Saturday, March 12, 2011

சவுதி அரேபியாவின் பொது மன்னிப்பு அறிவிப்பு

   சவுதி அரேபியாவின் பொது மன்னிப்பு அறிவிப்பு கீழ்கண்டவைகளுக்கு மட்டும்தான் பொருந்தும்  என அறிவிக்கப்படுகின்றது :
உம்ரா  / ஹஜ் / விசிட்விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கிஇருப்பவர்கள்.
 
·        இந்த பொது மன்னிப்பு,  வேலை சம்பந்தப்பட்ட விசாவில் வந்தவர்களுக்கு இல்லை. அதுபோல் HURBOOB - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கலுக்குமல்ல - அதன் பிரச்சனையில் உள்ளவர் வர்களுக்கும் அல்ல.
 
·        இந்த பொது மன்னிப்பு 23 மார்ச் 2011 ல் முடிவடைகின்றது . உம்ரா / ஹஜ் / விசிட் விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கிஇருப்பவர்கள் உடனடியாக இந்த சந்தர்பத்தை  மார்ச் 23  க்கு முன்பாகவே   பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுருத்தப்படுகின்றர்கள்.
 
·        யாரெல்லாம் இந்த குறுப்பிட்ட காலத்திற்குள் நாடு செல்ல வில்லையோஅவர்கள் அபராத தொகை கட்ட  நேரிடும்மேலும் அவர்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க நேரிடும்.
 
·       யாரிடத்தில் ஒரிஜினல் பாஸ்போர்ட் அட்டை இல்லையோஅவர்கள் அவுட்பாஸ் ( out pass ) பேப்பரும்,ஜவாஜாத் அலுவலகத்திலிருந்து உம்ராஹ் / ஹஜ் விசாவிர்காண அத்தாச்சி பேப்பரையும் கொண்டு வரவேண்டும்.   
 
 
அவசர சான்றிதல் - அவுட்பாஸ் பெறுவது எப்படி :
·        சம்பந்தப்பட்ட நபர்கள்,அவர்களின் பாஸ்போர்ட் காப்பியும்,அத்துடன்  ரேஷன்கார்டு அல்லது கார் வாகனவோட்டு சான்றிதல்அல்லது எலக்ரிகல் கார்டு அல்லது   ஏதாவது இந்தியன் அரசாங்கம் அல்லது மாநில  அரசாங்கத்தின் போட்டோ அடையாள அட்டை ஆகிய ஏதாவது ஓன்றை வைத்து   அவுட்பாஸ் விண்ணப்பிக்கவேண்டும்.
 
·        இந்த அவுட்பாஸ்  3 மாதத்திற்கு செல்லுபடியாகும்.         
 
HUROOB  CASES -வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள் 
·        ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள்,அவர்களின் கபீலிடத்திலிருந்து NOC certificate - பிரச்சனை இல்லை என்ற சான்றிதல்  வைத்திருக்கவேண்டும்.
·        ஜவாஜாத் - jawazat போலீஸ் பாது காவலில் வைக்கப்பட்டுதர்ஹீல் என்ற போலீஸ் நிலையதிலிருந்து அனுப்பப்படுவார்கள்.
·        இந்த பொது மன்னிப்பு,HURBOOB  CASES  - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள் -அதன் பிரச்சனையில் உள்ளவர் வர்களுக்கும் அல்ல.
·        தாயகத்திற்கு திரும்ப அவசர சான்றிதல் -அவுட்பாஸ்   மட்டும் போதுமானதல்ல.
·        ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள்,இந்நாட்டு   சட்டப்படிஅவர்களின் கபீலிடம் சென்று அவர்கள் பிரச்னைகளை முடித்து கொள்ள வேண்டும் .

No comments:

Post a Comment