Wednesday, July 27, 2011

அதிரையில் கூரை வீட்டில் தீ கி 5 லட்சம் சேதம்

அதிராம்பட்டினம்,: அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்தவர் காதர் முகைதீன் (42). சென்னையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவுஜியா, அதே தெருவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு நேற்று சென்றார். இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது வீடு தீடிரென வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் 15 பவுன் நகைகள், ரூ. 55 ஆயிரம் பணம், வாசிங் மிஷின், கிரைண்டர், இரண்டு கம்ப்யூட்டர்கள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீ யணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

source : http://dinakaran.com/District_detail_2011.asp?Nid=1255

No comments:

Post a Comment