Tuesday, March 8, 2011

நடிகர் விஜய்க்கு மூன்று தொகுதிகள் அதிமுக தருகிறது

நடிகர் விஜய்யின் இரசிகர் அமைப்பான "மக்கள் இயக்கம்" சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கும் என்று சொல்லப்பட்டது. விஜய்யின் தந்தை எஸ். ஏ சந்திர சேகர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இருமுறை சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இருந்து 3 தொகுதிகள் விஜய் இயக்கத்துக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவதை அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.  
ஜெயலலிதாவும் விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு தொகுதி ஒதுக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் விஜய் போட்டியிட விரும்பவில்லை. மாறாக,  எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன.

No comments:

Post a Comment