Sunday, February 27, 2011

ஓமனில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

மஸ்கட்,பிப்.27:அரபுலகத்தில் ஏற்பட்டு எழுச்சி அலை ஓமனில் பரவத் துவங்கியுள்ளது. தொழிற்பேட்டை நகரமான ஸோஹாரில் ஞாயிற்றுக்கிழமை அரசியல் சீர்திருத்தம்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்தனர்.

ஸோஹாரில் இரண்டாவது தினமாக போராட்டம் நடைபற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஓமனின் தெற்கு நகரமான ஸலாலாவிலும் மாகாண கவர்னர் அலுவலகம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அரசு எதிர்ப்பாளர்கள் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸோஹாரில் போராட்டத்தில் ஈடுபட்டோர் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

செய்தி:ராய்ட்டர்ஸ்

No comments:

Post a Comment