நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Saturday, May 14, 2011
59 முஸ்லிம்கள் வெற்றி பெற்ற மேற்கு வாங்க சட்டசபை
மேற்கு வங்கத்தில் நடந்துமுடிந்த சட்ட மற்ற தேர்தலில் முதன் முறையாக முஸ்லிம்கள் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.இந்தியாவில் 30% த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் இடங்களில் மேற்குவங்கமும் ஒன்று.294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவையில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் சுமார் 59 முஸ்லிம் உறுப்பினர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.இது கடைந்த 2006 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெற்றி பெற்ற இடங்களை காட்டிலும் 13 இடங்கள் கூடுதலாகும்.மேலும் முஸ்லிம்கள் மேற்கு வங்க சட்ட சபை வாரலாற்றில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றதும் இது தான் முதல் முறை.கேரளம் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உயர்ந்துள்ள இந்த சட்ட சபை தேர்தலில் தமிழகத்தில் மட்டும் எண்ணிக்கை 7 இலிருந்து 5 குறைந்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது ,இது முஸ்லிம்களின் ஒற்றுமையிமையையே காட்டுகிறது.மற்ற மாநிலங்களை பார்த்தாவது தமிழக முஸ்லிம்கள் பாடம் படிப்பார்களா?
NSA KADER
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment