அருணாசலப் பிரதேசத்தில் நேற்று (செவ்வாய் அன்று) நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் செவ்வாய் அன்று பிற்பகல், 23 பேருடன் சென்ற தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர், விபத்தில் சிக்கியது.அதில் பயணம் செய்தவர்களில் 17 பேர் உயிரிழந்தனர்.
23 பேருடன் கவுஹாத்தியில் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், அருணாசலப் பிரதேசத்தின் மலை நகரமான தவாங்கில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்க முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி, மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதியம் 1.15 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த விபத்தில், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு குழந்தைகள் மற்றும் ஐந்து சிப்பந்திகள் உட்பட, 17 பேர் பலியாயினர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; விபத்து குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
இந்த சோக சம்பவத்திற்காக, அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment