மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து உருண்டு பள்ளத்தில் விழுந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் நேற்று இரவு ஒரு லாரியில் 40-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சியில் பங்கேடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் லாரி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து உருண்டு 300 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் 30 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் உடல்கள் மலை பகுதியில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மீட்பு குழுவினர் அவற்றை இன்று காலை மீட்டனர்.
இதேபோல் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பராமூர் என்ற இடத்தில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் ஒன்று சாலை ஓரத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் பாய்ந்தது. இதில் 9 பேர் பலியானார்கள். 2 விபத்துக்களிலும் சேர்த்து ஒரே நாளில் 41 பேர் பலியாகி உள்ளனர்.
No comments:
Post a Comment