நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Saturday, May 7, 2011
கோடையில் குளிர வைக்கும் மாங்காய்/மாம்பழம்:
ஒட்டு அல்லது நாட்டு மாங்காய்கள் வயோதிகம் அடைந்து நமக்கு நல்ல சுவை தரும் மாம்பழங்களாய் வகை, வகையான ரகங்களில் குவிந்து கிடைக்கும். விலையும் அப்படித்தான். ஒரு காலத்தில் தெருவுக்கு வரும் மாம்பழங்களை அப்படியே வெட்டாமல் நன்றாக் கையில் வைத்து பக்குவமாக அமுக்கி அதன் சாரு (பயப்படாதீர்கள் பள்ளிக்கூட சார் இல்லை) வெளியில் வராமல் சாப்பிடும் பொழுது சிலர் அதன் கொட்டையைக்கூட விட்டு வைக்காமல் சப்பி சாப்பிடும் பொழுது அதற்குள் என்றோ சென்று செட்டிலான புழுவும் சேர்ந்தே வாயிக்குள் சென்று விடும். (அப்புறம் என்ன? வயிற்று வலி என்று மீராசா டாக்டரிடம் செல்ல வேண்டியது தான். தஸ்தகீர் ஒரு காலத்தில் செட்டித்தோப்பில் கல்லால் மாங்காய் அடித்து தின்ற பழக்கம் ஏதும் உண்டா? இன்று கலிஃபோர்னியாவில் ஆப்பிள் அடித்து திண்க ஏதேனும் வசதி உண்டா?)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment