Friday, April 1, 2011

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லகாலம் பொறந்திருக்கு

நீண்ட நாட்களுக்கு முன் நக்கீரனில் படித்த ஞாபகம். சர்க்கரை நோய்க்கு மருந்து கிடைப்பதாகவும் தற்பொழுது நமதூரில் பலபேர் சென்று மருத்து வாங்கி சாப்பிட்டு நலமாக இருப்பதாகவும் கேள்விபட்டேன். நமதூர் பைத்துல்மால் சார்பாகவும் சர்க்கரர மருத்து  கொடுக்கும்  அம்மருத்துவரை  அழைத்து வந்து ஐம்பது நபருக்கு மருந்து கொடுத்திருகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு எளிய இந்த இயற்கை மூலிகை மருந்து  சதீஸ்கர் மாநிலம் - துர்க் என்ற ஊரில் கிடைக்கிறது.

சர்க்கரை நோயினால் அவஸ்தைப்படும் அதிரை சகோதர, சகோதரிகளுக்கு ஒரு நல்ல செய்தி இங்கே போய் வைத்தியம் பார்த்தவர்கள் நலமாக இருப்பதாக சொன்னார்கள்.

சதீஸ்கர் மாநிலம் - துர்க் சென்று அடைத்தவுடன் மருந்து கொடுக்கும் ஜும்மா மசூதி சென்று முன் பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ளவேண்டும்.

காலை எழுந்த உடன் பல் துலக்கி, (பேஸ்ட் போட்டு பல் துலக்கக்கூடாது ) குளித்து முடித்து, வெறும் வயற்றில் தண்ணீர் கூட குடிக்காமல் காலை7 மணியளவில் மசூதிக்கு சென்று அமர்துவிட வேண்டும்.

முன்பதிவு நம்பர் படி அழைத்து உள்ளங்கை அளவிற்கு மருந்து தருவார்கள். அதனை ஒரு பெரிய டம்ளரில் கொட்டியபின் அதில் பாலை ஊற்றி மருந்து தீரும் வரை குடிக்கச் செய்கிறார்கள் குடித்த பின் ஒரு வாய் தண்ணீர் கொடுத்து உட்கார வைக்கிறார்கள்.

கூறும் அறிவுரைகள் : மருந்து சாப்பிட்டபின் தொடர்ந்து 4.00 மணி நேரத்திற்கு தண்ணீர் உணவு, புகைபிடித்தல் போன்றவை கண்டிப்பாக எடுத்துகொள்ளக்கூடாது. 4.00 மணி நேரம் கழித்த பின் நீங்கள் ஒதுக்கி வைத்த சாப்பாடு அனைத்தும் வயறு நிறைய சாப்பிடவேண்டும் .

பத்தியம்:

உணவில் புளி, கத்தரிக்காய், மாங்காய் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு சேர்த்துக் கொள்ள கூடாது.

மருந்து குடித்த பின் ஏற்படும் உமிழ்நீர் ஓமட்டலுடன் கூடிய உமிழ்நீர் ஆகியவற்றை கண்டிப்பாக துப்பக் கூடாது. இருமல் ஏற்பட்டு அதனால் வரும் சளியை துப்பலாம்.

வீட்டிற்கு சென்ற பின் சர்க்கரை அளவு உயர்வு தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் நீங்கள் பயன்படுத்தி வந்த சர்க்கரை மாத்திரையை உட்கொண்டு அதன் பின் சுத்தமாக சர்க்கரை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

30 நாட்களுக்கு பிறகு சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ளவும் அதில் சர்க்கரை அளவு நார்மலுக்கு வந்திருப்பதை காண்பீர்கள்.

இன்சுலின் பயன்படுத்துபவர்கள் சூரண மருந்தை இரண்டு நாட்களுக்கு சாப்பிடவேண்டும்

மருத்துவத்துக்காக சதீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் செல்பவர்கள் ஹிந்தி தெரிந்தவர்களுடன் சென்றால் மிகவும் நலம்.

இச்செய்தியின் நம்கத்தன்மையை உறுதி செய்யவேண்டியது அவசியம். இந்த மருத்துவம் பற்றி யாராவது கேள்வி பட்டால் இங்கு உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்.

ஆங்கில மருத்துவத்தின் ராசாயன கலவை மருந்துக்களால் குணப்படுத்த முடியாத நோய்களை மூலிகை மருந்துக்கள் குணப்படுத்தியுள்ளதை செய்தி ஊடகங்களில் நாம் காணமுடிகிறது. சிலர் வியாபார நோக்கத்தின் பெயரில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி வந்து முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால், இயற்கை மூலிகை மருத்துவத்தை மக்கள் "போலி" என்ற மனநிலையிலேயே இன்னும் உள்ளார்கள்.

தீராத நோய்களுக்கு இவ்வுலகில் மருத்துக்கள் உள்ளது. மக்கள் மனது மாறவேண்டும். இயற்கை மருத்துவத்தில் இது அதிகம் சாத்தியம். சகோதரர் ஜாஹிர் அவர்கள் எழுதியது போல் மருத்துவ சேமிப்பு திட்டம் தீட்டி செயல்படுத்தி நோய்களுக்கு செலவழிக்க நினைத்தாலும் நம் வருமானம் போதாது இந்த நவீண மருத்துவ வியாபாரயுகத்தில்.

சர்க்கரை நோய் தொடர்பான மேலும் நல்ல பதிவுகளை அதிரைநிருபரில் பதியுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்.

--அபு இஸ்மாயில்
 
நன்றி : அதிரை நிருபர்

No comments:

Post a Comment