கடலூர்: பல்வேறு அதிரடி திட்டங்களின் மூலம் கடலூரை குட்டி குஜராத்தாக மாற்றும் திட்டம் இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப் போகும் பா.ஜ.க வேட்பாளர் குணசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது கடலூர் நகரத்தின் மையப்பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைமுகத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
மேலும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க கடற்கரையோரமாக புன்னைமரங்கள் வளர்க்கப்படும். மேலும், கடலரிப்பை தடுக்கும் வகையில் கருங்கற்களும் கொட்டப்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ள பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்கப்படும். சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபடுதலை கண்காணித்து கட்டுப்படுத்தப்படும். சாலை விதிகளை நெறிப்படுத்தி விபத்தில்லா நகரமாக மாற்றுவேன்.
கடலூர் ஆல்பேட்டையில் இருந்து அன்னவல்லி வரை பைபாஸ் சாலை அமைக்க பாடுபடுவேன். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி கடலூர் தொகுதியில் தடையில்லா மின்சாரம், குடிநீர், சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதியை ஏற்படுத்தி கடலூர் தொகுதியை குட்டி குஜராத் ஆக மாற்றுவேன். தமிழக அரசு கொண்டு வந்துள்ள மருத்துவக்கல்லூரியை அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.
கடலூர் மக்களின் முக்கிய பிரச்ச்னையான குடிநீர் பற்றாக்குறையை போக்க தொழில்நுட்பத்துடன் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பா.ஜ.கட்சி வேட்பாளர் குணசேகரன் கூறியுள்ளார்.
நன்றி : இந்நேரம்.com
No comments:
Post a Comment