Friday, March 25, 2011

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முக்கிய அறிவிப்பு

தற்போது நடைமுறையில் உள்ள 15 நாள் கணக்கீடு 15 நாள் வசூல் என்ற முறை மாற்றப்பட்டு வரும் 01.04.2011 முதல் மாதம் முழுவதும் கணக்கீடு மற்றும் மாதம் முழுவதும் வசூல் பணி நடைபெறும் என்று மின் நுகர்வோர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கட்டாத நபரின் மின் இணைப்பை 16 ஆம் துண்டிப்பு செய்யும் முறைக்குப் பதிலாக மின் அளவீடு எடுத்த தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாத நபரின் மின் இணைப்பு 21ஆம் நாள் துண்டிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மீட்டரின் வெள்ளை அட்டையை மின் பயன்பாட்டை குறிப்பதற்கு வசதியாக மீட்டர் அருகிலேயே வைத்துக் கொள்ளும்படி மின் நுகர்வோர்கள் கேட்டுக் கொள்ள ப்படுகிறார்கள். வெள்ளை அட்டை தேவையனில் அருகில் உள்ள மின்சார அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளும்படி அனைத்து மின் நுகர்வோர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின் அளவீடு எடுத்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். என்றும், தவறினால் 21ஆம் நாள் மின் துண்டிப்பு செய்யப்படும்  என்றும், மீண்டும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. திருச்சி மண்டலத்தில் எந்த அலுவலகத்தில் வேண்டுமானாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் "INTERNET BANKING " மூலம்  கட்டணம் செலுத்தலாம் என்றும் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு :

அமேஜான் வாட்டர் பியூரிபியர் நிறுவனத்தாரால்" INTERNET BANKING "  மூலம் மின் கட்டணம் கட்டித்தரப்படும். உங்களுடைய மின் இணைப்பு என்னை அனுப்பினால் போதும்.மேலும் விபரங்களுக்கு இந்த தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும். +91 9994509779

இப்படிக்கு
    
அமேஜான் வாட்டர் பியூரிபியர்.

No comments:

Post a Comment