நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Friday, April 29, 2011
கோடையில் குளிர வைக்கும் எலந்தைப்பழம்:
இது நன்கு பழுத்து புழுவுடன் வந்தாலும் சரி அல்லது இன்னும் சரி வர பழுக்காமல் செங்காயாக வந்தாலும் சரி ஒரு கட்டு கட்டாமல் விடுவதில்லை. உப்பு போட்டு அல்லது பொடி சேர்த்து சாப்பிட்டாலும் சும்மா வெறுமனே சாப்பிட்டாலும் நன்றாக சுவை தரும். வயது வித்தியாசமின்றி வாயில் எச்சிலை ஊற்றெடுக்க வைக்கும். (இதன் மறுபிறவி தான் கடையில் விற்கும் எலந்தவடை பார்க்க கண்ணங்கரே என்று இருந்தாலும் அதன் சுத்தம்,பத்தம் பார்க்காமல் திண்டால் தான் அன்றைய பொழுதே இனிமையாக கழியும் என்பது அறிவிக்கப்படாத ஊர் வழக்கமாக இருந்தது அந்த காலத்தில்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment