Tuesday, March 22, 2011

திருக்குர்ஆன் பிரதியை எரித்த வெறிப்பிடித்த அமெரிக்க கிறிஸ்தவ போதகர்

 

photo_1300683495959-1-0
வாஷிங்டன்:அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் டோவ் அவுட்ரீ செண்டர் இவான்செலிகல் சர்ச்சின் உறுப்பினரான ஸேப் என்பவன் புனித திருக்குர்ஆனுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதன் பிரதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை எரித்துள்ளான்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்று இரட்டைத் தாக்குதல் நினைவு தினத்தில் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக இதே டோவ் அவுட்ரீச் செண்டரின் உறுப்பினரான டெர்ரி ஜோன்ஸ் அறிவித்தது உலக முழுவதும் வாழும் முஸ்லிம்கள் மத்தியி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் டெர்ரி ஜோன்ஸின் விஷத்தை உமிழும் கருத்திற்கெதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பெண்டகனின் உயர் அதிகாரி ஆகியோர் தலையிட்டு டெர்ரி ஜோன்ஸிற்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து அம்முயற்சியை கைவிட்டான் டெர்ரி ஜோன்ஸ்.இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்குர்ஆன் பிரதியை எரித்ததாக ஸேப் அறிவித்துள்ளான்.

No comments:

Post a Comment