பா ம க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படாததால் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை, காவல்துறையினர் கைது செய்த நிகழ்வு நெல்லையில் நடந்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம. க கட்சி தமக்கு ஒதுக்கப்பட்ட முப்பது தொகுதிகளில், ஒன்றில் கூட முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தவில்லை. இதைக் கண்டித்து, நெல்லையில், பா.ம.க.,வைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள், ராமதாசின் உருவ பொம்மையை எரிப்பதற்காக, நடுவீதிக்கு இழுத்து வந்தனர்.
அவர்களை மடக்கிய நெல்லை காவல்துறையினர் , காயிதேமில்லத் பேரவை தலைவர் பீர்முகமது உள்ளிட்ட, 20 பேரை கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம. க கட்சி தமக்கு ஒதுக்கப்பட்ட முப்பது தொகுதிகளில், ஒன்றில் கூட முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தவில்லை. இதைக் கண்டித்து, நெல்லையில், பா.ம.க.,வைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள், ராமதாசின் உருவ பொம்மையை எரிப்பதற்காக, நடுவீதிக்கு இழுத்து வந்தனர்.
அவர்களை மடக்கிய நெல்லை காவல்துறையினர் , காயிதேமில்லத் பேரவை தலைவர் பீர்முகமது உள்ளிட்ட, 20 பேரை கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
THANKS : http://www.inneram.com/
No comments:
Post a Comment