Sunday, July 17, 2011

சென்னையில் 9 மாத குழந்தை கடத்தல்

சிசிந்தாதிரிப்பேட்டையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத குழந்தை மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ரஃபி, 28, இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாய்ராபானு, 25; சுவீட் கடைகளுக்கு பகோடா தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு, ஷப்னம் பானு, 2, என்ற பெண்குழந்தையும், ஆரிப் பாட்சா என்ற ஒன்பது மாத குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, முகமது ரஃபி வெளியில் சென்றுவிட, சாய்ரா பானுவும் கடைகளுக்கு பகோடா வினியோகிக்கச் சென்றார்.
இரவு 8 மணிக்கு, ஒன்பது மாத குழந்தையான ஆரிப் தூங்கிக் கொண்டிருந்தான். குழந்தை தூங்கியதால், வீட்டில் இருந்த பாட்டி பானு பீவி, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றார்.சிறிது நேரம் கழித்து வீட்டில் வந்து பார்க்கும் போது, குழந்தையை காணவில்லை; அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார், முகமது ரபி வீட்டில் பணியாற்றிய மலர் என்ற பெண்ணையும், அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சென்னையில் கடத்தப்பட்ட தமன்னா, மணிராஜ் ஆகியோர் சில தினங்களில் கிடைத்து விட்டனர்.அவர்களை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களே இந்த குழந்தையையும் கடத்தியிருக்கலாம் என்ற அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ந்தாதிரிப்பேட்டையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத குழந்தை மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ரஃபி, 28, இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாய்ராபானு, 25; சுவீட் கடைகளுக்கு பகோடா தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு, ஷப்னம் பானு, 2, என்ற பெண்குழந்தையும், ஆரிப் பாட்சா என்ற ஒன்பது மாத குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, முகமது ரஃபி வெளியில் சென்றுவிட, சாய்ரா பானுவும் கடைகளுக்கு பகோடா வினியோகிக்கச் சென்றார்.
இரவு 8 மணிக்கு, ஒன்பது மாத குழந்தையான ஆரிப் தூங்கிக் கொண்டிருந்தான். குழந்தை தூங்கியதால், வீட்டில் இருந்த பாட்டி பானு பீவி, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றார்.சிறிது நேரம் கழித்து வீட்டில் வந்து பார்க்கும் போது, குழந்தையை காணவில்லை; அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார், முகமது ரபி வீட்டில் பணியாற்றிய மலர் என்ற பெண்ணையும், அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சென்னையில் கடத்தப்பட்ட தமன்னா, மணிராஜ் ஆகியோர் சில தினங்களில் கிடைத்து விட்டனர்.அவர்களை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களே இந்த குழந்தையையும் கடத்தியிருக்கலாம் என்ற அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment