நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Thursday, April 28, 2011
கோடையில் குளிர வைக்கும் நொங்கு
நொங்கு:
நமதூர் சுற்று வட்டார கிராமப்புறங்களிலிருந்து கோடைகாலத்தை வரவேற்கும் முகமாக ஊரின் முக்கிய சந்து, முச்சந்திகளில் வந்திறங்கி குவிந்து கிடக்கும். அதை அழகாக சீவி அதனுள் இருக்கும் கண்களை தோண்டி எடுத்து பனைமட்டையில் வைத்து விற்பர். அதை பார்ப்பவர்களெல்லாம் ஆர்வத்துடன் வாங்கிச்சென்று வீட்டின் பெண்களிடம் கொண்டு வந்து ஒப்படைப்பர். அவர்களும் அதை செவ்வனே சுத்தம் செய்து அவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து பால் மற்றும் பன்னீருடன் கொஞ்சம் சீனியும் சேர்த்து அப்படியே குளிர் சாதன்ப்பெட்டியில் கொஞ்ச நேரம் வைத்து கிளாஸில் கொடுக்க நாம் குடித்த பின் உள்ளே சென்ற நுங்கு கோடை உஸ்னத்தையும், தாகத்தையும் எங்கே? என கேட்க வைத்து விடும். (அதன் பின் நொங்கு வண்டி மூலம் தொங்கு,தொங்கு என்று தெருவில் ஓடி விளையாண்டது மீதி).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment