ம் அடைந்து ந‌ம‌க்கு ந‌ல்ல‌ சுவை த‌ரும் மாம்ப‌ழ‌ங்க‌ளாய் வகை, வ‌கையான‌ ர‌க‌ங்க‌ளில் குவிந்து கிடைக்கும். விலையும் அப்ப‌டித்தான். ஒரு கால‌த்தில் தெருவுக்கு வ‌ரும் மாம்ப‌ழ‌ங்க‌ளை அப்ப‌டியே வெட்டாம‌ல் ந‌ன்றாக் கையில் வைத்து ப‌க்குவ‌மாக‌ அமுக்கி அத‌ன் சாரு (ப‌ய‌ப்ப‌டாதீர்க‌ள் ப‌ள்ளிக்கூட‌ சார் இல்லை) வெளியில் வ‌ராம‌ல் சாப்பிடும் பொழுது சில‌ர் அத‌ன் கொட்டையைக்கூட‌ விட்டு வைக்காம‌ல் ச‌ப்பி சாப்பிடும் பொழுது அத‌ற்குள் என்றோ சென்று செட்டிலான‌ புழுவும் சேர்ந்தே வாயிக்குள் சென்று விடும். (அப்புற‌ம் என்ன? வ‌யிற்று வ‌லி என்று மீராசா டாக்ட‌ரிட‌ம் செல்ல வேண்டியது தான். தஸ்தகீர் ஒரு காலத்தில் செட்டித்தோப்பில் கல்லால் மாங்காய் அடித்து தின்ற பழக்கம் ஏதும் உண்டா? இன்று கலிஃபோர்னியாவில் ஆப்பிள் அடித்து திண்க ஏதேனும் வசதி உண்டா?)

கோடையில் குளிர வைக்கும் ப‌ன‌ம்ப‌ழ‌ம்:





இள‌ நுங்கின் முதுமை கால‌ம் தான் இந்த‌ ப‌ன‌ம் ப‌ழ‌ம். இதை அடுப்பில் சுட்டு இனிப்பான அத‌ன் நார் நாவின் சுவைக்கு தார் ரோடு போடும். இதை உடைக‌ளில் ப‌டாம‌ல் சாப்பிட்டால் அது ஒரு சாத‌னையாக‌த்தான் க‌ருத‌ப்ப‌டும் அக்கால‌த்தில். சாப்பிடும் பொழுது வாயை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளுக்கு ம‌ஞ்ச‌ல் வ‌ர்ண‌ம் பூசி (ஒலப்பி) விட்டு விடும்.

Thursday, May 5, 2011

”இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று லேபிள் ஒட்டுவதை ஏற்க முடியாது: கருணாநிதி!

ஒசாமா பின் லேடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி, உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்து வந்த ஒசாமா பின் லேடன் எனும், உசாமா பின் முகமது பின் அவாத் பின் லேடனின் கதையை, 40 நிமிடங்களில் அமெரிக்க சிறப்புப் படை முடித்துவிட்டது.

ஆப்கானிஸ்தானில், சோவியத் படைகளுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, தலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது. இன்றைக்கு அதே தலிபான்களை ஒடுக்குவதற்காக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட தலிபான்களுக்கு உதவுவதற்காகவே, பின் லேடன் ஆப்கானிஸ்தான் வந்தான் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.தேசிய பயங்கரவாதம், மத பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம், வலதுசாரி பயங்கரவாதம், அரசையே அழிக்கும் பயங்கரவாதம், அணு பயங்கரவாதம், ரசாயன பயங்கரவாதம், நுண்ணுயிரியல் பயங்கரவாதம், போதை பயங்கரவாதம் என்று பயங்கரவாதம் எந்த உருவெடுக்க முனைந்தாலும் அதை கிள்ளியெறிய வேண்டும்.

ஒசாமாவின் ஆசிரியர் சொன்ன, “வரலாறு தனது வரிகளை ரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை, மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை. கவுரவத்துக்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதைக் கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை” என்ற போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை நிலை நிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த ஒசாமா பின் லேடன் எடுத்த கருவி தான் பயங்கரவாதம். ஒசாமா பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற லேபிளை ஒட்ட எத்தனையோ பேர் எத்தனிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாம் என்ற சொல்லுக்கு மற்றொரு பொருளே சமாதானம்.

எல்லா மதங்களிலிருந்தும் பயங்கரவாதிகள் உருவாவதை, சரித்திரம் சான்றுகளோடு காட்டுகிறது. தனிநபர்களையும், அப்பாவிகளையும் கொல்லும் பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டும்; தண்டிக்கப்பட வேண்டும். இதில், யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. எந்தவித நியாயமான குறைகள் அல்லது கோபம் யார் மீது இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதற்கு அடிப்படை அறவே இல்லை.”கத்தியை கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்” என்பது பழமொழி. அந்த பழமொழிக்கான பாடம் தான் ஒசாமா பின் லேடனின் வாழ்க்கை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

700 கோடியை நோக்கிச் செல்லும் உலக மக்கள் தொகை

வரும் அக்டோபர்-31 ஆம் தேதியன்று உலக மக்கள் தொகை 700 கோடியாக இருக்கும் என்றும், கி.பி.2099 ஆம் ஆண்டுக்குள் அது 10 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் தற்போது வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


21 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே உலக மக்கள் தொகை முந்தைய கணிப்பான 9.15 பில்லியனைத் தாண்டி 9.31 பில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹானியா ஜோல்ட்னிக் தலைமையில் அமைக்கப்பட்ட ஐநா குழுவின் கணிப்புப் படியே உலக மக்கள் தொகை 7 பில்லியனாக அக்டோபர்-31 அன்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதைத் தெரிவிக்கும் விதமாக ஐநா அமைப்பான UNFPA சார்பில் ஏழுநாள் கவுண்ட் டவுனை அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை கடந்த 1998 ஆம் ஆண்டு 6 பில்லியனைத் தொட்டது. அதே வருடம் ஜூலையில் 6.89 பில்லியனாக உயர்ந்தது.

கி.பி 2100 இல் சீன மக்கள் தொகை, தற்போதைய அளவான 1.34 இல் இருந்து 1 பில்லியனாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கோடையில் குளிர வைக்கும் நாவ‌ப்ப‌ழ‌ம்:



ந‌ன்கு ப‌ழுத்த‌ப்ப‌ழ‌ம் இனிப்பிட்டு சாப்பிட்டாலும் அல்ல‌து உப்பிட்டு சாப்பிட்டாலும் சாப்பிடுப‌வ‌ரின் எதிர்பார்ப்பிற்கேற்ற‌ சுவையைத்தாராள‌மாகத்த‌ரும். இத‌ன் க‌ச‌ப்பு மிகுந்த‌ கொட்டையை அரைத்து உட்கொள்வது ச‌ர்க்க‌ரை நோய் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ம‌ருந்தாக‌ சொல்வ‌ர்.

கோடையில் குளிர வைக்கும் வெள்ள‌ரிப்ப‌ழ‌ம்:





ந‌ன்கு ப‌ழுத்த‌ப்ப‌ழ‌ம் ப‌னை ம‌ட்டையை போர்வையாய் போர்த்தி வ‌ந்திற‌ங்கும். அவற்றை வாங்கி சிறு துண்டுகளாகவோ அல்லது மிக்ஸ்யில் நன்கு அரைத்து ஜூஸ் செய்து குளிரூட்டி அருந்தினாலும் மிகவும் இனிமையாகவும் தாகம் தீர்க்கும் தாரக மந்திரமாகத்திகழும். உள்ளிருக்கும் சிறு கொட்டைக‌ளை எடுத்து வெயிலில் காய‌ வைப்ப‌ர் வீட்டுப்பெண்க‌ள். அத‌ன் ப‌ருப்பு தான் இன்றைய‌ இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளுக்கு மேருகூட்ட மேல்பூச்சாக‌ ஃபெர் அண்ட் ல‌வ்லி கிரீம் போல் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.

Sunday, May 1, 2011

காலையில் உணவு உண்ணும் பழக்கமில்லையா? அதிர்ச்சி தகவல்



காலையில் சாப்பிடுவதில்லையா? நீங்களும் மூளை பாதிப்பாளர் ஆகுகிறீர்கள். மூளையை பாதிக்கும் 9 பழக்க வழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது :

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத்
தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது.
மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை
ஏற்படுத்தும். அதே போன்று அதிகமாக தூங்குவதும் மூளைக்கு ஆபத்து தான். சராசரியாக 6-8 மணிநேரம் நித்திரை செய்து மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை

மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

சோர்வு ஏற்பட்டால் மூளை செயல்பாடு குறையும்-சுவாரஷ்ய ஆய்வு


சோர்வு அதிகமாகின்ற போது மனிதன் தன்னை அறியாமலேயே தவறுகளைச் செய்கின்றான்.

மூளையின் பெரும் பகுதி விழித்துள்ள நிலையிலும் ஒரு சிறு பகுதி கண் இமைக்கும் நேரம் சோர்வடைதால், ஞாபகத்தோடு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அமெரிக்காவின் விஸ்கொன்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளின் மூளைச் செயற்பாட்டை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பகல் நேரத்தில் எலிகளை விழித்திருக்கச் செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக பகல்பொழுதில் எலிகள் தூங்குவது தான் வழக்கம்.

இந்த வேளையில் எலிகளின் மூளையில் பெரும்பகுதி சுறுசுறுப்பாக இருந்தாலும், அது விழித்துள்ள நிலையிலும் கூட ஒரு சிறு பகுதி உறக்கம் கொள்கின்றது.

இவ்வாறு அவற்றை நீண்ட நேரம் விழித்திருக்கச் செய்கின்ற போது மூளையின் அநேக கலங்கள் ஓய்வெடுக்கின்றன. இதை மூளையின் குட்டித்தூக்கம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது எலிகளின் செயற்பாட்டை குறிப்பாக சில விடயங்களில் கவனம் செலுத்தும் ஆற்றலைப் பாதிக்கின்றதா என்றும் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

எனவே மனித மூளையில் ஏற்படும் இலேசான சோர்வு சில சிறிய தவறுகளுக்குக் காரணமாகின்றன என்பது தான் ஆய்வாளர்களின் முடிவாகும்.

source : www.thoothuonline.com

கோடையில் குளிர வைக்கும் விளாம்ப‌ழம்:





இப்பொழுதெல்லாம் க‌ண்மாசியாக் காணாம‌ல் போய் விட்டது சிறு வயதில் சகோ. தாஜுத்தீன் வீட்டுக்கொல்லையில் காய்த்துத்தொங்கியதைக்கண்ட ஞாபகம் இன்று உள்ளத்தில் கருப்பு,வெள்ளை படமாக நிழலாடுகிறது.


ஆமை போன்று க‌டின‌ மேல் தோலை உடைய‌ இந்த‌ ப‌ழ‌ம் அதை உடைத்து ச‌ர்க்க‌ரை/வெல்லம் (க‌ச்சாக்க‌டையில் வாங்கிய) வேறு கடையில் வாங்கினால் சர்க்கரை செல்லாதா? என யாரோ முணுமுணுப்பது போல் தெரிகிறது)பக்குவமாக‌ சேர்த்து சாப்பிட்டால் ந‌ன்கு வ‌யிறும் நிறையும் உள்ள‌மும் குளிரும் இனிமையாய்.