Wednesday, April 20, 2011

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து தேர்தல் கமிஷன் அலுவலர் மரணம்!

ஓடும் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த தமிழக தேர்தல் கமிஷனின் சார்பு செயலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கோவையைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 45). இவர், சென்னை வில்லிவாக்கம் வைகை தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தலைமைச் செயலகத்தில், தமிழக தேர்தல் கமிஷன் துறையில், சார்பு செயலராக வேலை பார்த்து வந்தார்.
சென்ற ஞாயிறு அன்று, குமரவேல் நண்பர் வீட்டிற்கு செல்ல மின்சார ரயிலில் பயணம் செய்தார். பட்டரைவாக்கம் ரயில் நலையம் அருகே சென்ற போது, குமரவேல் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமரவேல் காலமானார்.
தகவல் அறிந்தவுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா மற்றும் தேர்தல் துறை சார்ந்த அதிகாரிகள் நேற்று (திங்கள் அன்று) அரசு பொது மருத்துவமனைக்கு வந்து, குமரவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நன்றி : இந்நேரம் .

No comments:

Post a Comment