Friday, April 29, 2011

சவூதி: பொதுமன்னிப்பு காலம் மேலும் நீட்டிப்பு


உம்ரா, ஹஜ்ஜு, மற்றும் சுற்றுலா / தற்காலிக விசாக்களில் வந்து அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகக் காலம் சட்டவிரோதமாக தங்கிவிட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்ற கடந்த செப்டம்பர் 25 முதல் ஆறுமாதகாலத்திற்கு சவூதி அரசாங்கம் பொது மன்னிப்பு அறிவித்திருந்தது. இவ்வருடம் (2011) மார்ச் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த இப்பொதுமன்னிப்புக் காலம் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டு இவ்வருடம் செப்டம்பர் 14 வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று ரியாத்திலுள்ள சவூதி உள்துறை அமைச்சக அறிவிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 23 ஆம் தேதியுடன் முந்தைய பொது மன்னிப்பு அறிவிப்பு முடிவுக்கு வந்துவிட்டாலும், மேலும் பல வெளிநாட்டவர்கள் குறிப்பிட்ட காலத்தில் வெளியேற இயலாது போனதைக் கருத்தில்கொண்டு இக்கால அளவு மேலும் நீட்டிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாய்ப்பை சட்டவிரோத குடியேறிகள் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவுதி அரேபிய உள்துறை அமைச்சக செய்திக்குறிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்பிறகும் சட்டத்தை மீறி தங்கிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

thanks : www.thoothuonline.com

கோடையில் குளிர வைக்கும் எல‌ந்தைப்ப‌ழம்:




இது ந‌ன்கு ப‌ழுத்து புழுவுட‌ன் வ‌ந்தாலும் ச‌ரி அல்ல‌து இன்னும் ச‌ரி வ‌ர‌ ப‌ழுக்காம‌ல் செங்காயாக‌ வ‌ந்தாலும் ச‌ரி ஒரு க‌ட்டு க‌ட்டாம‌ல் விடுவ‌தில்லை. உப்பு போட்டு அல்ல‌து பொடி சேர்த்து சாப்பிட்டாலும் சும்மா வெறும‌னே சாப்பிட்டாலும் ந‌ன்றாக‌ சுவை த‌ரும். வயது வித்தியாசமின்றி வாயில் எச்சிலை ஊற்றெடுக்க‌ வைக்கும். (இத‌ன் ம‌றுபிற‌வி தான் க‌டையில் விற்கும் எல‌ந்த‌வ‌டை பார்க்க‌ க‌ண்ண‌ங்க‌ரே என்று இருந்தாலும் அத‌ன் சுத்த‌ம்,ப‌த்த‌ம் பார்க்காம‌ல் திண்டால் தான் அன்றைய‌ பொழுதே இனிமையாக‌ க‌ழியும் என்ப‌து அறிவிக்க‌ப்ப‌டாத ஊர் வ‌ழ‌க்க‌மாக‌ இருந்த‌து அந்த‌ கால‌த்தில்)

Thursday, April 28, 2011

தண்ணீரில் மொபைல் விழுந்தால்


நாம் அடிக்கடி செய்திடும் ஒரு "நல்ல' காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறைகளுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து வேறு ஒன்றை இழுக்கையில் போனை தண்ணீர் உள்ள வாளியில் தள்ளிவிடுவோம். அல்லது அழைப்பு வருகையில், வைப்ரேஷன் ஏற்பட்டு தானாக, போன் தண்ணீரில் விழலாம்.
சில வேளைகளில் நம் அன்புச் செல்வங்களான குழந்தைகள், மொபைல் போனை எடுத்து, தண்ணீரில் போட்டு விளையாடலாம்.
இது போன்ற வேளைகளில் என்ன செய்திட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.

1.முதலாவதாக, மொபைல் போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ, அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். மொபைல் கவர், பேட்டரி கவர், பேட்டரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.

2. அடுத்து, மொபைல் போனில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ, அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து, நீரை உறிஞ்சி எடுக்கவும். போனை முழுவதுமாக உலரச் செய்திடவும்.

3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால், அதனை எடுத்து, மொபைல் போன் மீதாகப் பயன்படுத்தி, ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக, பேட்டரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும். இவ்வாறு உலர வைக்கையில், ஹேர் ட்ரையரை, மொபைல் போனுக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது மொபைல் போனின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து, 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலரவைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.




இந்த வேலையை மேற்கொள்கையில், மொபைல் போனை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும்.

இதே போல பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.

நன்றாக உலர்ந்த பின்னர், காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர், பேட்டரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில், இன்னும் சில மணி நேரம் காத்திருந்து, ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும். அதன் பின்னரும் இயங்கவில்லை எனில், மொபைல் போன் சரி செய்திடும் பணியாளரிடம் சென்று, நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி, நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.

சர்க்கரை நோயா பெரிய வெங்காயம் சாப்பிடுங்கள்


இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.

இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவுஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்தது.

இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.

இது தவிர கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.

கோடையில் குளிர வைக்கும் ப‌ன‌ங்கிழ‌ங்கு


ப‌ன‌ங்கிழ‌ங்கு:


(நுங்கின் தாய‌ புள்ளெ அல்ல‌து ஒக்க‌ப்பொற‌ந்த‌ ஒட‌ன் பொற‌ப்பு என்றும் சொல்லலாம்) ந‌ன்றாக அவித்த‌ கிழ‌ங்கை வாங்கி வ‌ந்து அத‌ன் நாரை நீக்கி விட்டு (குருத்து எடுத்து திண்ட‌து போக‌) சுர‌ண்டி அத்துட‌ன் கொஞ்ச‌ம் தேங்காய்ப்பூ சேர்த்து சீனியும் போட்டு சாப்பிட்டால் சுகமான சுவைக்கு சொல்ல‌வா வேண்டும்? (எல்லாத்துலையும் சீனியைப்போட்டு சாப்பிட்டா சீக்கிர‌ம் இனிப்பு நீரு வ‌ராதா? என்று யாரோ முண‌ங்குவ‌து போல் தெரிகிற‌து

கோடையில் குளிர வைக்கும் நொங்கு


நொங்கு:


ந‌ம‌தூர் சுற்று வ‌ட்டார‌ கிராம‌ப்புற‌ங்க‌ளிலிருந்து கோடைகால‌த்தை வ‌ர‌வேற்கும் முக‌மாக‌ ஊரின் முக்கிய‌ ச‌ந்து, முச்ச‌ந்திக‌ளில் வ‌ந்திறங்கி குவிந்து கிடக்கும். அதை அழ‌காக‌ சீவி அத‌னுள் இருக்கும் க‌ண்க‌ளை தோண்டி எடுத்து ப‌னைம‌ட்டையில் வைத்து விற்ப‌ர். அதை பார்ப்ப‌வ‌ர்க‌ளெல்லாம் ஆர்வ‌த்துட‌ன் வாங்கிச்சென்று வீட்டின் பெண்க‌ளிட‌ம் கொண்டு வ‌ந்து ஒப்ப‌டைப்ப‌ர். அவ‌ர்க‌ளும் அதை செவ்வ‌னே சுத்த‌ம் செய்து அவ‌ற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து பால் ம‌ற்றும் ப‌ன்னீருட‌ன் கொஞ்ச‌ம் சீனியும் சேர்த்து அப்ப‌டியே குளிர் சாத‌ன்ப்பெட்டியில் கொஞ்ச‌ நேர‌ம் வைத்து கிளாஸில் கொடுக்க‌ நாம் குடித்த‌ பின் உள்ளே சென்ற‌ நுங்கு கோடை உஸ்ன‌த்தையும், தாகத்தையும் எங்கே? என‌ கேட்க‌ வைத்து விடும். (அத‌ன் பின் நொங்கு வ‌ண்டி மூல‌ம் தொங்கு,தொங்கு என்று தெருவில் ஓடி விளையாண்டது மீதி).

கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !உசார் !!உசார் !!!


வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.

உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.

ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.

Wednesday, April 27, 2011

ஹைதராபாத்தில் கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு


கோழிக்கோடு:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு மே மாதம் முதல் தேதியில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறும் என அவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அனீஸுர்ரஹ்மான் பத்திரிகைச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச்செய்யப்படுவர்.கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச்சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது.நாட்டின் கல்வி வளாகங்களில் நன்மையின் பிரச்சாரகர்களாக மாற முன்மாதிரிகளை மாணவர்கள் தேடுகிறார்கள்.ஏகாதிபத்தியமும், ஃபாசிசமும், அரச பயங்கரவாதமும், கறுப்புச்சட்டங்களும் கொடூரத்தை வெளிக்கொணரும் வேளையில் அதனை திருத்தவேண்டிய பொறுப்பை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என அனீஸ்ஸூர்ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் விடுதலையான சுலைமான்


தாயிஃப்:சுலைமான்(53) கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்தவர். சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் ஓட்டுநராக பனியாற்றி வந்த சுலைமானுக்கு அன்றைய தினம் மறக்கமுடியாததாக மாறிவிட்டது.

2008 ஆம் ஆண்டு தாயிஃபிலிருந்து ரியாதிற்கு ட்ரக்கை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தார் அவர். எதிர்பாராதவிதமாக அவருடைய ட்ரக் மீது ஸுலும் சாலையில் வைத்து கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் கார் நசுங்கிப் போனது. அக்காரிலிருந்த 6 பேரும் இறந்து போயினர். இவ்விபத்துச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுலைமான் சிறையிலடைக்கப்பட்டார். முதல் 7 மாதங்கள் குர்மா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுலைமான் பின்னர் தாயிஃப் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வழக்கை விசாரித்த தாயிஃப் நீதிமன்றம் சுலைமான் 675,000 ரியால் ஈட்டுத் தொகையை கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. இல்லையெனில், பணத்தை கட்டும்வரை சிறையிலடைக்கப்படுவார் எனவும் தெரிவித்தது.

சுலைமானோ ஏழ்மையானவர். இந்த பெருந்தொகைக்கு எங்கு செல்வார் அவர். அவருடைய ஸ்பான்சர் தன்னால் உதவமுடியாது என்று கூறிவிட்டார். மேலும் சுலைமான் 3 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சந்திக்கவும் இல்லை.

இந்நிலையில் வெளிநாட்டு இந்தியர்களின் நலனுக்காக பாடுபடும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் தாயிஃப் கிளை சுலைமானுக்கு உதவ முன்வந்தது. சவூதி அரேபியாவின் இதர பகுதிகளில் செயல்படும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் கிளைகளுடனும், ஜித்தாவில் இந்திய தூதரகத்தின் நல்வாழ்வு பிரிவுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டது தாயிஃப் ஃபெடர்னிடி ஃபாரம். அத்துடன் ஃபெடர்னிடி ஃபாரம் இந்தியாவில் கஷ்டப்படும் சுலைமானின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் அளித்துவந்தது. சுலைமானை விடுவிப்பதற்காக நம்பிக்கை இழக்காமல் ஒவ்வொரு கதவாக தட்டத் துவங்கியது ஃபெடர்னிடி ஃபாரம்.

காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி 675,000 ரியால் இழப்பீட்டுத் தொகையை வழங்க சம்மதிக்க வைத்தது. காப்பீட்டு நிறுவனம் அளித்த காசோலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடைசியாக அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு சுலைமான் கடந்த 25/04/2011 அன்று விடுதலைச் செய்யப்பட்டார்.

இதுத்தொடர்பாக இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் ரஃபீக் கூறியதாவது: ”நாங்கள் துவக்கத்தில் இவ்வழக்கின் பின்னணியை புரிந்துக்கொண்டோம். சுலைமானின் குடும்பத்தின் அன்றாட தேவைக்கான உதவிகளை அனுப்பி வைத்தோம். ஈட்டுத் தொகைக்காக விபத்துக்குள்ளான ட்ரக் காப்பீடுச் செய்யப்பட்டுள்ள நிறுவனம், ட்ரக்கின் உரிமையாளர் மற்றும் விபத்தில் கொல்லப்பட்ட சவூதி அரேபியாவைச் சார்ந்தவர்களின் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.’ என தெரிவித்தார்.

காப்பீட்டு நிறுவனம், விபத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சவூதி அதிகாரிகளுடன் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உறுப்பினர்களான ரஃபீக், நவ்ஷாத், ஹுஸைன், அல்தாஃப், சுலைமான் ஆகியோர் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி சுலைமானின் விடுதலையை உறுதிச்செய்தனர்.

சிறையிலிருந்து விடுதலையான சுலைமான் கர்நாடகா மாநிலம் தெற்கு கன்னட மாவட்டத்தில் புத்தூர் தாலுகாவில் நெல்யாடி கிராமத்தைச் சார்ந்தவராவார். இவரது உழைப்பை நம்பி தாய், மனைவி, இரண்டு ஆண் மக்கள், மூன்று பெண் மக்கள் உள்ளனர். சுலைமான் 25 ஆண்டுகளாக சவூதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் இதைப்போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிகளை சவூதியில் சிரமத்திற்கும், சிக்கலுக்கு உள்ளாகும் இந்தியர்களுக்காக புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

முஸ்லிம்கள் வீதிகளில் தொழுகை நடத்த அனுமதி பெற வேண்டும் – பிரான்ஸ்


பாரிஸ்:பிரான்சில் உள்ள முஸ்லிம்கள் தெருவிலோ அல்லது பொது இடங்களிலோ தொழுகை நடத்த வேண்டும் எனில் பிரான்சி அரசாங்கத்திடம் முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்று ஜியன்ட் தெரிவித்துள்ளார்.

இவரது இந்தக் கருத்தையொட்டி, ஒருபுறம் முஸ்லிம் மக்கள் பொது இடங்களில் தொழுவதற்கு அனுமதியும் உண்டு என்றும் வாதிடுகின்றனர்.அதே நேரத்தில் மறுபுறம் பிரான்ஸ் மக்கள், பொது இடங்களை தொழுகை என்ற பெயரில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதோடு நாங்கள் எல்லை மீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர் என்றும் கருத்துக்கள் வெளியாவதை பிரெஞ்சின் சட்டமியற்றுனர் ஆக்ஸல் அர்ஜின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பியாவிலே பிரான்சில் தான் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகாமாக உள்ளது. ஆனால் அவர்கள் தொழுவதர்க்கான மசூதி ஒன்று மட்டுமே உள்ளது, வெள்ளிகிழமை தொழுகைக்கு இடப் பற்றாக்குறையால் அவர்கள் தெருவில் தொழும் நிலை உள்ளது, நாங்கள் தெருவில் தொழுகிறோம் என்றால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று முஸ்லிம் அசோசியேஷன் தலைவர் மூஸா நியம்பேலே தெரிவித்துள்ளார்.

1905-ல் பிரெஞ்சு அரசியல்வாதிகள் தெரிவித்தக் காரணம் நாட்டின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், உரிமையியல் மாநகர தலைவரும் அதற்க்கான அனுமதியை மறுத்து விட்டார் என்பதையும் நினைவு படுத்தினார். வரி கட்டும் முஸ்லிம்களால், தங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத மசூதியை கட்ட அரசாங்கத்திற்கு உதவ முடியாதா என்றும்,. இப்பொழுது பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் கட்டப்பட்டு கொண்டு இருக்கும் இந்த மசூதியும் பற்றாகுறையாகவே இருக்கும் என்றும் பலரால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்


புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்கள் வெளியான சூழலில் அவர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சங்க்பரிவார சக்திகள் சிறுபான்மையினருக்கெதிராக திட்டமிட்டு நடத்தியதுதான் குஜராத் இனப்படுகொலை எனவும், ஹிந்துத்துவ சக்திகள் கோரத்தாண்டவம் ஆட மோடி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் எனவும் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் தெளிவுப்படுத்துகிறது. இனப்படுகொலையைக் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தாங்கள் மோடியின் பணியாளர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

அதனால்தான், இனப்படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்ய எஸ்.ஐ.டி புனர் நிர்மாணிக்கப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனிதர்களுக்கும், இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கும் என நிரூபணமான என்டோ ஸல்ஃபான் கிருமிநாசினியை தடைச்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென செயற்குழு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

63 நாடுகளில் தடைச்செய்யப்பட்ட என்டோ ஸல்பான் 70 சதவீதம் இந்தியாவில் தான் தயாராகிறது.பெரும் கிருமி நாசினி நிறுவனங்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து என்டோஸல்பானை தடை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என கருதுவதாக பாப்புலர் ஃப்ரண்ட் கருத்து தெரிவித்துள்ளது. என்டோஸல்பான் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கபளீகரிக்க வலதுசாரி ஹிந்துத்துவா குழுக்கள் நடத்தும் முயற்சியைக் குறித்து பாப்புலர் ப்ரண்ட் கவலை தெரிவித்துள்ளது. ஊழல்வாதிகளான ஹிந்துத்துவா சக்திகள் நடத்தும் முயற்சிகள் குறித்து சமூக-கலாச்சார ஆர்வலர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும், முழுமையான லோக்பால் மசோதாவிற்கான முயற்சி தொடர வேண்டும் எனவும் தேசிய செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜய்தாப்பூரில் உள்ளூர் மக்களின் விருப்பத்தையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி அணுமின் நிலையம் நிர்மாணிக்க முயலும் அணுசக்தி துறைக்கு பாப்புலர் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் உருவான சுனாமியைத் தொடர்ந்து ஏற்பட்ட அணுசக்தி விபத்தும் அணு உலைகள் மிகப்பெரிய ஆபத்தையும், அதிகமான செலவினத்தையும் கொண்டது என்பதை நிரூபித்துள்ளன.

இது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேட்டை விளைவிப்பதாகும். பிரான்சில் பரிசோதனை செய்து உறுதி செய்யப்படாத தொழில் நுட்பத்தை ஜய்தாப்பூர் அணுமின் நிலையத்தில் உபயோகிக்க திட்டமிட்டுள்ளார்கள். ரத்னகிரியில் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆதரவு தெரிவிக்கிறது.

பாப்புலர் ப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, மவ்லானா உஸ்மான் பேக், பேராசிரியர் பி.கோயா, யா முஹைதீன், ஹாமித் முஹம்மது, அனீஸ் அஹ்மத், இல்லியாஸ் தும்பெ, அஷ்ரஃப் மெளலவி, ஒ.எம்.எ.ஸலாம், முஹம்மது ரோஷன், எ.எஸ்.இஸ்மாயீல் ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வலியுறுத்துகிறார் நிதின் கட்காரி


அயோத்தி:பாரதிய ஜனதாதள கட்சியில் தலைமைத்துவம் ஏற்று முதல் முறையாக அயோத்தியை காண சென்ற கட்காரி ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்றும், இதில் எந்த வித அரசியல் இடையூறோ அல்லது தேர்தல் இடையூறோ இல்லை என்றும், கோவிலை திரும்பக் கட்டுவதால் பல கோடி மக்களின் நம்பிக்கை திரும்ப கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார். அதற்கு நீதித்துறையும் அனுமதி அளித்துள்ளது.

அவருடன் சென்ற மற்ற சில தலைவர்கள், அயோத்தியில் உள்ள அந்த இடமானது சற்று விவகாரமானது என்றும், ராமர் கோவிலை கட்ட முடிவு எடுத்தால், பஞ்சகோசி பரிக்ரமா பகுதியின் வெளிப்புறத்தில் முஸ்லிம்களின் மசூதியை கட்டவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

ரமார் கோவிலைக் கட்டும் இந்த முடிவானது பைஜாபாத் கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தால் எடுக்கப்பட்டது என்றும், இதில் எந்தவித அரசியல் நோக்கும் இல்லை என்றும் கட்காரி தெரிவித்தார்.

கட்காரியுடன், பாரதிய ஜனதாவின் மற்ற தலைவர்களான உத்திர பிரதேச தேர்தல் அமைப்பின் தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, தேசிய துணை தலைவர் வினை கடியார், பாரதிய ஜனதாவின் உத்திர பிரதேச தலைவர் சூர்யா பிரதாப் சஹி மற்றும் அப்பகுதியின் எம்.எல்.எ லாலு சிங் ஆகியோரும் அயோத்தியை பார்வையிட்டனர்

உங்கள் நோய்க்கு மருந்து தண்ணீரில் உள்ளது முயற்சி செய்யுங்கள்


தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.

1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160 ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:

உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்.

வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்.

சர்க்கரை வியாதி – 30 நாட்கள்.

புற்றுநோய் – 180 நாட்கள்.

காசநோய் – 90 நாட்கள்.

கறுப்புப்பணம்:இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவேன் – ஜூலியன் அஸாஞ்ச்


புதுடெல்லி:சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்துள்ள நபர்கள் குறித்த ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் இது தொடர்பான ஆவணங்களை உடனடியாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட, வெளியிடப்போகும் ஆவணங்களில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்ளன. உடனடியாக வெளியிடப்போகும் ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்களை தான் வாசித்துள்ளதாக அஸாஞ்ச் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மிகப் பெரும் புள்ளிகளின் பெயர்கள் இந்த பட்டியலில் நிச்சயம் இருக்கும் என்று கூறிய அவர், ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள தனியார் வங்கிகளில் பணத்தைப் போடுவதற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் டாலர் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த அளவுக்குப் பணத்தைப் போடுபவர் சாதாரண இந்தியராக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆவணங்கள் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டதற்கு, நம்பிக்கை இழக்காமலிருங்கள், பட்டியல் நிச்சயம் வெளியிடப்படும் என்றார். இருப்பினும் இது தொடர்பாக வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் தவிர வேறு எவரும் பணத்தை முதலீடு செய்திருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். ஊழல் முறைகேடுகளை விட மோசமானது வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைப்பது என அஸாஞ்ச் குறிப்பிட்டார்.

காய்கள் – அவரைக்காய்


இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன. இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது.
இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது.
ஆனால் இவைகளை நம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுக் கழிவுகளை உரமாக இட்டு வளர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
அந்த வகையில் வீடுகளில் எளிதாக வளர்க்கப்படும் அவரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.
அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.




பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.



மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.
மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
சிறுநீரை0ப் பெருக்கும்
சளி, இருமலைப் போக்கும்
உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்
சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்
இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.



முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்

Tuesday, April 26, 2011

Bus acc.mp4

சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த 50 கிலோ மீன்கள் பறிமுதல்!

நெல்லை மாநகர பகுதிகளில் சுகாதாரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், சிலர் சுத்தமின்றி தரையில் போட்டு விற்பதாகவும் மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்குப் புகார்கள் வந்தன. அதன்பேரில் உணவு ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், கலியணான்டி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலை சமாதானபுரம், பாளை மார்க்கெட், மகாராஜநகர் உழவர்சந்தை, வ.உ.சி.மைதானம் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட 50 கிலோமீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புழுக்கள் அடங்கிய கருவாடுகளையும் கைப்பற்றினர். 50 கிலோ மீன்களையும் பொதுமக்கள் முன்னிலையில் கிருமிநாசினி ஊற்றி சுகாதார அதிகாரிகள் அழித்தனர்.

இலங்கையில் சீனா உதவியுடன் விமான நிலையம்!

சீனா நிதியுதவி செய்துள்ள, இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலைய கட்டுமானப் பணிகள், அம்பந்தோட்டையில் நேற்று துவங்கின.



இலங்கையின் தென்பகுதி மாவட்டமான அம்பந்தோட்டையில், மட்டாலா என்ற இடத்தில், 2,000 ஏக்கர் பரப்பளவு நிலம், இரண்டாவது சர்வதேச விமான நிலைய கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டது.கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பரில், விமான நிலையத்தின் ’பயணிகள் முனைய’ கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. இக்கட்டுமானப் பணிகளுக்கு சீனா நிதியுதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும், 2012ஆம் ஆண்டு முதல், இவ்விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!


முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்த டானிஷ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் குர்ட் வெஸ்டர்கார்ட் மீதான வழக்கின் விசாரணையை ஜோர்டான் நீதிமன்றம் தொடங்கியது.

முகமது நபியை இழிவுபடுத்தியதாக வெஸ்டர்கார்ட் மற்றும் அவர் வரைந்த சித்திரத்தை வெளியிட்ட டானிஷ் நாளிதழ் உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணை அவர்கள் ஆஜராகாத நிலையிலேயே ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று தொடங்கப்பட்டுவிட்டதாக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர்களில் ஒருவரான தாரிக் ஹவாமதா கூறியுள்ளார்.

இந்த வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்வதற்காக வழக்கை மே 8ஆம் தேதிக்கு நீதிபதி நாதிர் ஷஹாதா ஒத்தி வைத்துள்ளார் என்றும் ஹவாமதா கூறியுள்ளார்.

வெஸ்டர்கார்டு வரைந்த கேலிச்சித்திரங்கள் 2005ஆம் ஆண்டில் டானிஷ் நாளிதழ் ஒன்று வெளியிட்டது. பின்னர் மேலும் 17 டானிஷ் நாளிதழ்களில் இந்தக் கேலித்திரங்கள் வெளியானதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கேலிச்சித்திரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2008ஆம் ஆண்டு ஜோர்டானைச் சேர்ந்த 30 நாளிதழ்கள், இணைய தளங்கள் மற்றும் வானொலி நிலையங்கள் இணைந்து வெஸ்டர்கார்டுக்கு எதிராக ஜோர்டானில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு வெஸ்டர்கார்டுக்கு ஜோர்டான் நீதிமன்றம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று சம்மன் அனுப்பியது.

75 வயதாகும் வெஸ்டர்கார்டு இந்த வழக்கு குறித்த தமக்கு எவ்வித சம்மனும் வரவில்லை என்றும் சம்மன் வந்தாலும் தான் ஆஜராகும் நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

குறுஞ்செய்தி (SMS) அனுப்பி கேஸ் சிலிண்டர் பெறலாம்

சமையல் எரிவாயு பதிவு செய்ய இனி நேரில் செல்லத் தேவையில்லை. குறுஞ்செய்தி அனுப்பி எளிதாக பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த வசதியை தமிழக அரசின் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் ஸ்வரண் சிங் தொடங்கி வைத்தார்.
சென்னை, இந்தியன் ஆயில் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்நிறுவன செயல் இயக்குனர் பிரசாத், தலைமை மண்டல மேலாளர் லட்சுமிநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். 8124024365 என்ற எண்ணுக்கு செல்போன் அல்லது தொலைபேசி மூலம் அழைத்து தானியங்கி குரல் பதிலளிப்பு முறையின்கீழ் (IVRS) பதிவு செய்யலாம்.

முதல்முறை அழைக்கும்போது வாடிக்கையாளர் தமது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, தானியங்கி குரல் பதிலளிப்பு முறையில் காஸ் இணைப்பு எண்ணைப் பதிவு செய்யலாம். பதிவானதும் அதற்கான எண் தெரிவிக்கப்படும்.

பதிவு செய்த போன் எண்ணில் இருந்து அடுத்தடுத்த முறை அழைக்கும்போது காஸ் சிலிண்டர் பதிவு மேலும் எளிதாகும். அத்துடன் 8124024365 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். சிலிண்டர் வீடு தேடி வரும். இந்த வசதியை சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 110 காஸ்விநியோகஸ்தர்களிடம் பெறலாம். இந்த வசதியில் 24 மணி நேரமும் காஸ் சிலிண்டர் பதிவு செய்யலாம்.

குஜராத் இனப்படுகொலை:நான் அளித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு புறக்கணித்தது – சஞ்சீவ் பட்



புதுடெல்லி:”குஜராத் இனப் படுகொலையில் பெரும் புள்ளிகளின் பங்கினைக் குறித்து நான் அளித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு அலட்சியம் செய்தது” என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

“நான் அளித்த ஆதாரங்களை பரிசோதிக்கக்கூட ஆர்.கே.ராகவன் தலைமையிலான புலனாய்வுக்குழு தயாராகவில்லை” என உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

“2002 பிப்ரவரி 26-27 தேதிகளில் கோத்ராவில் நடந்த முக்கிய தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள் அடங்கிய ஒரிஜினல் ப்ளாப்பி டிஸ்க்குகளும், பிரிண்டவுட்டுகளும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்தேன். இனப் படுகொலையில் மேல்மட்டத்தின் சதித்திட்டம் குறித்து விபரங்கள் அதிலிருந்து கிடைத்திருக்கும். ஆனால், 2009 நவம்பர் மாதம் வரை இந்த ஆவணங்கள் பரிசோதிக்கப்படவில்லை. இந்த தொலைபேசி ஆவணங்களில் அரசு உயர் அதிகாரிகளின் முக்கியத்துவம் வாய்ந்த அழைப்புகளும் அடங்கியுள்ளன. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியைக் குறித்தும் அந்த ஆவணங்கள் வெளிக்கொணர்ந்திருக்கும்” என சஞ்சீவ் பட் கூறுகிறார்.

முஸ்லிம் இனப் படுகொலையில் குஜராத் அரசின் பங்கினைக் குறித்து சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய் 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவைக் குறித்தும் சஞ்சீவ் பட்டின் பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் அளித்ததாக சஞ்சீவ்பட் கூறுகிறார்.

மோடியுடன் நடந்த சந்திப்பில் பட் கலந்துகொள்ளவில்லை – முன்னால் டிஜிபி


அஹ்மதாபாத்:குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள குஜராத் காவல்துறையின் மூத்த அதிகாரி பட் கலவரத்திற்கு முன் 2002 பிப்ரவரி 27 ஆம் தேதி மோடியுடன் நடந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என முன்னால் டி ஜி பி தெரிவித்துள்ளார்.

மோடியுடன் நடந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஹிந்துக்கள் தங்கள் வெறியை தீர்த்துக்கொள்ள உதவ வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியதாக பட் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குழப்பம் விளைவிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ் பட் அந்த கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை எனவும் இதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் தான் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மோடி ஆட்சியில் இருக்கும் வரை பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என காங்கிரஸ் தில்லியில் தெரிவித்துள்ளது.

2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் கூறியுள்ளது. கலவரம் நடக்கும் சமயம் முஸ்லிம்களை பாதுகாக்கும் செயலில் ஈடுபட கூடாது என காவல்துறை அதிகாரிகளிடம் மோடி தெரிவித்துள்ளது தவறு என்றும் இது பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.

எல்லோரும் அறிந்தது போல பிஜேபி மோடியை பாதுகாக்கும் வேலையில் இறங்கியுள்ளது. மோடி கலவரத்தை ஆதரித்து இருப்பார் என்று கூறுவதை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என பிஜேபி முன்னால் தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பட் தன்னுடைய பிரமாண பத்திரத்தில் டிஜிபி அழைப்பினைத் தொடர்ந்து தான் மோடியுடன் கூடிய சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பட் கலவரம் நடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் உளவுத்துறையின் காவல்துறை துணை ஆணையராக பதவி வகித்தவர். எனினும் மோடி சிறப்பு புலனாய்வு குழுவில் பட் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார். ஆனால் பட்டின் டிரைவர் தாரா சந்த் யாதவ் டிஜிபியுடன் பட் முதலமைச்சர் வீட்டிற்கு சந்திப்பு நடந்த நாளில் சென்றதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Monday, April 25, 2011

பிரியா விடை......


அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் (ஆண்கள்) மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வந்த திரு.சீனிவாசன் சார் அவர்களும், திரு.அஹ்மத் தம்பி சார். இருவரும் கடந்த 20ஆம் தேதி ஒய்வு பெற்றனர்.அவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு அன்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் புகைப்படத்தை கீழே காணலாம்.....

குஜராத் கலவரம்: "துணைநின்றார் மோடி"

குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்துக்கு துணை நின்றதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சஞ்சீவ் பட் என்ற மூத்த உளவுத்துறை அதிகாரி, கோத்ரா கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி. எனப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழு நரேந்திர மோடியை காப்பாற்றவே அதீத முயற்சியை மேற்கொண்டது , அதன் காரணமாகவே தான் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ராவில் நடந்த கலவரம் தொடர்பாக முதலமைச்சர் மோடியின் வீட்டில் நடந்த கூட்டத்தில், உளவுத்துறை அதிகாரி என்ற முறையில் தானும் கலந்துகொண்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார். அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார்.
குஜராத்தில் மதக்கலவரங்களைக் கையாள்வதைப் பொறுத்தவரை, குஜராத் போலீசார் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்த முறை முஸ்லிம்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று போலீஸ் அதிகாரிகளிடம் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக சஞ்சீவ் பட் தனது மனுவில் புகார் கூறியுள்ளார்.
இந்துக்கள் அச்சமயம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதால், அவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதை அனுமதிக்க வேண்டும் என்றும் மோடி கூறியதாக சஞ்சீவ் பட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் உத்தரவை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியதாகவும் பட் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆமதாபாத் கொண்டுவருவதும், விசுவ ஹிந்து பரிஷத் திட்டமிட்ட கடையடைப்புப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவளிப்பதும் ஆமதாபாத்திலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கலவரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அதை சமாளிக்கும் அளவுக்கு போலீஸ் பலம் இல்லை என்றும் மோடிக்கு அறிவுரை கூறியபோதிலும், அவர் அதை நிராகரித்துவிட்டதாக பட் கூறியுள்ளார்.
மேலும் கோத்ராவில் கரசேவகர்களைக் கொல்வதைப் போன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மோடி கூறியதாக போலீஸ் அதிகாரி தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த விவரங்களை கடந்த 2009-ம் ஆண்டு நடந்த விசாரணையின்போது, சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் தான் பகிர்ந்து கொண்டதாகவும், ஆனால் அந்தத் தகவல்களின் அடிப்படையில் மோடி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு கலவரத்தில் உள்ள தொடர்பு குறித்து ஆராயாமல், சிறப்புப் புலனாய்வுக்குழு தனது கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார். கலவரம் குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு படையிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்று தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, உண்மையை மறைக்க முயன்றதே தவிர, கோத்ரா கலவரத்தின் பின்னணியில் உள்ள சதியை வெளிச்சத்துக்குக் கொண்டுவரத் தயாராக இல்லை. அதனால், அந்தக் குழுவின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

தொ(ல்)லைகாட்சியால் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு-அதிர்ச்சி தகவல்

தினமும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் வர மிக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம் பெறும் சாதனம் தொலைக்காட்சி தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசி, வி‌ளையாடுவதை விட தொலைக்காட்சி முன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

ஓர் இடத்தில் அமராமல் ஓடி ஆடும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சிரமப்படும் தாய்மார்களோ, குழந்தைகயை ஓர் இடத்தில் அமர வைக்க தொலைக்காட்சியில் ஏதாவது கார்டூன் சேனலை போட்டு விட்டு உணவு கொடுக்கின்றனர்.

இதன் விளைவு இன்றைய இளம் தலைமுறையினர் விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை தொலைக்காட்சி பார்ப்பதையே பிரதான பொழுது போக்காக கொண்டுள்ளனர். இவ்வாறு அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த ஆய்வில் இறங்கியது சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு.

3-6 வயதிலான சுமார் 1500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல அதிர்ச்சி தரும் ‌தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள், 40 நிமிடங்கள் வரை ஓடி, ஆடி விளையாடும் செயல்களில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் கண்களின் பின்புறம் உள்ள நரம்புகளை சுருக்கி விடுவதுடன் இதயம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்புக்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளையும் சுருக்குகிறது.

இதனால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகளுக்கான சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதுவே நாளடைவில் இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்த மிக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கிறது.

அதேசமயம் நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்து விட்டு அதிக நேரம் விளையாடும் குழந்தைகளின் ரத்த ஓட்டம், இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்த்த குழந்தைகளின் ரத்த ஓட்டத்தை விட சிறப்பாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாப்ரிமஸ்ஜித்:வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் – முஸ்லிம் தனியார் சட்டவாரியம்

ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி மற்றும் பால்தாக்கரேவுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்த சி.பி.ஐ மற்றும் மத்திய அரசிடம் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீதிபதி லிபர்ஹான் கமிஷன் அறிக்கை, அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மவ்லானா ரபே ஹஸன் நத்வியின் தலைமையில் இரண்டு தினங்களாக நடைபெற்ற வாரியக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அறிஞர்கள், மார்க்க தலைவர்கள், வாரியத்தின் 51 செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 200 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் வாரியத்தின் பிரதிநிதித்துவப்படுத்த நான்கு மூத்த வழக்கறிஞர்களை கண்டறிவதற்கான முயற்சிகள் தற்போது நடந்துவருவதாக வாரியத்தின் துணைப் பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் குரைஷி தெரிவித்தார்.

பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி உள்பட ஏழுபேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கின் விசாரணை ராய்பரேலியில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ அத்வானியை பாதுகாக்க முயல்கிறது

ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்கு சிபிஐ முயல்வதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நத்தை வேகத்தில் செயல் படுவதாகவும் ஆதாரங்களை மறைக்க முயல்வதாகவும் தெரிவித்தனர். அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் நடுவண் அரசிற்கும் சிபிஐ ன் இயக்குனருக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கவும் இவ்வழக்கில் மனுதாரராக தன்னை இணைத்துக் கொள்ளவும் தீமானிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் மௌலானா சையது ரபே ஹுஸ்னி தலைமையில் கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தில் அலஹாபாத் நீதிமன்ற பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு மற்றும் இடிப்பு வழக்கு, லிபரான் குழுவின் அறிக்கை, கல்வி உரிமை மற்றும் ஷரியத் சட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

வழகறிஞர் ஜாபரியப் ஜீலானி செயற்குழு முன் பாப்ரி மஸ்ஜித் வழக்கு சம்பந்தமான விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.பாப்ரி மஸ்ஜித் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பால் தாக்கரே,அத்வானி இருவரும் வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்விருவர் மீது கிரிமினல் வழக்கு தொடராமல் கடந்த மே 2001 ஆம் சிபிஐ கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் பாப்ரி மஸ்ஜித் குறித்த லிபரான் குழுவின் பரிந்துரைபடி செயல் படாதது குறித்து வருத்தம் தெரிவித்தது.மேலும் கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினர் மற்றும் மத சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் அது இந்திய அரசியல் சட்டபிரிவு 25 மற்றும் 26 ஆகியவைகளுக்கு எதிரானவை எனவும் தெரிவித்தது.

இந்திய ஊடங்கங்கள் முஸ்லிம்களின் ஷரியத் சட்டங்களை திரித்து கூறுவதால் இஸ்லாத்தை பற்றி மக்களிடம் தவறான பார்வை நிலவுவதாகவும் அதனால் முஸ்லிம் சட்ட வாரியம் ஷரியத் சட்டங்களை பற்றிய விளக்கங்களை பிரசுரித்து முஸ்லிம் அல்லாத வழகறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுநல வாதிகளுக்கு விநியகம் செய்ய உள்ளதாக தெரிவித்தது.

பேரூராட்சி

அன்னிய செலவானியை அள்ளித்தரும் அதிரையில் பொதுமக்களுக்கு தேவையான எந்த ஒரு பணியாயிருந்தாலும் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ்தான் செயல்படுத்தவேண்டி இருப்பதை நாம் அறிவோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி உறுப்பினர்களோ அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் உப்புச்சப்பானியாய் வாய்மூடி அமைதியாய் இருக்கின்றனர்.

சுகாதாரப்பிரச்சினைகள், தெருக்களில் கொசு மருந்து அடிப்பது, தெருக்களை சுத்தம் செய்தல், சாக்கடை கால்வாய் வசதி, ரோடு வசதி போன்றவைகள் அரசாங்கம் தானாகவே செயல்படுத்தவேண்டிய திட்டங்கள். ஆனால், இளிச்சவாயர்கள் எங்கு அதிகமாக இருக்கிறார்கள் என்று பார்த்து நமக்கு நாமே திட்டத்தை அறிமுகம் செய்கிறார்கள் அரசு அதிகாரிகள். அந்த வகையில் சமீபத்தில் கூட நமதூர் நடுத்தெருவில் அமையப்பெற்றுள்ள ரோட்டிற்கு நமக்கு நாமே திட்டம் மூலம் நமதூர் சகோதரர்கள் சுமார் மூன்று இலட்சம் வரை பண உதவி செய்தனர். இதில் கணிசமாக வெளிநாடுகளில் வசூல் செய்யப்பட்டது.



இதேப் போன்று, சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ததாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசும், நமதூரின் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க பேரூராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில் நமதூர் இளைஞர்கள் சிலர் ஒருசில ஆண்டுகளுக்கு முன் தெருக்களை சுத்தம் செய்வதற்கு, கொசு மருந்து அடிப்பதற்கும் பொதுமக்களிடம் வசூல் செய்து (நமக்கு நாமே) ஆட்களை நியமித்து பராமரித்து வந்தனர். ஆனால் கடுமையான பொருட்செலவினால் தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனது.



மனம் தளராத நமதூர் சகோதரர்கள் மீண்டும் பொதுமக்களிடம் வசூல் செய்து (திரும்ப திரும்ப சொல்லனும்னா அதே நமக்குநாமே திட்டம்) ஆயிஷா மகளிர் அரங்கம் பெயரில் இரும்பு கூண்டுகள் வாங்கி நகர் முழுதும் வைத்தனர்.

இந்த சிறிய வகை கூண்டுகளில் கொட்டப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்து அல்லது நாட்களை கடத்தியே சுத்தம் செய்கிறது. குப்பைகள் கூண்டுகளில் நிறைந்து வீதி முழுதும் விரவிக் கிடக்கிறது. சில தெருக்கள்ஆண்டுக்கு இருமுறை (இரண்டு பெருநாட்கள்) மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது.

ஏற்கெனவே எல்லா வீதிகளிலும் குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடுகள் விளைவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த பெரிய குப்பைத் தொட்டிகள் பெரிய அளவில் இருப்பதால் குப்பைத் தொட்டிக்கு வெளியில் குப்பை வருவது குறையும். ஆனாலும், பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி மருந்து அடித்து குடிமக்கள் சுகாதாரமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, April 24, 2011

பீமாப்பள்ளி துப்பாக்கிச்சூடு:மறு விசாரணைக்கு உத்தரவு

evidence

திருவனந்தபுரம்:பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக க்ரைம் ப்ராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தியபிறகு கைவிடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க திருவனந்தபுரம் ஜூடிஸியல் முதன்மை வகுப்பு மாஜிஸ்ட்ரேட்(இரண்டு) எ.எம்.பஷீர் க்ரைம் ப்ராஞ்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.
2009 மே 17-ஆம் தேதி பீமாப்பள்ளி-சிறியதுறை கடற்கரையில் வைத்து நடந்த அநியாயமான போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். 39 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. மரணித்த ஆறு நபர்களின் பின்பகுதியில் குண்டு தாக்கியிருந்தது.
துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஹகீமின் உறவினர் விழிஞ்ஞம் இஸ்ஹாக்கின் புகாரைத்தொடர்ந்து துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர் என குற்றஞ்சாட்டப்பட்ட துணை கமிஷனர்களான ஷரஃபுத்தீன், சுரேஷ்குமார், சி.ஐக்களான பிரதீப்குமார், ஜான்சன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி கொலைக்குற்றத்திற்கும், கொலை முயற்சிக்கும் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், புகாரில் உண்மையில்லை என சுட்டிக்காட்டி க்ரைம்ப்ராஞ்ச் வழக்கை கைகழுகியது. க்ரைம் ப்ராஞ்சின் இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் சாண்டி ஜார்ஜ் மூலமாக இஸ்ஹாக் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
பீமாப்பள்ளி துப்பாக்கிச்சூட்டைக்குறித்து விசாரணை நடத்த அரசு நியமித்த திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான ஒரு உறுப்பினர் நீதிவிசாரணை கமிஷனின் அறிக்கை வரவிருக்கவே உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கை முடித்து விட்டது மர்மமாக உள்ளது என இஸ்ஹாக் தனது புகாரில் கூறியுள்ளார்.ஃபாரன்சிக் அறிக்கையிலிருந்து கிடைக்கும் கூடுதல் விபரங்களின் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்துவதுதான் சிறந்தது என நீதிமன்றம் தெரிவித்தது.

சிறப்பு புலனாய்வுக்​குழு மோடிக்கு தகவல்களை கசியச் செய்​தது

sanjiv-bhatt630

புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு சாட்சிகளை மிரட்டியதாகவும், புலனாய்வுத் தொடர்பான விபரங்களை குஜராத் அரசுக்கு கசியச் செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் ஐ.ஜி.சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
வாக்குமூலங்களை பதிவுச் செய்வதில் சிறப்பு புலனாய்வுக்குழு விருப்பமில்லாமல் இருந்ததாக சஞ்சீவ் பட் தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
“2009 நவம்பர் மாதம் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு நான் ஆதாரங்களை அளித்த பிறகு கடந்த மார்ச் மாதம் எனது வாக்குமூலத்தை பதிவுச் செய்வதற்கு முன்னோடியாக குஜராத்தில் ஒரு உயர் அதிகாரி புலனாய்வுக் குழுவிடம் கூறவேண்டியது என்ன? கூறக்கூடாதது என்ன? என்பதுக் குறித்து எனக்கு உத்தரவிட முயன்றார்.” இதுத்தொடர்பான ஆதாரங்களை பட் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இத்துடன் 2002 பி௦ப்ரவரி 26,27 ஆகிய தேதிகளில் கோத்ரா நகரத்தில் உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடத்திய தொலைபேசி உரையாடலின் பதிவுகளின் ப்ளாப்பியும் தொலைபேசி உரையாடல்கள் குறித்த ஆவணங்களின் ஒரிஜினல் ப்ரிண்டவுட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2009 நவம்பர் மாதம் சிறப்பு புலனாய்வுக்குழு தன்னை முதன்முறையாக தொடர்புக் கொண்டதாக சஞ்சீவ் பட் கூறுகிறார்.
“ஒரு குறிப்பிட்ட தினத்தில் டி.ஐ.ஜி மல்கோத்ராவை சந்திக்க வேண்டுமென தொலைபேசி மூலம் எனக்கு உத்தரவு கிடைத்தது. அடுத்த நாளே ஒரு அரசு அதிகாரி என்னை சந்திக்க வந்தார். சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் என்ன கூறவேண்டும் என்பதுக் குறித்து அவர் என்னிடம் தெரிவித்தார்.
2002 பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் அவரும் கலந்துக்கொண்டார். எனக்கும், சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கும் மட்டுமே தெரிந்த செய்தி (சிறப்பு புலனாய்வுக்குழு சஞ்சீவ் பட்டை விசாரணைக்கு அழைத்த செய்தி) எவ்வாறு அரசுக்கு தெரியவந்தது என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என சஞ்சீவ் பட் கூறுகிறார்.
மாநில புலனாய்வுத் துறையில் துணை புலனாய்வு அதிகாரியான கெ.டி.பந்தை 2011 ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு அழைத்தது. சிறப்பு புலனாய்வுக்குழு உத்தரவுக்கிணங்க வாக்குமூலம் அளிக்கவேண்டுமென அவர்கள் அவரை கட்டாயப்படுத்தினர். இல்லையெனில், வழக்கில் கைது செய்யப்போவதாக மிரட்டினர். வாக்குமூலம் அளிக்க தயார் என தெரிவித்து மார்ச் 18-ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் ஆர்.கே.ராகவனுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.” என பட் கூறுகிறார்.
“ஆனால், சி.ஆர்.பி.சி 164 இன் படி வாக்குமூலத்தை பதிவுச் செய்யுமாறு நான் கோரிக்கை விடுத்தேன். ஏற்கனவே சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சார்ந்த மல்கோத்ராவுக்கும், பரம்வீர்சிங்கிற்கும் அளித்த வாக்குமூலத்தின் விபரங்கள் அப்படியே அரசுக்கு அளிக்கப்பட்டிருந்தது.
பல தடவை நான் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருக்கும் வேளையில் நான் பல காரியங்களைக் குறித்து கூறும்பொழுது சிறப்பு புலனாய்வுக் குழுவினர் என்ன உற்சாகம் இழக்கச்செய்ய முயன்றனர். மேகாணிநகர் கொலை வழக்கைக் குறித்து மட்டும் கூறினால்போதும் எனவும், இதர காரியங்களைக் குறித்து கூறத் தேவையில்லை என அவர்கள் உத்தரவிட்டனர்.
இனப் படுகொலையில் உயர் மட்ட சதித்திட்டம் குறித்துதானே சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்துகிறது? என நான் கேள்வி எழுப்பியபொழுது எனது வாக்குமூலத்தை முழுமையாக பதிவுச்செய்ய அவர்கள் தயாராகினர்.” என சஞ்சீவ் பட் கூறுகிறார்.
குஜராத் இனப் படுகொலையில் மோடியின் நேரடி பங்கைக் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சமர்ப்பித்துள்ள பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் முதல்வர் நரேந்திர மோடியை விசாரிக்கவேண்டும் என சி.பி.எம் பொலிட் பீரோ வலியுறுத்தியுள்ளது. இனப் படுகொலையில் மோடியின் பங்கு பிரமாணபத்திரத்தின் மூலம் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் மோடிக்கு எதிரான விசாரணையை பூர்த்திச் செய்யவும், அவரிடம் விசாரணை நடத்தவும் தாமதப்படுத்தக் கூடாது என பொலிட் பீரோ கோரிக்கை விடுத்துள்ளது.

நன்றி : தூது online.

மாணவர்கட்குப் பயன் தரும் இணைய தளங்கள்


      இதனை தமிழக அரசின்  கல்வி அமைச்சகம்  இதனை உருவாக்கியுள்ளது.இதிலே  12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு  என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
2. http://www.alfy.com/
   இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும்  நிறம்தீட்டுதல் வீடியோ  கிளிப்ஸ் என  விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம்.
3. http://www.coolmath4kids.com/
     இத்தளம் குழந்தைகளின்  கணித  அறிவு  ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது.
4. http://kids.yahoo.com/
    இது  குழந்தைகளுக்காக யாஹூ  நிறுவனத்தின்  படைப்பாகும்.
5. http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp
    இது தினமலர்  நாளிதழின் கல்விக்கானப்  படைப்பாகும் இதிலே  மாணவர்களுக்கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன.
6. http://www.educationatlas.com/
     படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல்  அவற்றினை  மேம்படுத்துதல் போன்றவற்றினை  இத்தளம்  சிறப்பாகக்  கூறுகின்றது.
7. http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
 ஆங்கில  அறிவினை  ஆரம்பத்தில்  இருந்தே  வளர்த்துக் கொள்வதற்கானத்  தளம்.
8. http://www.tamilnotes.com/
   தமிழ்  இலக்கண  அறிவை  வளர்த்துக் கொள்வதற்கான  இணையம்.

சவூதி: மதீனா நகரில் 15 இடங்களில் தங்கம் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவின் மதீனா நகரின் சுற்றுப்புரங்களில் 15 - க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் உள்ளிட்ட உயர் மதிப்பு உலோகங்கள்  செறிவுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மதீனா மாநிலத்தின் அல் ஹினாக்கியா, அல் மஹத் பகுதிகளில் ஆய்வு செய்த சவூதி அகழ்வாராய்ச்சி அமைப்பினர் இத்தகவலை செய்தியாளர்களிடம் அளித்துள்ளனர். சவூதியிலிருந்து வெளிவரும் ஓகாஸ்  அரபு நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது

எனினும் இவ்விடங்களில் சுரங்கத் தொழிலை மேற்கொள்ள அரசு தரப்பு மேலதிக அனுமதியைத் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேய்ச்சல் நிலங்கள், மக்கள் வாழிடங்கள் என்று இப்பகுதி அமைந்துள்ளதே அதற்குக் காரணம் என்றும் அப்பத்திரிக்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.

சவூதி அரேபியாவில் தற்சமயம் மூன்று தங்கச் சுரங்கங்கள் செயற்படுகின்றன. அவற்றுள் அல் மஹத் அல் தப்பாப், அல் ஷுகைராத் ஆகியன மதீனாவில் அமைந்தவை என்பதும், அல் அமர் (அல் குவாவியா) என்பது ரியாத் பிராந்தியத்தில் அமைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.

Saturday, April 23, 2011

அதிரையில் இன்றும் மழை நீடிக்கும்!

நேற்றிரவு அதிரையில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது . 
கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்து அதிரையில் மழை தொடர்ந்து வந்தது. இதனை தொடர்ந்து நேற்றிரவும் (22/04/2011) அதிரையில் பலத்த மழை பெய்துள்ளது இதன்னால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளு  குற்றாலம் போல் தட்பவெட்பம் நிலவி வருகிறது .அதிரையில் இன்றும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

நேற்றிரவு அதிராம்பட்டினத்தில் 20 மிமீ மழை பெய்துள்ளது

சங்க்பரிவாரின் வெறியாட்டம்:நான்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கைது

ஒற்றப்பாலம்:நேற்று முன்தினம் சங்க்பரிவார் பயங்கரவாதிகள் கேரள மாநிலம் ஒற்றப்பாலத்தில் நடத்திய வன்முறை வெறியாட்டம் தொடர்பாக நான்கு சங்க்பரிவார் பயங்கரவாதிகளை போலீஸ் கைது செய்துள்ளது.
போராட்டம் நடத்தும் வேளையில் ஆட்டோவை அடித்து உடைத்த சம்பவத்தில் வேணுகோபால்(வயது 42), சங்கரன் குட்டி( வயது 35), மாக்குண்ணி, ஜெயன்(வயது 44) ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.
ஒற்றப்பாலம் பகுதியில் இரண்டு நாட்களாக தொடர்ந்த தாக்குதல் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முழு அடைப்பைத் தொடர்ந்து மக்கள் வாழ்க்கை மாமூல் நிலைக்கு திரும்பியுள்ளது. நேற்று அசம்பாவிதங்கள் ஒன்றும் நடக்கவில்லை.
கடந்த புதன்கிழமை ஒற்றப்பாலம் எஸ்.டி.பி.ஐ மண்டல தலைவர் மரைக்காயர் பைக்கில் செல்லும் பொழுது சங்க்பரிவார பயங்கரவாதிகள் அவரை வெட்டிக்காயம் ஏற்படுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து உருவான அசம்பாவித சம்பவங்கள் பிரச்சனைக்கு காரணமாகின.
எஸ்.ஐ வேலாயுதன் தலைமையிலான இருநூறு போலீசார் ஒற்றப்பாலத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை நடந்த பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார அமைப்புகள் நடத்திய முழு அடைப்பில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறைக்கு வழிவகுத்த போலீசாருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மரைக்காயரை கொல்ல முயன்றவர்களை இதுவரை கைது செய்ய முடியாதது போலீசாரின் கையாலாகதனம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிரியாவில் பயங்கரம்:எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு-40 பேர் மரணம்

syrian protest

டமாஸ்கஸ்:ஜும்ஆ தொழுகைக்கு பிறகு சிரியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த மக்கள் எழுச்சி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் கொல்லப்பட்டனர். மத்திய நகரமான ஹம்ஸ் மற்றும் தெற்கு நகரமான அஸ்ரா ஆகிய இடங்களில் கொல்லப்பட்டவர்களைக் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
டமாஸ்கஸில் போராட்டம் நடத்த திரண்ட மக்கள் மீது போலீஸ் கண்ணீர் குண்டை பிரயோகித்தது.வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் போராட்டம் நடத்த எதிர்ப்பாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் எல்லா நகரங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குர்த் மக்கள் அதிகமாக வாழும் ஹஸக்கில் ஜும்ஆ தொழுகை முடிந்து ஒன்று திரண்ட எதிர்ப்பாளர்கள் மீது அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதேவேளையில், சிரியாவின் அனைத்து மாகாணங்களின் ஒருங்கிணைந்த கமிட்டி நடைமுறைக்கு வந்தது. அமைதியான ஜனநாயக மாற்றத்தை தாங்கள் கோருவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
யெமன் தலைநகரான ஸன்ஆவில் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். வளைகுடா நாடுகள் தயாராக்கிய திட்டத்தின் அடிப்படையில் பதவி விலக வேண்டுமென அரபு தலைவர்கள் ஸாலிஹிடம் நேற்று முன்தினம் வலியுறுத்தினர்.
அரசியல் சட்டத்தை பின் தொடர்வதற்கான எவ்வித முன் உதாரணங்களுக்கும் தயார் என தெரிவித்த ஸாலிஹ் வளைகுடா நாடுகளின் முயற்சிகளை வரவேற்றார்.

2011-ஆம் ஆண்டிற்கு பிறகும் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தொடர்வதாக அறிக்கை

 

american military
வாஷிங்டன்:2011- ஆம் ஆண்டுடன் ஈராக்கிலிருந்து ராணுவத்தை முற்றிலும் வாபஸ் பெறப் போவதாக அளித்துள்ள வாக்குறுதியை அமெரிக்க நிறைவேற்றவில்லை என அறிக்கையொன்று கூறுகிறது.
ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை தடுப்பது என்ற போலியான காரணத்தை காட்டி ஈராக்கில் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதற்கு அமெரிக்க தயாராகுவதாக அமெரிக்க, ஈராக் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால்ட்ஸ்ட்ரீர் ஜெர்னல் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
இரு நாடுகளும் இவ்விவகாரத்தில் ஏகமனதான தீர்மானம் எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தொடர்ந்து செயல்பட வேண்டுமானால், அது தொடர்பான பேச்சு வார்த்தைகளை தீவிரமாக்க அமெரிக்க ராணுவ தளபதி அட்மிரல் மைக் முல்லன் ஈராக் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உடல் எடையை குறைக்கும் கடல் பாசி

big child

கடல் பாசி அல்லது கடல் பூண்டுகளை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமான முறையில் உடல் மெலிவடைய இது ஓர் நல்ல முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொக்கலேட் கலந்த பாலில் இதைக் கலந்து குடிப்பதன் மூலம் பசியைக் அடக்க முடியும்.
காலையில் இதை அருந்தும் பழக்கம் உள்ள ஆண், பெண் அகிய இரு பாலாருள் மூன்றில் ஒருவர் பகல் நேரம் ஆகின்ற போது, ஏனையவர்களை விட பசி உணர்வு குறைந்தவர்களாகவே காணப்பட்டனர்.
உடல்பருமன் தொடர்பான ஒ.பே.சி.டி என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய பானத்தை அருந்துவதன் மூலம் இடையில் நொருக்குத் தீனிகளும் தேவைப்படாது.
உடல் பருமனைக் குறைப்பதற்கு இவ்வாறான ஆரோக்கியமான வழிமுறைகள் பல உள்ளன. ஆனால் அவற்றை யாரும் பின்பற்றாமல் இருப்பது தான் பிரதான பிரச்சினை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு பங்கு – குஜராத் மாநில உயர் போலீஸ் அதிகாரி அளித்துள்ள பிரமாணப்பத்திரம்

modiofficerbhatt295

அஹ்மதாபாத்:2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கொடூரமான முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குண்டு என உயர் போலீஸ் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இனப் படுகொலையின் மூலமாக ஹிந்துக்களின் கோபத்தை தணிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவும் மோடி மூத்த போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் வலியுறுத்தினார் என சுட்டிக்காட்டி ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் சமர்ப்பித்துள்ளார்.
இனப் படுகொலையின் போது கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இஹ்ஸான் ஜாப்ரியின் வழக்கில்தான் பட் கடந்த 14-ஆம் தேதி வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் மீது நம்பிக்கையில்லாததால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி பிரமாணப்பத்திரம் அளிப்பதாக சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
குஜராத் அரசை வழக்கிலிருந்து தப்பிக்க உதவ எஸ்.ஐ.டி முயலுவதாக சஞ்சீவ் பட் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் இனப் படுகொலையின் போது குஜராத் மாநில ரகசிய புலனாய்வு பிரிவில்(எஸ்.ஐ.பி) டி.சி.பியாக பதவி வகித்தவர் சஞ்சீவ் பட். 1998-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பாட்சை சார்ந்தவர். டி.ஐ.ஜி ராங்கிலுள்ள அவர் தற்போது மாநில ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தின் தலைவராக இருக்கிறார். சத்திய வாக்குமூலம் வெளியான சூழலில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டுமென அவர் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கூடிய போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் முஸ்லிம் இனப் படுகொலையை தீவிரமாக்குவதற்கான உத்தரவுகளை மோடி பிறப்பித்துள்ளார். அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிடுவோர் மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தாக்குதலுக்கு ஆளானவர்கள் உதவி கேட்டு அழைக்கும் பொழுது அதனை அலட்சியம் செய்யுமாறும் மோடி உத்தரவிட்டார் என சஞ்சீவ் பட் அளித்துள்ள பிரமாணபத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே நடுநிலையாக நடந்துவருகிறது போலீஸ். ஆனால், இம்முறை முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும், ஒருபோதும் இதுமாதிரியான (கோத்ரா ரெயில் எரிப்பு) சம்பவங்கள் நிகழக்கூடாது. ஹிந்துக்களிடையே கோபம் பற்றி எரிகிறது என போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் மோடி கூறியுள்ளார் என தெரிவிக்கிறார் சஞ்சீவ் பட்.
மோடியின் வீட்டில் நள்ளிரவில் நடந்த கூட்டத்தில் சஞ்சீவ் பட் உள்பட எட்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சத்திய வாக்குமூலத்தை எஸ்.ஐ.டியிடம் வழங்காமல், உச்சநீதிமன்றத்தில் நேரடியாக சமர்ப்பிக்க என்ன காரணம்? என சஞ்சீவ் பட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு அதற்கான பதில் பிரமாணபத்திரத்தில் விவரித்துள்ளதாக சஞ்சீவ் பட் பதிலளித்துள்ளார்.
‘ரகசிய புலனாய்வு அதிகாரியான எனக்கு மோடியின் உத்தரவுகளை குறித்து தெளிவாக தெரியும். சட்டரீதியான கடமை இருப்பதால் பணியின் காரணமாக இத்தகைய சம்பவங்களை வெளிப்படுத்தாமலிருப்பது சரியல்ல’ என அவர் தெரிவித்தார். ஆனால், உச்சநீதிமன்றத்தில் நேரடியாக அளித்த பிரமாண பத்திரம் கசிந்ததில் சஞ்சீவ் பட் அதிர்ச்சியை வெளியிட்டார். ‘கூட்டத்தில் பங்கேற்க யார் கட்டளையிட்டார்கள்? யாருடன் கூட்டத்திற்கு சென்றீர்கள்? ஆகியவற்றை பிரமாணபத்திரத்தில் தெரிவித்துள்ளேன். எஸ்.ஐ.டிக்கும், நீதிமன்றத்திற்கும் தேவையான உண்மை அதில் உள்ளது’ என சஞ்சீவ் பட் தெரிவித்தார்.
வருகிற 27-ஆம் தேதி இதர ஆவணங்களுடன், சஞ்சீவ் பட் அளித்துள்ள சத்திய வாக்குமூலமும் பரிசீலிக்கப்படும். ‘இத்தகைய விபரங்களை எஸ்.ஐ.டியிடம் தெரிவித்திருந்தேன். ஆனால், கிடைத்த விபரங்களின் அடிப்படையில் செயல்படாமல், குஜராத் அரசை பாதுகாப்பதற்கு எஸ்.ஐ.டி முயன்றதாக பிரமாணபத்திரத்தில் விவரித்துள்ளேன்.’
மூத்த போலீஸ் அதிகாரி மோடியின் உத்தரவுகளை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்தினார் என சஞ்சீவ் பட் தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஜூனியர் அதிகாரியாக இருந்ததால் சஞ்சீவ் பட் பங்கேற்கவில்லை என எஸ்.ஐ.டி விசாரணை செய்யும் வேளையில் மோடி வாக்குமூலம் அளித்திருந்தார். முன்னாள் சி.பி.ஐ தலைவர் ஆர்.கே.ராகவன் தலைமையில் எஸ்.ஐ.டி மார்ச் 21,22,23 ஆகிய தேதிகளில் சஞ்சீவ் பட்டிடம் விரிவாக விசாரணை நடத்தியிருந்தது.
புதிய தகவல்கள் வெளியான சூழலில் மோடியும், பா.ஜ.கவும் நாட்டிற்கு பதில் அளிக்கவேண்டுமென காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மோடிக்கு புகழாரம் சூட்டுபவர்கள் சஞ்சீவ் பட்டின் பிரமாணப்பத்திரத்தை வாசிக்கட்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

Thursday, April 21, 2011

நமதூரில் முதல் பிசிஒதிரபி


நமதூர் கீழத்தெருவைச் சேர்ந்த S.S.சேக் தாவுத் (பாட்டன் வீடு) மகன் ஜம்ஸித் முகம்மது, இவர் காதிர் முகைதீன் பள்ளியில் +2 அறிவியல் பாடம் படித்துவிட்டு கடந்த 2006 ஆம் ஆன்டு முதல் திருச்சி கமலம் விஸ்வநாதன் பிஸியோதெரபி கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பயின்று விட்டு தற்போது கோவையில் உள்ள கங்கா மெடிக்கல் சென்டர் என்ற பிரபல மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.




மருத்துவத்துறையில் நம்மவர்கள் குறிப்பாக அதிரைக்காரர்கள் அதிகம் வரமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஜம்சித் முகம்மது என்கிற நமதூர் வாலிபர் ஒருவர் இத்துறையில் பட்டம் பெற்று பணியில் சேர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. அவருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுபோல்,  இத்துறையில் சகோதரர் ஜம்சித் மேற்படிப்புகளும், அனுபவமும் பெற்று அதிரை மக்களுக்கும் சேவை செய்யவும் முன்வரவேண்டும்.

+2 தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பிஸியோதெரபி படிப்பு தொடர்பான விவரங்களைப் பெற சகோதரர் ஜம்சித் முகம்மது அவர்களிடத்தில் கலந்துரையாடவும்.
 
அன்னாரின் தொலைபேசி
S.JAMSHEED MOHAMED
EMAIL: JAMSHEED_27@YAHOO.CO.IN
CELL: 9894283164
 

அதிரையில் பேருந்து விபத்து

இன்று (21.04.2011) காலை 11.30 மனி அளவில் பட்டுக்கேட்டையில் இருந்து அதிரையை நோக்கி வந்து கொன்டு இருந்த பேருந்து நமதூர் வெள்ள குழம் அருகில் வந்த பெழுது பக்கத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. நமதூரில் காலை 9 முதல் 12 மனி வரை மின் தடை இருந்ததால் இறைவன் அருளால்  பெரும் சேதம் தவிர்க்கப் பட்டுள்ளது. 







நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ். 

Wednesday, April 20, 2011

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 17 பேர் பலி!

அருணாசலப் பிரதேசத்தில் நேற்று (செவ்வாய் அன்று) நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் செவ்வாய் அன்று பிற்பகல், 23 பேருடன் சென்ற தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர், விபத்தில் சிக்கியது.அதில் பயணம் செய்தவர்களில் 17 பேர் உயிரிழந்தனர்.
23 பேருடன் கவுஹாத்தியில் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், அருணாசலப் பிரதேசத்தின் மலை நகரமான தவாங்கில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்க முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி, மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதியம் 1.15 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த விபத்தில், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு குழந்தைகள் மற்றும் ஐந்து சிப்பந்திகள் உட்பட, 17 பேர் பலியாயினர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; விபத்து குறித்து விசாரித்து வருகிறோம்  என்றனர்.
இந்த சோக சம்பவத்திற்காக, அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா கலவரத்தை தூண்டவில்லை: அமெரிக்கா மறுப்பு!

சிரியாவில் தாங்கள் கலவரத்தை தூண்டவில்லை என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிரான கலவரத்தை அமெரிக்கா தான் தூண்டிவிடுகிறது என்று விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியில், அமெரிக்க அதிபராக புஷ் இருந்தபோது, அவர் சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிரான கலவரத்தை தூண்டுவதற்காக நிதி உதவி செய்தார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிரியாவுக்கு எதிராக கலவரத்தை தாங்கள் தூண்டவில்லை என்று மறுத்துள்ள அமெரிக்கா, சிரியா மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்ற அதிபர் பஷார் அல் ஆசாத் முன்வர வேண்டும் என்றும் கூறி உள்ளது.

நன்றி : இந்நேரம்.

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து தேர்தல் கமிஷன் அலுவலர் மரணம்!

ஓடும் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த தமிழக தேர்தல் கமிஷனின் சார்பு செயலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கோவையைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 45). இவர், சென்னை வில்லிவாக்கம் வைகை தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தலைமைச் செயலகத்தில், தமிழக தேர்தல் கமிஷன் துறையில், சார்பு செயலராக வேலை பார்த்து வந்தார்.
சென்ற ஞாயிறு அன்று, குமரவேல் நண்பர் வீட்டிற்கு செல்ல மின்சார ரயிலில் பயணம் செய்தார். பட்டரைவாக்கம் ரயில் நலையம் அருகே சென்ற போது, குமரவேல் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமரவேல் காலமானார்.
தகவல் அறிந்தவுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா மற்றும் தேர்தல் துறை சார்ந்த அதிகாரிகள் நேற்று (திங்கள் அன்று) அரசு பொது மருத்துவமனைக்கு வந்து, குமரவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நன்றி : இந்நேரம் .

ஜெய்தாப்பூர்:முழு அடைப்பில் வன்முறை; பேருந்துகள் எரிப்பு

800_india_nuclear_protest_ap_110419

மும்பை:ஜெய்தாப்பூர் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ரத்னகிரி மாவட்டத்தில் சிவசேனா அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு வன்முறையாக மாறியது.
முழு அடைப்புக்கு ஆதரவாளர்கள் மருத்துவமனைமீது தாக்குதல் நடத்தினர். ஏராளமான பேருந்துகள் தீக்கிரையாயின. திங்கள் கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணித்திருந்தார். போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டுமென மஹாராஷ்ட்ரா சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஏக்நாத் கத்ஸே வலியுறுத்தினார். துப்பாக்கிச்சூட்டிற்கு அரசு பெரிய விலை கொடுக்கவேண்டிவரும் என சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
ஆறு அணு உலைகள் அடங்கும் ஜெய்தாப்பூர் அணுமின் நிலையம் உலகின் மிகப்பெரிய அணுசக்தித் திட்டங்களில் ஒன்றாகும். முழு அடைப்பு வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து ரத்னகிரி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு மஹாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் பலியான தப்ரேஸ் அப்துல் ஸயனேக்கரின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவமனையை முழு அடைப்பு ஆதரவாளர்கள் தாக்கினர். இவர்கள் ரத்னகிரி-கோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தடை ஏற்படுத்தினர். போலீஸ் ஸ்டேசன் மீது தாக்குதல் நடத்தியதற்கு பின்னணியில் அரசியல் சதித்திட்டம் உள்ளதா? என்பதுக் குறித்து விசாரணை நடத்தப்படுமென உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நபரின் உடலை அவருடைய உறவினர்களோ, ஊரைச் சார்ந்தவர்களோ பெற்றுக்கொள்ளவில்லை. அணுசக்தி திட்டத்தை முதல்வர் பிருதிவிராஜ் சவான் வாபஸ் பெறவேண்டும் என்பது அப்பிரதேச மக்களின் விருப்பமாகும்.
துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை அதிகாரி அஜீத் பவாரை சஸ்பெண்ட் செய்து அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தி வழக்குப் பதிவுச்செய்ய அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட

alsar

உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ்டிரைடிஸ்” என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.
அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவலைப்படும் போதோ அல்லது பொறாமைப்படும் போதோ கூட மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது.
மேலும் அல்சர் உருவாக சில கிருமிகளும் காரணமாக உள்ளன என்கிறது மருத்துவ உலகம். அது ஆன்ட்ரல் கேஸ்டிரைடிஸ். வழக்கமாக வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது வலி குறையும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடும் போது மீண்டும் வலி ஏற்படுகிறது. அல்சர் கிருமியை ஒழிப்பதற்கான மாத்திரை தான் அல்சர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கும்.
தலைவலி உள்ளிட்ட உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி கடைகளில் வாங்கி சாப்பிடும் தவறான மருந்துகளின் காரணமாகவும் அல்சர் வர வாய்ப்புள்ளது. அப்படி அல்சர் வந்த பின்னர் அது பல தொந்தரவுகளை உண்டாக்குகிறது. மேல் மற்றும் நடுவயிறு, மார்பெலும்பின் பின்புறம் எரிவது போன்ற வலியினை ஏற்படுத்தும். பசியின் போது வலிக்கும். குமட்டல் போன்ற அறிகுறியையும் ஏற்படுத்தும்.
இதனால் வயிறு உப்பியது போலத் தோன்றி ஏப்பத்தை உருவாக்கும். வயிறு காலியாக இருக்கும் போது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அல்சர் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். இது போன்ற தொல்லைகள் சாப்பிட்ட பின்னர் மறைந்து மறுபடியும் உங்களைத் தொல்லை செய்யும். எப்படித் தடுக்கலாம்?
தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். சாப்பாட்டில் காரம் குறைக்கவும். அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ளலாம். வலி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும்.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறைந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.
இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாட்டி வைத்தியம் அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.
அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.
ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

Tuesday, April 19, 2011

மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!

மே 13ஆம் தேதி அன்று, தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு அடுத்த  நாளும் தமிழகத்தில் முக்கியமான முடிவுகள் வெளியிடப்படும் நாளாக இருக்கிறது. பிளஸ் டூ தேர்வு முடிவை மே 14ஆ‌ம் தேதி வெளி‌யிட ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறை முடிவு செ‌ய்து‌ள்ளது.

கட‌ந்த மா‌‌ர்‌ச் 2ஆ‌ம் தே‌தி த‌‌மிழக‌த்‌தி‌ல் தொடங்கிய பிளஸ் டூ தேர்வு மார்ச் 25ஆ‌ம் தே‌தி முடிவடை‌ந்தது. இ‌ந்த தே‌ர்வை 7,74,205   மாணவ - மாணவியர் எழுதியுள்ளனர். அவர்களில்    3,87,102 பேர் மாணவிகள். தனித்தேர்வர்கள் 57,056 பேர் ஆவார்கள். விடை‌த்தா‌ள்க‌ள் ‌திரு‌‌த்து‌ம் ப‌ணி 43 மையங்களில் மார்ச் 23ஆ‌ம் தேதி தொடங்கியது. இ‌‌ன்றுட‌ன் ‌விடை‌த்தா‌ள்க‌ள் திருத்தும் பணி முடிவடைகிறது. அடுத்த கட்டமாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் வேலை நடைபெற்றுவருகிறது. இதை‌த் தொட‌ர்‌ந்து பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மே 14ஆ‌ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதே நேர‌த்த‌ி‌ல் பத்தா‌‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு மே 25ஆ‌ம் தேதி வெளியிட ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. மார்ச் 28ஆ‌ம் தேதி தொடங்கிய பத்தா‌‌ம் வகு‌ப்பு தேர்வு ஏப்ரல் 11ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8,56,956 மாணவ-மாணவியர் எழுதியுள்ளனர். இ‌ந்த விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இ‌ந்த தேர்வு முடிவுகளை மே 25ஆ‌ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும்

கடைசியாக பெட்ரோல் விலை கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி லிட்டருக்கு ரூ.2.50 அதிகரித்தது.  இப்போதைய நிலவரப்படி கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து விட்டத்தால், இந்திய எண்ணை நிறுவனங்களில் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.4.50, டீசலில் ரூ.15.79, மண்ணெண்ணையில் ரூ.24.74 மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டரில் ரூ.297.80 இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.


எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வேண்டி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாகவும், 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலையொட்டிய நடத்தை விதிகள் அடுத்த மே மாதம் 16-ந்தேதி முடிவுக்கு வந்த பின் இதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேட்டுப்பாளையத்தில் சூறாவளி: வாழைப் பயிர்கள் நாசம் !

மேட்டுப்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றின் காரணமாக ஏறத்தாழ 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால் சுமார் ரூ. 40 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அருகிலுள்ள பல கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு ஏறக்குறைய ரூ. 40 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்றனது.

மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் வனப்பகுதிகளின் ஓரத்தில் அமைன்துள்ளதால், வனங்களிலிருந்து அடிக்கடி ஊரினுள் புகுந்துவிடும் காட்டு யானைகள் அங்குள்ள வாழைத் தோப்புக்களில் வாழைப் பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. இதனால் வேதனையடைந்திருந்த விவசாயிகளை இச்சூறாவளிக் காற்றினால் ஏற்பட்டுள்ள சேதம் நிலை குலையச் செய்துள்ளது.

விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்து வருவதால் தமிழக அரசு இயற்கை சீற்றம் மற்றும் யானைகளால் சேதமடைந்த வாழைப் பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோயற்ற வாழ்வுக்கு தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்



ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவு தான் சரியானது. மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும்.

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வு தான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்.