Wednesday, March 16, 2011

பஹ்ரைன் பதட்டம் - ஆறு பேர் பலி

பஹ்ரைனில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 6 பேர் கொல்லப் பட்டுள்ளனர். முத்து சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகுமாறு ராணுவம் விடுத்த வேண்டுகோளை ஆர்ப்பாட்டக்காரர்கள் புறக்கணித்து மோதலில் ஈடுபட்டனர்.கண்ணீர் புகையை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை ராணுவத்தினர் விரட்டினர்.

இந்த மோதலின் போது மூவர் கொல்லப்பட்டனர். மேலும் இரு காவல்துறையினர் வாகனங்கள் மோதி இறந்துள்ளதாக பஹ்ரைன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவைச் சார்ந்த ஒரு வீரரும் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


நேற்றைய அவசர நிலை பிரகடனத்திற்கு பின்னர் ஆர்ப்பாட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என பஹ்ரைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது தாக்குதல் நடத்தியதற்கு  ஷியா பிரிவைச் சார்ந்த முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


ஈரானைச் சார்ந்த கடுங்கோட்பாட்டாளர்கள் பஹ்ரைனை ஈரானின் 14வது மாகாணமாக சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment