
ஏற்கெனவே தமது சொந்த இருப்பிடங்களை இழந்த நிலையில் கூடாரங்களில் வசித்துவந்த மக்களை அவர்களின் வதிவிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற முனைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அங்கிருந்த பலஸ்தீனர்கள்மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடாத்தியதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஓர் அங்கவீனர் உட்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது தடவையாகவும் தமது இருப்பிடங்களை இழந்து அனாதரவான நிலையில் தெருவில் இறக்கப்பட்டுள்ள மேற்படி பலஸ்தீனர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படவேண்டும் என உள்ளூர் அமைப்புக்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களை நோக்கி அழைப்புவிடுத்துள்ளன.
No comments:
Post a Comment