Tuesday, April 26, 2011

இலங்கையில் சீனா உதவியுடன் விமான நிலையம்!

சீனா நிதியுதவி செய்துள்ள, இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலைய கட்டுமானப் பணிகள், அம்பந்தோட்டையில் நேற்று துவங்கின.



இலங்கையின் தென்பகுதி மாவட்டமான அம்பந்தோட்டையில், மட்டாலா என்ற இடத்தில், 2,000 ஏக்கர் பரப்பளவு நிலம், இரண்டாவது சர்வதேச விமான நிலைய கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டது.கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பரில், விமான நிலையத்தின் ’பயணிகள் முனைய’ கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. இக்கட்டுமானப் பணிகளுக்கு சீனா நிதியுதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும், 2012ஆம் ஆண்டு முதல், இவ்விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment